<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-7096896</id><updated>2011-04-21T12:56:51.649-05:00</updated><title type='text'>அலைஞனின் அலைகள்: புனைவு</title><subtitle type='html'>பட்டதைப் பகுத்தலும் &lt;br&gt;
பகுத்ததிற் படைத்தலும்</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://punaivu.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7096896/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://punaivu.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>-/பெயரிலி.</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='26' src='http://4.bp.blogspot.com/_OBFBfYawg8g/S8-wCagZnxI/AAAAAAAACCI/5ty9S8m_Ooc/S220/Abg_peyaB.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>29</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-7096896.post-112992740293338291</id><published>2005-10-21T15:33:00.000-05:00</published><updated>2005-10-21T15:52:06.086-05:00</updated><title type='text'>பலகணி</title><content type='html'>&lt;a href="http://photos1.blogger.com/img/188/1529/1024/sattam.jpg"&gt;&lt;img style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 320px; CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/img/188/1529/1024/sattam.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;அந்த சம்பந்தப்பட்ட மீசைமழிதாடி அதிகாரியைச் சந்தித்தபோது, கதிரைக்கு வெளியே மேசையைத் தாண்டிஉருவம் வரமுடியாதவளவிலே இருந்தார். அவர் தலைக்குப் பின்னாலே உயரத்திலே சூரியவெளிச்சத்தினை மங்கமுறித்து உள்ளேயனுப்புவிதமாக ஒரு முப்பரிமாணப்பலகணியும் படுதாவும். என்ன என்று கண்ணாலேகூட அவர் கேட்கவில்லை. கருங்கல்லுக்கு அங்கம் சேர்த்த்திறுக்கியதுபோன்ற ஆள். தன்னிடம் வேறெதற்கு வருவார்களென்ற பழக்கப்பட்ட சிந்தனையோ அல்லது வந்தவர் தனக்கு வேண்டியதைக் கேட்பார்தானே என்ற எதிர்பார்ப்போ இருந்திருக்கலாமென நினைத்தேன். என் பங்கீட்டட்டையை நீட்டினேன். எடுத்தவர் பங்கீட்டு அட்டையின் இன்றைய நிறத்தினைக் கவனித்தார்; பின்னால், கதியைக்கு வெளியே உருவத்தினைக் கொண்டுவந்து அதே நிறத்திலே இருந்த தடிப்பமான பதிவுப்புத்தகத்தினை தலைக்குமேலிருந்த அலுமாரியிலிருந்து எடுத்து மேசையிலே வைத்தார். இந்தக்கணக்குகளையெல்லாம் ஒரு கணணியிலே பதிவு செய்து வைத்தால், அரசுக்கும் அலுவலகர்களுக்கும் எத்துணை பயனோ இருக்கக்கூடுமேயென்று தோன்றியது. இதுவரை காலமும் எதுவிதமான குளறுபடியும் பிக்கல் பிடுங்கலும் இந்தப் பங்கீடு காரணமாக எனக்கு ஏற்பட்டிருக்கவில்லையென்றாலுங்கூட, இந்த எண்ணம் தோன்றியது; சிலவேளை, கொடுத்த தொகைக்கு வரைந்துகொண்டு சிக்கனமாய்ச் செயற்பட்டதால் பிக்கல் ஏற்படாதிருந்திருக்குமோ? இருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;அட்டையிலே என் பெயரைப் பார்த்தபின்னால், பெயரின் தொடக்க எழுத்தினைக் குறிக்கும் பக்கத்தினை திறந்தார். "சென்ற மாதத்திலே மிஞ்சியிருந்த நிலுவையை இந்த மாதத்துக்குச் சேர்த்துக்கொள்ளப்போகின்றீர்களா அல்லது வேண்டுவார் வேறு யாருக்காவது கடத்தி விட்டு, ஈட்டுத்தொகை பெறப்போகின்றீர்களா?" எனக் கேட்டார். அந்த ஆண்டு புனைவு தொடர்பாக அதிகம் செயற்படமுடியவில்லை. இனியும் புனையலாமென்ற நம்பிக்கையுமிருக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;"கடத்தப்போகின்றேன்"&lt;br /&gt;&lt;br /&gt;குறித்துக்கொண்டார். அலுவலகமூடாகத்தான் கடத்தமுடியும். சொந்தமாக அலுவலகத்துக்கு வெளியே விற்பனை செய்ய முடியாதென்பதல்ல, ஆனால், கூடாது. இந்த "கூடாது" இனையும் மீறி வெளியே அறாவிலைக்கு விற்றும் விகல்பமும் வில்லங்கமுமில்லாமலிருக்கின்றவர்களை அறிவேன். 'எனக்குத் துணிவில்லை. அவ்வளவே' என்று சொல்லி இந்தக்கிளைக்கதை வளர்ச்சியைச் சொற்சிக்கனம் கருதி வெட்டிவிடலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;"உங்கள் அனுபவம் இருபதாண்டுகளாக இந்த மாதத்துடன் ஆகின்றது. ஆகையால், தகைமைப்படியேற்றத்துடன் &lt;em&gt;இன்னொரு&lt;/em&gt; நிறத்தினை உங்களுக்குத் தரவேண்டும்"&lt;br /&gt;&lt;br /&gt;[&lt;em&gt;தாருங்கள் ஐயா. இப்போது கிடைப்பதிற் பாதியையே அடுத்த மாதம் உங்களிடம் மீள விற்கும் நான் இன்னொரு நிறப்பங்கீட்டினைப் பயன்படுத்துவேனா என்பது தெரியாதபோதும், மாத முடிவுகளிலே விற்கும் தொகையை அதிகரிக்கலாம் அல்லவா? அதனால், தாருங்கள் ஐயா&lt;/em&gt;] - எண்ணிக்கொள்ளலாம். சொல்லக்கூடாது. அரசின் ஆணைநிறைவேற்று அதிகாரியினை அவமதிப்பதின்மூலம் அரசினை அவமதிக்கும் குற்றச்சாட்டுக்கு உள்ளாகிவிடுவேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏற்கனவே &lt;em&gt;இன்னொரு&lt;/em&gt; சாயம் தோய்த்து வைக்கப்பட்ட வெற்று அட்டையை எடுத்து என் பெயரை ஒவ்வொன்று ஒவ்வொன்றாக, தேய்ந்த அரசுத்தட்டச்சுப்பொறியிலே அடித்தெடுத்தார். கையாலேயே எழுதியிருக்கலாமென்றபோதுங்கூட, அலுவலகரின் கையெழுத்திலே அவரின் தனியாள்_ஆளுமை கடத்துப்பட்டு விடுமோவென அரசு கவலைகொண்டிருக்கக்கூடும். சாயங்கள் தோய்க்கமுன்னால், பங்கீட்டட்டை சுயமாக என்ன நிறத்திலே இருந்ததென்று நான் கேட்கவில்லை; கேட்கத் தோன்றாததற்கு முன் பத்தாண்டுகளாக இவரினை விடவுங்கூடச் சிரித்த முகத்தோடும் பருத்த உருவத்தோடும் இருந்த அதிகாரிகளைக் கேட்டு, அவர்கள் பண்போடு சொல்ல மறுத்துவிட்டதுதான் காரணமென்பேன்.&lt;br /&gt;&lt;br /&gt;வாங்கிக்கொண்ட அட்டையை எடுத்துக்கொண்டு முப்பரிமாணப்பலகணி அறைப்படுதாவின் பார்வைக்கு வெளியே வந்து விழுந்த பின்னாலேதான் சூரிய வெளிச்சத்திலே இம்மாதத்துக்கும் இனி வரும் ஐந்தாண்டுகளுக்குமான பங்கீட்டுவீதங்களையும் தொகைகளையையும் பார்த்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;முன்னைய அட்டைகளின் அமைதலின் பிரகாரமே, உணர்வுகள் குறித்தும் உரையாடல் குறித்தும் எதுவிதமான குறிப்பேற்றமுமில்லை. அவற்றில் தொடர்ச்சியைப் பேணலாமெனக் கருதிக்கொண்டேன். நிகழ்வுகளுக்கான தொகை போன மாதத்துக்குப் பத்து வீதம் அதிகரித்திருந்தது; புனைவுக்கான வீதம் போன மாதத்துக்கு இருபத்தைந்துவீதம் அதிகரித்திருந்தது. இரண்டினையும் கலக்கக்கூடிய நிகழ்வு/புனைவு விகிதவெண்ணின் உயர்பட்ச எல்லை கணிசமாகக் குறைந்திருந்தது. இதனால், புனைகதைகள் எழுதாத எனக்கேதும் பெரிய பாதிப்பிருக்கப்போவதில்லையென்று நினைத்தேன். ஆக, நிகழ்வுகளைமட்டும் நிகழ்வாக எழுதிக்கொண்டிருக்கும் ஒரு படைப்பாளிக்கு - நிகழ்வுகளை வெறும் நிகழ்வுகளாக எழுதுகின்றவனைப் படைப்பாளியெனச் சொல்லமுடியாது என்ற வாதமும் இருந்ததால் நிகழ்வெழுதி என்று இனிமேல் சொல்கிறேன் - அதாவது, நிகழ்வெழுதிக்கு எந்தச் சிக்கலும் இருக்கப்போவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், இவ்வகையான பங்கீட்டுக்கலவையை அரசு முற்போட்டிருக்க ஒரு பின்புலமிருக்கின்றது. அதற்கான அண்மைக்காலத்திலே நிகழ்வுகளைப் புனைவென்றும் புனைவுகளை நிகழ்வென்றும் பிணித்தும் பிசைந்தும் இடைவரைகோட்டின் அடையாளத்தினைத் தேய்த்துக்கொண்டு வந்த நிகழ்வுகளையோ படைப்புகளையோ அரசின் பங்கீட்டலுவலகம் வகை பிரிக்கமுடியாமற் திணறியதும் ஒரு காரணம். இதற்கு பங்கீட்டு அட்டை வழங்கு அதிகாரிகள் போலல்லாது, வகைபிரிப்பதற்கான அதிகாரிகளின் திறமை, அனுபவக்குறைபாடு காரணமென்று அரசுசார்பிலே பேசவல்ல பேச்சாளர்கள் தம் பேச்சிலே சொன்னாலுங்கூட, அதற்கப்பாலும் அதை விட முக்கிய காரணங்கள் இருக்கலாமென வல்லுநர்கள் தெரிவித்துக்கொண்டிருந்தார்கள்; அடிப்படைக்கல்வியையும் அனுபவ ஆண்டுக்கணக்கினையும் வைத்துப் பங்கீட்டு அட்டையை வழங்கிவிடுவது மிகவும் இலகுவான ஒன்றும் ஒன்றும் இரண்டு என்பதுமாதிரியான செயல்; ஆனால், நிகழ்வினையும் புனைவினையும் பிரிப்பது அப்படியான தெளிவுத்தன்மையுள்ள இலகுவான செயலில்லை. இருக்கும் பழைய ஆவணங்களின் அடிப்படையினை வைத்தும் புரிதலினை வைத்தும்மட்டுமே செயற்படவேண்டிய அவலம் இந்த அதிகாரிகளுக்கிருந்தது. ஆவணப்படுத்தப்படாத நிகழ்வுகள் புனைவுகளாகவும் வெறும் புனைவுகள் ஆவணப்படுத்தப்பட்ட நிகழ்வுகளின் சேர்க்கைப்படுத்தலென்றும் சட்டத்தினதும் நுட்பத்தினதும் ஓட்டைகளை வைத்துக்கொண்டு நிகழ்வெழுதிகள், புனைவெழுதிகள், கலந்தெழுதிகளினாலே சவாலுக்குட்படுத்தப்பட்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிலையிலேதான் அரசின் நிர்வாகிகள் இப்படியான புனைவுகளின் மேலெல்லையும் நிகழ்வுகளின் கீழெல்லையும் மீறமுடியாதபடி, தனிப்புனைவெழுதலுக்கும் தனிநிகழ்வெழுதலுக்கும் ஊக்கமளிக்கும்வண்ணம் (&lt;em&gt;அதாவது, மாறுபடக் கலந்தெழுதிப் பிழைப்பவர்களை அழுத்தித் தள்ளும்வண்ணம்&lt;/em&gt;) இப்படியாக புனைவுக்கான தொகையை நிகழ்வுக்கான தொகையைவிட மிக அதிகமாகவும் அதேநேரத்திலே நிகழ்வு/புனைவு விகிதவெண்ணின் உயர்பட்ச எல்லையைக் குறைத்தும் விட்டிருந்ததென்று எனக்குத் தோன்றியது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="center"&gt;***** ***** ***** ***** *****&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இது நிகழ்ந்து ஓராண்டுக்குப் பின்னால், ஒரு மாதத்திலே எனது மாதப்பங்கீட்டினைப் பெற்று வர அலுவலகத்துக்குப் போனால், படுதாப்பலகணிக்குக்கீழே கதிரைக்குள்ளே வேறொரு மனிதர் தொலைந்திருந்தார். முன்னர் தொலைந்திருந்தவர் எங்கே போய்த்தொலைந்தாரென்று அரசு அதிகாரி-பயனாளி என்ற உறவுமுறையிலே நான் இருபதாண்டு அனுபவத்தின் பின்னாலே கேட்பது சட்டரீதியான குற்றமென்று அறிவேன். ஆனால், எனக்குச் சொல்லாமல், அதிகாரியை மாற்றிவிட்டு அந்த அதிகாரியைப் பற்றி ஓராண்டு அறிந்த மனிதனாக எந்தக்கேள்வியையும் எழுப்பமுடியாத மனிதனாக என்னையாக்கிய அரசினை எப்படியாவது பழி வாங்கிவிடவேண்டுமென்று தோன்றியது. இந்த மாதமாவது, சென்ற மாதத்திலே தேங்கிய என் பங்கீட்டெஞ்சலையும் இந்த மாதத்துக்கான என் முழுப்பங்கீட்டினையும் பயன்படுத்தி விடுவதெனத் தீர்மானித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் விரும்பியபடியே கேட்டு புதிய அதிகாரியினை அட்டைக்காரரின் வழமைக்குமாற்றான செயல்குறித்துக் கண்புருவம் சுருக்கிப் பார்க்க வைத்து, பங்கீட்டினைப் பெற்று, சூரிய வெளிச்சத்துக்கு வெளியே வந்தபோது மிக உற்சாகமாகச் சீட்டியடித்துச் சிரித்துக் கடந்த தாடிமழிமீசை ஆளைத் திரும்பிப்பார்த்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்நேரத்திலே என் கைகளை இரு அரசுபங்கீட்டலுவலகக்கண்காணிப்பதிகாரிகள் வந்து பிடித்தனர். வாசலிலே கண்ட ஆளைப் பார்த்ததுவரை எழுதியபோது, எனது அந்த மாதப் பங்கீடு அத்தனையையும் சட்டப்படி செலவழித்து முடித்திருந்தேன். அதற்கப்பால், இருபத்தோராண்டு அனுபவம் வாய்ந்த எனக்கு அரசுப்பங்கீட்டுச்சட்டத்தினை மீறி ஒரு வாக்கியம் அவர்களுக்குச் சொல்லத் துணிவு வந்திருந்தது:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;"நிகழ்வு புனைவுகளை அரசுப்பங்கீட்டுச்சட்டங்களை மீறி எழுதுகின்றவனில்லை நான்."&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;கரு: '05, செப். 18, ஞாயிறு.&lt;br /&gt;கதை: '05, ஒக். 21, வெள்ளி. 15:53 கிநிநே.&lt;/em&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7096896-112992740293338291?l=punaivu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://punaivu.blogspot.com/feeds/112992740293338291/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7096896&amp;postID=112992740293338291' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7096896/posts/default/112992740293338291'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7096896/posts/default/112992740293338291'/><link rel='alternate' type='text/html' href='http://punaivu.blogspot.com/2005/10/blog-post.html' title='பலகணி'/><author><name>-/பெயரிலி.</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='26' src='http://4.bp.blogspot.com/_OBFBfYawg8g/S8-wCagZnxI/AAAAAAAACCI/5ty9S8m_Ooc/S220/Abg_peyaB.jpg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7096896.post-112642225734913089</id><published>2005-09-11T02:01:00.000-05:00</published><updated>2005-09-11T02:19:16.686-05:00</updated><title type='text'>குளியல்</title><content type='html'>&lt;a href="http://photos1.blogger.com/img/188/1529/400/kuliyal-1.jpg"&gt;&lt;img style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 320px; CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/img/188/1529/400/kuliyal.jpg" border="0" /&gt;&lt;/a&gt;தொழிலகத்திலிருந்து பதினைந்து இருபது நிமிடங்கள் மாலைவெயிற்கசகசப்பிலே நடக்கவேண்டும்; நடந்தான். பிறகு,.தொடர்வண்டியில் நெருக்கடிக்கேற்ப நின்றோ இருந்தோ முப்பத்தைந்து நிமிடங்கள் வரவேண்டும். இறங்குநிலையத்திலிருந்து, வீட்டுக்கு, பத்து நிமிட நடை; நடந்து வந்து, கடிதங்களைப் பெட்டியிலே பொறுக்கிக்கொண்டு கதவைத் திறந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;குழந்தை கெக்கட்டமிட்டுக்கொண்டு கையை விரித்துக்கொண்டு ஓடிவந்தது; தூக்கிக்கொண்டான். தொலைக்காட்சியில் குழந்தைகளுக்கான நிகழ்ச்சி.நிகழ்ச்சியின் பின்புலம் தொடர்பான மூன்று தகவல்களை மனைவியிடம் தெரிவித்தான்:- செந்நாய்க்குக் குரல் கொடுப்பது இன்னார்; இத்தொடர்நிகழ்ச்சி தயாரிக்கத் தொடங்கின ஆண்டு &amp; முடிந்த ஆண்டு; இத்தொடரின் சிறந்த அங்கங்கள். குழந்தை தாயிடம் மீளத் தாவியது. தோட்பையை ஓரமாகப் போட்டான்; முகப்பிலேயே முழுவதும் தெரியும் கடன், எரிபொருட்கணக்குவழக்குகளுடனான உப்புச்சப்பறுகடிதங்களைப் பிரிக்காமலே மனைவியிடம் நீட்டினான்; இடது இடுப்புக்குக் குழந்தையை மாற்றிக்கொண்டு, 'இதுக்கெல்லாம் நான்' என்பது வெளிப்பட்ட தலையசைப்புடன் வலக்கையால் வாங்கிக்கொண்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;மீதியாய்க் கைக்கிடந்த இன்னோரன்ன விளம்பரங்களைக் கட்டிலிலே பரப்பி வாசித்துக்கொண்டு உடையை மாற்றினான்; ஊரிலே விபத்துகளுக்கான சட்டத்தரணியின் தொழில்மேசை, விளம்பரத்திலே வேறொரு கோணத்திலே படமாகத் தரப்பட்டிருந்தால், எடுப்பாயிருந்திருக்கலாமெனத் தோன்றியது. விளம்பரங்களைக் கசக்கிக் காலால் அழுத்தித் திறந்த குப்பைக்கூடைக்குள்ளே போட்டபோது, உள்ளே கிடந்த நேற்றைய விளம்பரமொன்றிலே வாசிக்காமல் விட்ட ஒரு குறிப்பு கன்ணிலே பட்டது; 'பரீஸுக்கும் பிரெஸில்ஸுக்கும் குறிப்பிட்ட முகவரூடாக விமானச்சீட்டுக்கு ஒரே தொகைதானெனத் தெரிந்துகொண்டான். தான் கழற்றித் தோளிலே தொங்கிய உடுப்புகளை ஒரு முறை உதறிக் கொண்டு இரண்டாக மடித்து, அலுமாரிக்குள்ளே தொங்கப்போட்டான். சுவரலுமாரிக்கதவுச்சக்கரங்களில் ஒன்று உருள மறுத்தது. தூக்கி வைத்தான்; நிமிர்ந்தபின்னும், உள்ளங்கைகளிலே சமாந்திரக்கோடுகளாகப் பாரம் உறுத்தியது. இந்த உறுத்தும் உணர்வுக்கு அறிவியல்ரீதியான காரணம்...&lt;br /&gt;&lt;br /&gt;குளியலறைக்குப் போகும் வழியிலே செல்பேசியை மூடியபின்னான கடந்த இருபது நிமிடங்களிலான உலகநடப்புமாற்றங்களைப் படுக்கையறைக்குள்ளேயிருந்த கணணியூடாக, சில நிமிடங்கள் உந்தலோடு அறிந்துகொண்டான்; தெற்காசியாவிலே ஒரு சின்ன நிலநடுக்கம் - 6.7 ரிட்சர் அளவு; கௌதமாலாவில்....&lt;br /&gt;&lt;br /&gt;திருப்தி; நிமிர்ந்து, குளிக்கப்போவதை உரத்துச் சொல்ல, குழந்தை கெக்கட்டமிட்டுச் சிரித்தபடி ஓடிவந்தது. அதன் கைகளும் கால்களும் ஓடுகையிலே எப்படியாக சமநிலையைப் பேண முயல்கின்றதென்பதை அவதானித்தபடி, தூக்கிக்கொண்டான். குழந்தை தன் முகத்தை அவன் முகத்தோடு தேய்த்த அடுத்த கணத்திலேயே அவன் முகத்தினைத் தள்ளிவிட்டு, அம்மா இருக்கும் திசையைக் காட்டி, "ங்கா" என்றது; தாயைக் கண்டு தாவியது; அவர்கள் அந்தப்புறம்போக, இவன் குளியலறைக்குள்ளே போய்க் கதவை மூடிக்கொண்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;குளியலறை முகம்பார்க்கும்கண்ணாடிக்குள்ளே மாலைவெயிலிலே அவன் முகம் கொஞ்சம் சோர்ந்திருந்தாலும் எடுப்பாகத் தோன்றியதாகப் பட்டது; இன்றைக்குமட்டும் தொழில்நிலையத்தலைமைக்குத் தெரியாத ஆறு... இல்லை... ஏழு விடயங்களைச் சுட்டிக் காட்டப் பாராட்டு - குறிப்பாக, மதியத்தின் வாரக்கூட்டத்திலே தொய்கணங்களை உயிர்ப்பூட்ட ஈரக்கையை உதறச் சிதறுகிற நீர்போல, தொழில்நுட்பம் சாரா உலகத்துச் சின்னத்தகவல்கள்:- 'நெருப்புக்கோழி மெய்யாகவுமே தலையை மணலுக்குள்ளே நுழைத்துகொள்கின்றதா என்பது குறித்தது; மழைநீர்த்துளிக்கு மூன்று வடிவங்கள் இருப்பதும் குளியலறைக்குழாயிலே சொட்டும் நீர்த்துளியின் வடிவிலே மழைத்துளியிருக்காதென்பதும் குறித்தது.'&lt;br /&gt;&lt;br /&gt;இயலுமானவரை உதடுகளை வெளித்தள்ளி இளித்துப் பார்த்தபடி, பற்களை -வத்தகைப்பழத்திலே நல்லது கெட்டது பார்க்கத் தட்டுவதுபோல- சுண்டிவிட்டான்; வாயைத் திறக்க, கண்ணாடியிலே ஆவிபடர்ந்து மூக்குக்கு நாற்றம் தெறித்தது. பற்களைத் தீட்டிக்கொண்டிருக்கும்போது, ப்ரோக்கலி, வத்தாளங்கிழங்கு ஆகியவற்றிலேயிருக்கும் பொட்டாசியம், இரும்புச்சத்துகளின் வீதங்கள் தனக்கு ஞாபகமிருப்பது சரியா என்பது குறித்து தலைக்குள்ளே கணச்சந்தேகம் ஓடியது; "என் தரவுத்தளம் தளும்பாதது; பாபா வெம்பாவை நான் முதலிலே கேட்ட நாள்... நாளென்ன நாள்.... நேரம்.. சரியாக, ஆயிரத்துத்தொள்ளாயிரத்து...."&lt;br /&gt;&lt;br /&gt;குளியற்றொட்டிக்குள்ளே நீரை, சுடுநீரும் தண்ணீரும் அளவாகக் கலக்கும்வரை சரிபார்த்துத் திறந்துவிட்டுக்கொண்டு இறங்கித் தலையைப் பிடித்தான். நீர் கரைத்துக்கொண்டோடியது. கசகசக்காத மாலைகளிலே குளிக்கத் தேவையில்லைத்தான்; ஆனாலும், பழக்கம் விடுவதில்லை; வேலைமுடிந்துவந்து குளிப்பதினால், தொழிலகம் முற்றாகத் தொடர்பறுந்து வீடு மட்டுமே காலைக்குளிப்புவரைக்கும் என்றாகிறதாக உணர்வு.&lt;br /&gt;&lt;br /&gt;சீறி மூர்க்கத்துடன் விராண்டப்போகும் பூனைபோலக் கைவிரல்களை மடித்து, உள்ளங்கைகள் முகத்தைக் காணக் குனிந்து பார்த்தான்; நீர் விரல்களிலே சொட்டியது; ஆ,,க்,,, ஹா!............ வலக்கைச்சின்னிவிரல் நகவிடுக்கில் ஒரு கருந்தார்ப்பொட்டு; பதின்மவயதுநடிகையின் மார்பக-இடுப்பு-பின்புற அளவுகள் குறித்தது. தேய்த்தான். போவதாகத் தெரியவில்லை; சவர்க்காரமும் ... ம்ஹூம்! போக்கவில்லை; XX-YY-ZZ இளித்தபடி இன்னும் கருமையாக நுரைக்குள்ளாக மின்னியது. குளியற்றொட்டி விளிம்புகள் தேய்க்கும் வன்பஞ்சை எடுத்துத் தேய்த்தான்; சவர்க்காரநுரையைத் தள்ளிவிட்டு, நீருக்கு வெளியே பிடித்து வாயால் சின்னிவிரலை ஊதி உலர்த்திய பின்னால் - ஈரப்பதன் குறைந்த காற்று, இலகுவிலே உலர்த்துமாம் - வன்பஞ்சாலே அழுத்தித் தேய்த்தான். எரிந்தது; நகமும் விரலும் சேருமிடத்திலே தோல் கழன்று எரிந்தது; கசிவூடக, இரத்தம் மெல்லியதாகப் படர, நடிகை மறைந்துபோனாள்.&lt;br /&gt;&lt;br /&gt;வெற்றி, கொட்டிய வம்பயர் வேட்டைப்பல்லிரத்தமாய்ச் சொட்ட, விரலை மீண்டும் மேலிருந்து கொட்டும் நீருக்குள்ளே எடுக்கையிலேதான் அவதானித்தான்; ஐரோப்பாவின் மிகச்சிறியநாட்டின் நிலச்சமவுரக்கோடுகள் அவனுடைய வலதுகையின் நடுவிரல்மொழிக்கும் மணிக்கட்டுக்குமிடையே ஏழிடங்களில் மையங்கொண்டெழுந்த வட்டங்களாக, நீள்வளையங்களாக, வளைகோடுகளாக, மண்ணிறத்தேமல் பூசிப் படர்ந்திருந்தன. ஹா!!! கண் விரிய அடித்தொண்டையிலிருந்து அலறல் கிளம்பிக் கேவலாக வெளிவர, திரும்பக் கையை வெளியேயிழுத்து வன்பஞ்சாலே தேய்த்தான்; நாட்டுவரைபடம் அங்குமிங்கும் சிதம்பினாலுங்கூட, அழிவதாகக் காணோம். குளியலறைக்குழாயுலோகத்திலே பின்னங்கையைத் தேய்த்துப் பார்க்கவும் கொஞ்சந்தான் நாடு மறைந்தது. குளியலறைச்சுவரிலே பின்னங்கையை அடிக்கத் தொடங்கினான்; ஆரம்பத்திலே நடிகையின் இடையும் மார்பும் பின்புறமும் மறையக் கிழிந்தெழுந்த எரிச்சல், இப்போது தெரியவில்லை. வலக்கை உள்ளங்கையைப் பளிங்குச்சுவற்றிலே அழுத்திக்கொண்டு, குளியலறைச்சின்னவாளியை எடுத்து இடது கையாலே சேதமடைந்த வரைபடம்மீது அடித்துக் கொண்டிருந்தபோது, வலது முழங்கையிலே தென்னாபிரிக்க அரசிலே இருக்கின்ற இந்தியவழிவந்த அரசியல்வாதிகளின் பெயர்களும் முகங்களும் இருப்பது அவனுக்கு நீரடித்துக் கழுவப்பட்டுத் தெளிவாகத் தெரிந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு மணிநேரமாகியும் குளிக்கப்போனவன் வெளிவராததையிட்டுக் கவலைப்பட்ட மனைவி, பதற்றத்துடன் குளியலறைக் கதவைத் தன் பலம் கொண்டளவும் தட்டிக் களைத்துப்போய், உதவி தேடியபோது, குழந்தையும் கலவரமுற்று வீரிட்டு அழுதது; நகர்காவலரும் தீயணைப்புப்படையும் வந்து கதவை ஒரு சுத்தியலடியிலே உடைத்துத் திறந்தனர். குளியற்றொட்டியிலே குதம் கக்கிய மலமாய்க் குவிந்துகிடந்த சதையையும் தசையையும் தோலையும் எலும்பையும் அவர்கள் அள்ளிக் கொடுக்க, மனைவியின் வேண்டுகோளின் பேரிலே கொளுத்திச் சாம்பலாக ஒரு செம்பிலே மூடிக் கொடுத்தார்கள் இரண்டு நண்பர்கள். அவள் தொலைக்காட்சிப்பெட்டியையும் கணணியையும் அகப்பட்ட விலைக்கு விற்றுவிட்டுக் குழந்தையோடு வேற்றூருக்குத் தொழில் தேடிப்போனாள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;'05 செப்., 11 ஞாயி. 00:48 கிநிநே.&lt;/em&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7096896-112642225734913089?l=punaivu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://punaivu.blogspot.com/feeds/112642225734913089/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7096896&amp;postID=112642225734913089' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7096896/posts/default/112642225734913089'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7096896/posts/default/112642225734913089'/><link rel='alternate' type='text/html' href='http://punaivu.blogspot.com/2005/09/blog-post.html' title='குளியல்'/><author><name>-/பெயரிலி.</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='26' src='http://4.bp.blogspot.com/_OBFBfYawg8g/S8-wCagZnxI/AAAAAAAACCI/5ty9S8m_Ooc/S220/Abg_peyaB.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7096896.post-112016836177066551</id><published>2005-06-30T16:49:00.000-05:00</published><updated>2005-06-30T16:52:41.783-05:00</updated><title type='text'>திறப்புக்கோர்வை</title><content type='html'>&lt;img src="http://photos1.blogger.com/img/188/1529/0/keys1.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முன்கதை விரிவு I, II :- கடந்த இரண்டு வருடங்கள்&lt;br /&gt;---------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;I&lt;br /&gt;-&lt;br /&gt;சாவிக்கொத்து என்று எல்லோராலும் வீட்டிற் செல்லமாய்&lt;br /&gt;அழைக்கப்படும் திறப்புக்கோர்வையை வைத்துப் பராமரிப்பது&lt;br /&gt;எப்படிப்பட்ட பொறுப்பான காரியம் என்பதை அது&lt;br /&gt;கையிலகப்பட்ட ஆரம்பகாலங்களில் நான் அவ்வளவு&lt;br /&gt;அறிந்திருக்கவில்லை. வீட்டுமுன்வாயில் ஒற்றைச்சாவியாய்க்&lt;br /&gt;கிடைத்து, பிறகு அலுவலகவறைத் திறப்பு, மேசைச்சாவிகள்,&lt;br /&gt;வீட்டு அலுமாரிச்சாவி, துவிச்சக்கரவண்டிப்பூட்டுச்சாவி என்று&lt;br /&gt;நாளொரு சாவியும் பொழுதொரு திறப்பும் என்று வெவ்வேறு&lt;br /&gt;அளவுகளில் வளர்ந்து -முதல் குட்டி போட்டு முழு வாரம் ஆக&lt;br /&gt;முன்னாடி முழுதாய் எட்டுக்குட்டி போட்ட நாய்போல- ஒரு&lt;br /&gt;திறப்புக்கோர்வை இருந்தாற்றான் ஓரளவு சமாளிக்கலாம் என்ற&lt;br /&gt;நிலைமைக்கு ஆக்கிவிட்டது. அந்நேரத்திற்றான்,&lt;br /&gt;சொந்தநாட்டு பட்டினங்களின்&lt;br /&gt;தங்குவிடுதிப்பொறுப்பாளர்களும் குறுஞ்சிறுவர் பாடசாலை&lt;br /&gt;ஆசிரியைகளும் என்ன அவதி பட்டுத்தொலைந்திருப்பார்கள்,&lt;br /&gt;தொலைத்துக்கொண்டிருப்பார்கள் என்பது மனதிற்கு&lt;br /&gt;வெளிச்சமானது.&lt;br /&gt;&lt;br /&gt;சாவிகள், நண்டுக்குளுவன்களாக வளர்ந்த செய்கை எனக்கு&lt;br /&gt;வயதுபோனதை அடிக்கடி எடுத்துச்சொல்லும்&lt;br /&gt;அளவுச்சுட்டியாகிப் போனது. கடைசியில், என் அலுவல&lt;br /&gt;அலுமாரிச்சாவியினால் அரைமணிநேரம் முயன்றும் என்&lt;br /&gt;கைப்பெட்டியைத் திறக்கமுடியாதுபோய், பெட்டி செய்த&lt;br /&gt;கொரியர்களின் வம்சத்தை வாயாற் துவம்சம் செய்தது&lt;br /&gt;மனைவிக்குப் பொறாமல், எனக்கு வயது சரியாக&lt;br /&gt;முப்பத்துமூன்றான நாள் அன்றைக்கு, ஓர் தட்டைப் பச்சை&lt;br /&gt;இதயம் சங்கிலியிற் கொழுவிக்கொண்ட சாவிகள் கோர்ப்பி&lt;br /&gt;வாங்கித்தந்ததோடு விட்டுவிடவில்லை. அதில், மாரியம்மன்&lt;br /&gt;கோவிற்பூசாரியின் குங்குமப்பூச்சு, சமையற் பலசரக்குத்தூட்&lt;br /&gt;போத்தலுக்கு வெளியே எழுதப்பட்ட "மஞ்சள்",&lt;br /&gt;"மிளகாய்த்தூள்", "மிளகு" என்ற அளவுக்கு ஒவ்வொரு&lt;br /&gt;சாவிக்கும் ஒற்றை எழுத்தில் நாமம் சாத்தி வேறு கைவசம்&lt;br /&gt;ஒப்பித்தாள்&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு பெரிய சாவிகள் (அலுவல வெளிக்கதவு, வீட்டுவெளிக்கதவு);&lt;br /&gt;&lt;br /&gt;நான்கு நடுத்தரம் (அலுமாரிகள் 2, அலுவலக மேசை வலப்புற&lt;br /&gt;இழுப்பறை, சாவி இல்லாமலே திறக்கக்கூடிய வீட்டுமேசை&lt;br /&gt;இடப்புறஇழுப்பறை);&lt;br /&gt;&lt;br /&gt;நான்கு சிற்றரம் (துவிச்சக்கரவண்டி பூட்டு [வண்டி இருக்கும்&lt;br /&gt;வயோதிப நிலைக்கு, வண்டியை விட்டு விட்டு, அதன்&lt;br /&gt;காவற்பூட்டை யாராவது களவாடிக் கொண்டு&lt;br /&gt;போய்விடுவார்களோ என்ற எண்ணத்தில், பூட்டுக்கு ஒரு பூட்டுப்&lt;br /&gt;போடலாமா என்று எண்ணிக் கொண்டிருக்கின்றேன் என்பது&lt;br /&gt;இன்னொரு சமயம் இரண்டு மணிநேரம் பேசுவதற்கான&lt;br /&gt;விடயம்], கைப்பெட்டிச் சாவி இரட்டைகள், மனைவியின்&lt;br /&gt;உடுப்புப்பெட்டிச் சாவி இரட்டையின் ஒற்றை [தான்&lt;br /&gt;தொலைத்தாலும், கைகாவலுக்கு இருக்கட்டுமென்று உதிரி&lt;br /&gt;என்னிடம்; "சாவி தொலைந்தாற் சரி, உதிரி; நான்&lt;br /&gt;தொலைந்தால்.. என்னாகும்??" என்று கேட்டு இரண்டு முறை&lt;br /&gt;அடி வாங்கியிருக்கின்றேன் (முதல்முறை உண்மையாகவே&lt;br /&gt;கத்தரிக்காய் வதக்கிய அகப்பையால்; இரண்டாம் தடவை,&lt;br /&gt;திறந்து வைத்த மிளகாய்த்தூள்போல காட்டம் குறைந்து,&lt;br /&gt;செல்லமாக, தொலைக்காட்சி விளம்பரத்திற் பார்த்து,&lt;br /&gt;~கையாளல், அனுப்பற்செலவு உட்பட~ $35 இற்கு&lt;br /&gt;வாங்கிய தலையணையால்)].&lt;br /&gt;&lt;br /&gt;கடைசியாக, இவை எதுக்கும் அடங்காமல் எப்படி என்&lt;br /&gt;கைக்கோர்வைக்கு வந்து சேர்ந்தன என்று ஆக்கத்தின் தியும்&lt;br /&gt;அந்தமும் அறியப்படாத ஆண்டவர் வகைச்சாவிகள் ஒரு&lt;br /&gt;குத்துமதிப்பாக ஐந்தாறு.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், அவளின் பெயரீட்டின் சுருக்கத்துக்கு குறைந்தபட்சம்&lt;br /&gt;நான் சுருக்கெழுத்துப் படித்திருக்கவேண்டும் என்ற&lt;br /&gt;அடிப்படைத்தகுதி கொண்டிருந்திருக்கவேண்டும் என்பது,&lt;br /&gt;அடியேனுக்கும் தெரிந்திருக்கவில்லை; அம்மணிக்கும்&lt;br /&gt;அப்படியே. சும்மா சாவியின் மேல், 'அ' என்று -வெகுவாய்ப்&lt;br /&gt;பொதுப்பட, ஏதோ பெண்பிரச்சனைக்குள் அடிபட்ட&lt;br /&gt;இன்னோர் அமெரிக்க ஜனாதிபதி மாதிரி- பெயர் போட்டால்,&lt;br /&gt;அலுவலகமா, அலுமாரியா என்று கண்டுகொள்ள, கையிலே&lt;br /&gt;கடதாசி ஒன்றில் 'அ எனப்படுவது யாதென்றால், அ·தென்றும்&lt;br /&gt;அலுவலக அலுமாரி சாவி, அறிக.' என்று நன்னூற்சூத்திரம்&lt;br /&gt;மாதிரி எழுதிவைத்து, அடிக்கடி பலசரக்குக்கடையில் வாங்கும்&lt;br /&gt;பொருட்பட்டியல் போல எடுத்துப்பார்த்து கதவைத் திறப்பது&lt;br /&gt;என் வயதுக் கனத்துக்கும் வாழ்க்கை நேரத்துக்கும் அவ்வளவு&lt;br /&gt;அழகாகப்படவில்லை. அதற்குமேலே சிக்கலுக்கு, தான்&lt;br /&gt;வாங்கித் தந்த இதயத்தை அழுக்குப்படாது&lt;br /&gt;வைத்திருக்கிறேனா என்ற தினசரி உணர்ச்சி ரீதியான&lt;br /&gt;மனையாளின் வைத்தியப் பரிசோதனை, "ஆவீன.. மழை&lt;br /&gt;பொழிய இல் வீழ, அகமுடையாள் மெய் நோவ..." என்ற&lt;br /&gt;உயரத்திலே உள்ள கொடுமை.&lt;br /&gt;&lt;br /&gt;போதாக்குறைக்கு, எனக்குக் காதுக்குடைச்சல் எப்போது&lt;br /&gt;வரும் முதுகு சொறிவு எப்போது வரும் என்பது, நேரம்சார்&lt;br /&gt;இரண்டாம் மூன்றாம்படி, நாலாம் ஐந்தாம் அடுக்கு&lt;br /&gt;வகையீட்டுச்சமன்பாடுகளாற் சொல்லிச் சிக்கல் பிரித்து&lt;br /&gt;வைக்கமுடியாத சங்கதி. ஆக, சொறிவகைகளுள்,&lt;br /&gt;பின்+முன்தலைச்சொறிவு மட்டுமே வரக்கூடிய (அதாவது,&lt;br /&gt;தேவைப்படக்கூடிய) நேரம் இடம் என்பவற்றை ஓரளவு&lt;br /&gt;எதிர்வுகூறும் அளவுக்கு என்னோடு சிநேகிதமாக இருந்தது.&lt;br /&gt;அதனால், இந்தச்சொறிதலுக்கு எந்நேரமும் உதவியாகி&lt;br /&gt;இடுக்கண் களையும் சொறிந்துவைப்பான்கருவிகள்,&lt;br /&gt;கையிலிருக்கும் சாவிகளே. ஆனால், பெரிய சாவிகளுக்கு&lt;br /&gt;இந்தச்சொறிவேலையில் அவ்வளவு பிடித்தமில்லை என்பது,&lt;br /&gt;என் இங்கிதமற்ற சொறிகள், உருமாறாவடுக் குறிகளாய்&lt;br /&gt;மாறியதிலிருந்து கண்டுகொண்டேன். சிறுசாவிகள், பருவம்&lt;br /&gt;வராப்பிஞ்சுகள்; இதம்தரச் சொறியத்தெரியாதவை; அவை&lt;br /&gt;பட்ட இடத்தில் வேறு தனியாகச் சொறியச் சொல்லி&lt;br /&gt;உணர்வேற்படல் வழமை என்றும் அறிந்திருந்தேன். அதனால்,&lt;br /&gt;இடைத்தரச்சாவிகளே அதிகமாகப் பயன்படுத்துவது உண்டு.&lt;br /&gt;இந்தக்காரணத்தினால், சாவி நெற்றிநாமங்கள் நிலைத்து&lt;br /&gt;நிற்காதது மட்டுமல்ல, அழுக்கு வேறு பட்டு, புதையற்தீவுப்&lt;br /&gt;பெட்டிச்சாவிகள் இரகத்துக்கு இடுக்கெல்லாம் களிம்பேறி,&lt;br /&gt;கறுப்பேறிப்போய் விட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;அதனால், குத்து மதிப்பாக, முதலிருப்பது, சிறிய அவள்&lt;br /&gt;பெட்டிச்சாவி, பின்னால், என் பெட்டிச்சாவிகள்,&lt;br /&gt;வீட்டலுமாரிச்சாவி; மிகப் பெரியசாவி, வீட்டுவெளிவாசல்;&lt;br /&gt;வெளியே வந்தால், வண்டிச்சாவி, அடுத்தது; பின்னால்&lt;br /&gt;இருப்பது (வளையத்தில் என்ன பின் முன் என்கிறீர்களா?&lt;br /&gt;அதுவும் சரிதான்... என்றாலும், மனவசதிக்கு ஒருவகையில்&lt;br /&gt;இப்படி பழக்கிவைப்பதுதான் நல்லது என்று படுகின்றது),&lt;br /&gt;அலுவலச்சாவி, அலுவல மேசைச்.... இப்படியாக ஓர் ஒழுங்கு&lt;br /&gt;பண்ணி வைத்துக் கொண்டிருந்தேன் (அல்லது பண்ண முயற்சி&lt;br /&gt;பண்ணிக்கொண்டிருந்தேன் என்று மனைவியும் மகளும்&lt;br /&gt;அர்த்தம் பண்ணிக் கொண்டிருந்தார்கள்).&lt;br /&gt;&lt;br /&gt;அங்கே எனது மனித பொதுவுணர்வு சதி பண்ணிவிட்டது;&lt;br /&gt;வீட்டுவாசலிலும்விட, அலுவலக வாசல், பிரித்தானிய அலகில்&lt;br /&gt;அளந்தாலும் சரி, சர்வதேச அலகில் அளந்தாலும் சரி&lt;br /&gt;பரப்பளவில் மிகப்பெரிது; னால், சாவி அளவிலோ,&lt;br /&gt;அலுவலகச் சாவி, வீட்டுச்சாவியிலும் விடச் சிறிது. காலை&lt;br /&gt;வீட்டு வாசலை விட்டு வெளியே, அன்றைய மேலதிகாரியின்&lt;br /&gt;திட்டலுக்கு முன்தலையா, பின்தலையா,&lt;br /&gt;இடப்பக்கவாட்டுச்சிரமா வெகுசிரமமாய்க் கரம் சொறிவது&lt;br /&gt;இந்த யோசனையில் மூளையை விட்டால், இச்சையின்றி&lt;br /&gt;இயங்கும் உணர்வு, சின்னச்சாவியை வீட்டுக்கதவுச்&lt;br /&gt;சாவித்துவாரத்துள் விட்டு ஓர் ஐந்து நிமிடம், அறைக்கதவு&lt;br /&gt;அளவு தொடர்பு பண்ணி, தேநீர்க்கோப்பைக்குள்&lt;br /&gt;அகப்பையினால் சீனிபோட்டுக் கலக்கும் முயற்சி பண்ணிக்&lt;br /&gt;கொண்டிருக்கும். அதனால், திறப்புத் தொடக்கம் எங்கே&lt;br /&gt;முடிவெங்கே என்று தெரிந்திருப்பதற்கு இலகுவாக, மகளின்&lt;br /&gt;யோசனையை (அவளுக்கு அவள் அம்மாக்கும் தாங்கள்&lt;br /&gt;'ஸிம்ஸன்ஸ்' கேலித்தொடர்க்குடும்ப ஸிம்ஸன் பெண்கள்&lt;br /&gt;என்பதாய் ஒர் உணர்வு இருக்கின்றதோ இல்லையோ&lt;br /&gt;தெரியாது; ஆனால், நிச்சயமாக நான், ஹோமர் ஸிம்ஸன்&lt;br /&gt;வகைப்படு மனிதன் என்பதில் எதுவித கருத்துவேறுபாடும்&lt;br /&gt;சட்டைக்குத் துணி எடுக்கும்போது அவர்களுள் எழுவதுபோல&lt;br /&gt;எழுவதில்லை என்பது கவலைக்குரியவிடயம்)&lt;br /&gt;அமுற்படுத்தமுயன்றேன்; அதாவது, இயேசு மார்பிற்&lt;br /&gt;பிரித்துக்காட்டும் இதயம் தொங்கும் வளையச் சங்கிலிக்கு ஒரு&lt;br /&gt;புறம் வளையத்தில் முதலாவது திறப்பினை இட்டு, மிகுதியை&lt;br /&gt;ஒழுங்கில் இட்டுவைத்தால், கடைசியில், அலுவலக&lt;br /&gt;மேசைத்திறப்புக்குப் பின்னால், அடையாளம் காணப்படாத&lt;br /&gt;விபத்தில் அகப்பட்டு என்னிடம் வந்தடைந்த சாவிகள்,&lt;br /&gt;சங்கிலியின் மறு பக்கத்தில் வந்து முடியும் என்பது கொஞ்சம்&lt;br /&gt;தொழில்நுட்ப ஆலோசனையிற் தரத்தினால் ஒரு படியால்&lt;br /&gt;உயர்த்தியான கருத்தாகவே பட்டது; ஆனால், அடுத்த நாள்&lt;br /&gt;காலை மனைவியின் உடுப்புப்பெட்டி, ஒரு முகவரியற்ற&lt;br /&gt;சாவியினால் பத்து நிமிடங்கள் திறக்கப்பட முடியாதுபோய்,&lt;br /&gt;அவள் அலுவலக நிகழ்ச்சிக்கு 'சாதாரணமான'&lt;br /&gt;ஆடையயலங்காரத்துடன் போகவேண்டிவந்ததே, சாவிக்கு&lt;br /&gt;இன்றைய இடமே நாளைய வலமாகலாம், நாளைய இடமே&lt;br /&gt;இன்றைய வலமாயுமிருக்கலாம், இவையிரண்டும் இல்லாமல்&lt;br /&gt;இன்றுபோலவே நாளையும் வலம் வலத்திலேயே வலம் வரலாம்&lt;br /&gt;என்ற 'சொதப்பல்' தத்துவத்தைச் சொல்லிவைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிலையில், இயலுமானவரை, பக்கத்தில் இருக்கும்&lt;br /&gt;சாவிகளைப் பார்த்து, எட்டாமல் எட்டாம் இடத்தில் இருக்கும்&lt;br /&gt;சாவியினைப் பார்த்து, சாவிகளைத் திருடன்போலப் போட்டுத்&lt;br /&gt;திறக்கக் கற்றுக் கொண்டிருந்தேன். தற்செயலாக,&lt;br /&gt;அலுவகத்தில் புது மேசை வருகிறதென்றாலோ, அல்லது,&lt;br /&gt;மனைவி இன்னொரு ஆடையலங்காரப்பெட்டி&lt;br /&gt;வாங்குகின்றாள் என்றாளோ, பயமே பிடித்துக் கொண்டது.&lt;br /&gt;மொத்தத்தில், நாய்க்குட்டிக்கு ஆள் பழகிக்கொள்கிற&lt;br /&gt;விடயம்போல ஆகிப்போனது புதுச்சாவிக்கு நான்&lt;br /&gt;பொருந்திப்போகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;II&lt;br /&gt;--&lt;br /&gt;&lt;br /&gt;அலுவலகச் சக உத்தியோகத்தன், வெஸ்லி கிளன்மேயர்&lt;br /&gt;சரியான 'அமெரிக்கத்தெற்குச் செங்கழுத்தான்' என்பான&lt;br /&gt;குரூஸ். அங்கே, நான், குரூஸ், பாபாங்கிடா மூன்றுபேரும்தான்&lt;br /&gt;அண்மைக்கால பொருளாதார அகதிகள்; தென்னமரிக்க,&lt;br /&gt;ஆசிய, பிரிக்க வந்தேறுகுடிகள். "கொலம்பியா= கோப்பி +&lt;br /&gt;கொக்கேயின் + கடத்தல் + இடதுசாரிப்புரட்சி -&lt;br /&gt;கைப்பொருள்" இவ்வளவுதான் குரூஸ் பற்றிய கிளன்மேயரின்&lt;br /&gt;கருத்தென்று குரூஸின் கருத்து; இதிலிருந்து என்னைப் பற்றி&lt;br /&gt;அவன் என்ன சொல்வான் என்பதை ஊகிக்கக்கூடியதாக&lt;br /&gt;இருந்தது. அதனால், அதை அவன் வாயிலிருந்தே வருவிக்கும்&lt;br /&gt;முயற்சியில் என்றைக்கும் நான் பரிசோதனை&lt;br /&gt;பண்ணிப்பார்த்ததில்லை. ஆக, தொழில் நிமிர்த்தப்&lt;br /&gt;பேச்சுவார்த்தைகள் மட்டுமே. நல்லகாலத்திற்கு, நான்&lt;br /&gt;திட்டமிடலும் வடிவமைப்புப் பிரிவு; அவன் களவேலைப்பிரிவு.&lt;br /&gt;நிறவுணர்வு மிக்க இவன், பாபாங்கிடாவுடன் எப்படி ஒரு&lt;br /&gt;சுமுகமான உறவை வைத்து இருக்கின்றான் என்பது பற்றி&lt;br /&gt;எவருக்குமே சந்தேகம் இருந்ததில்லை. வருடாவருடம்&lt;br /&gt;இருவருமே மலைக்குப் போகும் சபரிமலை யாத்திரீகர்போல,&lt;br /&gt;அலுவலகத்துக்கு விடுமுறை எடுத்துவிட்டு, விமானம் பிடித்து&lt;br /&gt;ஹ¥ஸ்டன் போயிறங்கி கூடைப்பந்து பார்த்துக் கூக்குரல்&lt;br /&gt;குரவை இட்டு வரும் பேர்வழிகள். ஆனால், ஹ¥ஸ்டனில்,&lt;br /&gt;இருவருமே ஒரே விடுதியில், ஒரே அறையிற் தங்குகின்றார்களா&lt;br /&gt;இல்லையா, ஒரே மேசையில் இருந்து சாப்பிடுகின்றார்களா,&lt;br /&gt;அல்லது வேறுவேறாய் நழுவிப்போய் விடுகின்றார்களா என்று&lt;br /&gt;'கூற்றுப்படி தவறான' கேள்விகளைக் கேட்க எவரும்&lt;br /&gt;துணிவில்லை. பாபாங்கிடாவுக்கும் எனக்கும் குருஸிற்கும்&lt;br /&gt;மேலாக சிறுபான்மையோர் என்ற அளவில் ஒருவித 'ஒரே&lt;br /&gt;இனப்பாசமும் பரிதாபமும்' கலந்த உணர்வுவலை&lt;br /&gt;போர்த்தப்பட்டு இருந்தது. ஆனால், பாபாங்கிடா,&lt;br /&gt;கிளன்மேயருடன் கூடி நடந்துபோகும்போது, என்னால்,&lt;br /&gt;பாபாங்கிடாவைப் பார்த்துச் சிரிக்கமுடிவதில்லை. ஏதோ&lt;br /&gt;எதிரியுடன் கூடி நடந்து துரோகம் பண்ணியவனைக் காணும்&lt;br /&gt;உணர்வு உள்ளெழுந்தது. அப்படியான நேரங்களில்,&lt;br /&gt;அலுவலகத்தில் உள்ள தாய்லாந்து சுவர் ஓவியத்தில் இருக்கும்&lt;br /&gt;பௌத்தபிக்குவின் தலையில் இரண்டு வாரங்களுக்குள்ளாக&lt;br /&gt;ஏதாவது தலைமயிர் முளைத்த அடையாளம் தெரிகின்றதா&lt;br /&gt;என்ற சந்தேகம் அல்லது வரவேற்பாளர்ப்பெண் கையிலிருக்கும்&lt;br /&gt;மோதிரம் நியூயோர்க்கில் ட்வானியில் வாங்கியதா அல்லது&lt;br /&gt;அவளின் நான்குவருடகாலம் முந்திய தென்னாபிரிக்க&lt;br /&gt;விஜயத்தில் வாங்கியதா என்ற வினாவின் பத்தாவது எழுச்சி&lt;br /&gt;என்பன என்னுட் கருவாகி வெளி உருவாகி, கரைந்தருகிக்&lt;br /&gt;கருகிக் கழியும். இ·து அவர்களுக்குப் புரிந்திருக்கலாம்&lt;br /&gt;என்றுகூட எனக்குச் சந்தேகம் உண்டு. ஆனால், தனியே&lt;br /&gt;இருக்கையில், பாபாங்கிடாவும் நானும், டெக்ஸாஸ் கிங்கின்&lt;br /&gt;இழுத்துப்பண்ணிய கொலையூடாக, டேவிட் டியூக்கின் புதிய-&lt;br /&gt;நாட்சிசம்வரை விவாதித்து (அதாவது நான் திட்டுவதை அவன்&lt;br /&gt;ஆமோதித்து, அவன் திட்டுவதை நான் அங்கீகரித்து&lt;br /&gt;ஆளுக்காள் முதுகிற் தட்டிக்கொண்டு), அவன்&lt;br /&gt;செங்கழுத்தானிடம் டெனிஸ் ரொட்மன் கார்மன் எலக்ராவைக்&lt;br /&gt;கல்யாணம் பண்ணியது பற்றிய கடைசியாக வெளிவந்த&lt;br /&gt;காதல்நிலை அறிக்கை அறியப்போக, நான் மின்வலைக்குள்&lt;br /&gt;ஏதாவது இயூடோரா முகவரியூடாக, கொசவோ,&lt;br /&gt;செஸ்னியாவில் சிறுபான்மையினருக்கெதிராகச் சேர்பியர்,&lt;br /&gt;இரஷியர் பண்ணுவது எவ்வளவு (அ)நியாயம் என்பது பற்றி&lt;br /&gt;யாராவது விரலை வாய்க்குள் வைத்து விட்டு வையவும் கக்கவும்&lt;br /&gt;முடியாதவர்கள் தாங்கள் என்று மின் அஞ்சற்&lt;br /&gt;கையொப்பக்கோப்பு வைத்திருக்கும் அப்-பாவிகளினை&lt;br /&gt;அவர்கள் செயல்வழியிலேயே தாக்கப்போய்விடுவது வழக்கம்.&lt;br /&gt;ஆக, இரண்டுவருடகாலத்தில், இப்படியானதோர்&lt;br /&gt;உள்ளொன்று வைத்து வெளியொன்று பண்ணும்&lt;br /&gt;ஒளித்துப்பிடித்து விளையாடல் அலுவலகத்துள்&lt;br /&gt;அங்கிங்கெனாதபடி எங்கும் நிகழ்ந்திருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பின்கதைச்சுருக்கம் III, IV&lt;br /&gt;------------------------&lt;br /&gt;&lt;br /&gt;III - நேற்று&lt;br /&gt;-----------&lt;br /&gt;வீட்டுக்குப் போகும் என் அலுவலக மேசைப்பூட்ட நிகழ்த்தும்&lt;br /&gt;யுத்தம், அன்றன்றைய மனநிலையைப் பொறுத்து,&lt;br /&gt;சக்கரவியூகமா, கருடவியூகமா, இல்லை சாதாரண கரப்பான்பூச்சி&lt;br /&gt;வியூகமா என்று அமைந்திருக்கும். நேற்றைக்கு,&lt;br /&gt;திறப்புக்கோர்வைக் கையிலே நெருப்புக்குவையாக&lt;br /&gt;வைத்திருப்பதுபோல வைத்து, கோர்வையில் இதயம் தொங்கும்&lt;br /&gt;சங்கிலிக்கு இரண்டு பக்கமும் உள்ள சின்னச்சாவிகளில்&lt;br /&gt;இருந்து ஒவ்வொன்றாய், மனயாத்திரை வீட்டில் அவளின்&lt;br /&gt;பெட்டிச்சாவியிலிருந்து சொல்லிக்கொண்டு வீடு&lt;br /&gt;அலுமாரியைப் பூட்டி, முன் வாசற்கதவைப்பூட்டி, வண்டியைத்&lt;br /&gt;திறந்து, அலுவலக வாசலுக்கு வந்து வண்டியைப் பூட்டி, திரும்ப&lt;br /&gt;அலுவலகம் திறந்து.... இப்படி பூசலார் வேலை பார்த்துக்&lt;br /&gt;கொண்டிருக்கையில், கிளன்மேயருடன் பாபாங்கிடா அவர்கள்&lt;br /&gt;அறையிலிருந்து வெளிவந்து என் அறைக்கதவு முன்னாக,&lt;br /&gt;கடந்து போவது தெரிந்தது. என் வெறுப்பிலே, கிளன்மேயரின்&lt;br /&gt;முகத்தைக் கண்டதால், பாபாங்கிடாவையும் வழமைபோலக்&lt;br /&gt;காணாமல் இருந்ததுபோல, மேசை இழுப்பறையினைத்&lt;br /&gt;திறப்பதில் வெகு சிரத்தை காட்டுக்கையில், தலைக்குட் பொறி&lt;br /&gt;பறந்தது. பபாங்கிடா போல உருவிலும் என்னோடுடனான&lt;br /&gt;பழக்கத்திலும் சிறியோன் ஆனாலும், அவனில் நான் கொள்ளும்&lt;br /&gt;வெறுப்பினால் முக்கியத்துவம் ஆகி, பாபாங்கிடாவின் மீதிருந்த&lt;br /&gt;நட்பு சிறுத்துப் போவது புரிந்தது. அதன்பின், நேற்றைக்கு&lt;br /&gt;மேசையினைத் திறப்பது முகச் சுலபமானதாக இருந்தது -&lt;br /&gt;பெரிய சாவி, சின்னப்பரப்பளவு வீட்டு வெளிச்சாவி,&lt;br /&gt;இரண்டாவது பெரியசாவி, பெரியகதவுப்பரப்பளவு&lt;br /&gt;அலுவலகச்சாவி என்று கை பழக; அன்றைக்கு அது&lt;br /&gt;சம்பந்தப்படுத்தி, மிகுதி எந்த நிலையிலும் சாவிகளை மாறிப்&lt;br /&gt;போட்டுச் சிக்கல் பண்ணாமல் வீடு போய்ச் சேர்ந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;IV - இன்று&lt;br /&gt;----------&lt;br /&gt;இன்றைக்குக் காலையிலும் சங்கிலி அருகிருந்து&lt;br /&gt;தொடங்காமல், பெரிய சாவிகளை தாரமாக வைத்துச்&lt;br /&gt;சிக்கலின்றி வந்து சேர்ந்தேன். பாபாங்கிடாவையும்&lt;br /&gt;கிளன்மேயரையும் கண்டபோது, சாவிகளை முன்னே&lt;br /&gt;கையாண்ட எண்ணச்சிந்தனையே மனதில். கிளன்மேயரின்&lt;br /&gt;நண்பன் பாபாங்கிடா என்ற உணர்வு செத்து, பாபாங்கிடாவின்&lt;br /&gt;தோழன் கிளன்மேயர் என்று பட்டது. காலைவணக்கம்&lt;br /&gt;இருவருக்கும் சொல்ல, கிளன்மேயர் முதலில் அதிர்ந்து&lt;br /&gt;பின்னால், பதில்வணக்கமும் வாழ்த்தும் சொல்லிப்போனான்.&lt;br /&gt;நேற்றைய சாவிகள் இன்றைய நண்பராகிப் போக,&lt;br /&gt;நேற்றைய நண்பர்கள், இன்றைய சாவிகளானார்கள்.&lt;br /&gt;இன்றைக்கு முழுவதுமே சாவிகளும் அலுவலமும் அவ்வளவு சிக்கலாக&lt;br /&gt;இருக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;'99/15/03&lt;/em&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7096896-112016836177066551?l=punaivu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://punaivu.blogspot.com/feeds/112016836177066551/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7096896&amp;postID=112016836177066551' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7096896/posts/default/112016836177066551'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7096896/posts/default/112016836177066551'/><link rel='alternate' type='text/html' href='http://punaivu.blogspot.com/2005/06/blog-post.html' title='திறப்புக்கோர்வை'/><author><name>-/பெயரிலி.</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='26' src='http://4.bp.blogspot.com/_OBFBfYawg8g/S8-wCagZnxI/AAAAAAAACCI/5ty9S8m_Ooc/S220/Abg_peyaB.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7096896.post-111242894336946729</id><published>2005-04-02T02:57:00.000-05:00</published><updated>2005-04-02T03:03:57.346-05:00</updated><title type='text'>தட்டாட்டம்</title><content type='html'>ஆயிரத்துத்தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஒன்பதாம் ஆண்டு 'நன்றிநவிலல்' தினத்தன்று புளோரிடா மாநில மியாமி நகரிலே இரண்டு நிகழ்வுகள் நடந்தன. ஒன்றை உலகம் முழுவதும் அறியும்; மற்றையதை மூன்று பேருக்கு மட்டும்தான் தெரியும். ஆறுவயது கியூபப்பையன் ஏலியான் நகருக்குள்ளே கொண்டுவரப்பட்டபோது, இவனின் நண்பன் விடுமுறையைக் கழிக்க, ஓய்வெடுக்காத இரண்டு வருடங்களுக்குப் பிறகு மியாமியிலிருந்து நியூ ஓர்லியன்ஸ் நகருக்குப் புறப்பட்டு வந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;இருவரும் சந்தித்து ஐந்து வருடங்கள் இருக்கக்கூடும்; இவன் ஹொங்கொங்கிலே இருக்கும்போது, இலங்கையிலிருந்து அமெரிக்கா போனவனை, விமானநிலையத்திலே அவசர அவசரமாக ஒருநாள் இரவு சந்தித்தபிறகு இப்போதுதான் சந்திக்கமுடிகின்றது; நண்பனுக்கு மனைவியை அறிமுகப்படுத்தினான் என்றாலும் அது பெயருக்கு மட்டும்தான்; முன்னமே மூன்று வருடங்களாக, அவளைப் பற்றி நண்பனுக்கும், நண்பனைப் பற்றி அவளுக்கும் விபரமாகச் சொல்லியிருக்கின்றான். வந்த அன்றைக்கு இரு பழைய நண்பர்கள் என்ன பேசிக்கொள்வார்கள் என்பதை உங்களுக்கு நான் சொல்லத்தேவையில்லை; ஆனால், அவன் மனைவிக்கு அன்றைக்கு அவன் ஒரு பரிச்சயமில்லாத புது ஆள் மாதிரித் தெரிந்தான், ஒரு மேற்தோலையுரித்துக்கொண்ட பாம்புபோல - பாதி அவனின் அதியுற்சாக நடத்தையினால், மீதி நண்பனிடமிருந்து அவனைப் பற்றித் தெரிந்து கொண்ட, இதற்குமுன் அவளறியாத சின்னச்சின்ன விடயங்களிலிருந்து..... அவன் வானொலியிலே பழையபாட்டுகள் போகும்போது இலயித்திருந்து கூடவே தானும் பாடிக்கொண்டு, மேசையிலே கைவிரல்களாற் தாளம் தட்டக்கூடியவன் என்று அன்றைக்கு வரைக்கும் அவளுக்குத் தெரியாது; மூன்றுபேரும் இருந்து சாப்பிட்ட அன்றைய இரவினைத் தவிர மீதி நேரமெல்லாம், அவள் தனியே இருந்து 'வரலாற்று' அலைவரிசையிலே 'மேபிளவர்' கப்பலிலே அமெரிக்காவுக்கு வந்தவர்களைப்பற்றியும் காட்டுவான்கோழியினைப் பற்றியும் நித்திரை வரும்வரைக்கும் பார்த்துக்கொண்டிருந்தாள். அவர்கள் எப்போது தூங்கினார்கள் என்று அவளுக்குத் தெரியாது; இடையிடையே பலத்த சிரிப்புச்சத்தங்கள் மட்டும் கொஞ்சம் அவளை அதட்டி அதக்க, திரும்பி மறுபுறம் படுத்துத் தூங்கினாள்.&lt;br /&gt;&lt;br /&gt;மறுநாட் காலையிலே, இடைக்கிடையே விக்கல் எடுப்பதுபோல, ஆளையாள் 'அறுத்துக்கொள்ளும்' ஒரு சில கணங்களை மட்டும் கண்டுகொள்ளாதுவிட்டால், நண்பனும் இவனும் கொஞ்சம் நிதானத்துக்கு வந்திருந்தார்கள் என்று அவளுக்குப் பட்டது; தான் கொண்டு வந்த அமெரிக்க காரோட்டிகள் கூட்டமைப்பொன்று அச்சிட்ட வரைபடத்தை எடுத்து வைத்துக்கொண்டு "எங்கே போவோம்?" என்று நண்பன் கேட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;எங்கே போகவேண்டும் என்ற கேள்வி, நியூ ஓர்லியன்ஸ் மாநகரிலே கேட்பது, ஒரு மரியாதைக்கு மட்டும்தான். பிரெஞ்ச் சதுக்கம் அல்லது மயானங்கள்; அவற்றைவிட்டால், மிஞ்சின காட்சியிடங்களான போன நூற்றாண்டுத்தோட்டவீடுகள், முதலைச்சதுப்புநிலங்கள், கேஜன் கிராமங்கள் எல்லாவற்றுக்குமே ஊருக்கு வெளியே கொஞ்சநேரம் சவாரி செய்யவேண்டும்; மழைமேகமூட்டமான நேரத்திலே சரிப்படாது. 'மார்டி கிரா' கண்காட்சிக்கிராமம் மூடிக்கிடக்கும். மயானங்களின் விசேடமானது, காலமும் நிலத்துக்கு மேலே கதவுவைத்து குடும்பம் குடும்பமாய் உடல் புதைக்கும் புதுமையும் எனச் சொல்லலாம். காப்புறுதிக்காரனுக்கும் வைத்தியசாலைகட்கும் மென்பொருளிலே தரவுத்தளம் அமைத்துக்கொடுக்கும் தொல்லை இல்லாத வார இறுதிகளையும்கூட, போன நூற்றாண்டிலே மஞ்சட்காய்ச்சலிலும் மலேரியா, வயிற்றோட்டத்திலே போனவர்கள் பெயர்ப்பட்டியலைச் சரி பார்த்துக்கொண்டு, நிம்மதியைத் தின்னும் சம்பளமில்லாத சுகாதாரவைத்தியப்பரிசோதகர் தொழில் பார்க்கும் உத்தேசமும் பொறுமையும் நண்பனுக்கு இல்லாததால், 'பிரெஞ்ச் குவார்ட்டஸ்' மட்டுமே போக மிஞ்சியது.&lt;br /&gt;&lt;br /&gt;டென்னஸி வில்லியம்ஸின் 'த ஸ் ரீட் கார் நேம்ட் டிஸையர்' நாயகன் வாழ்ந்த களமாக, எலியா காஸனின் திரைப்படத்திலே மார்லன் பிராண்டோவை வைத்துச் சித்தரிக்கப்படும் 'பிரெஞ்ச் குவார்ட்டஸ்' பெருமை-சிறுமை, வெறும் சொல்லில் அடங்காது. அதற்குக் காரணம், அதன் பிரசித்தமான நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த 'பேர்பன்' வீதியில் இரவுகளில் நிகழும் வாடிக்கையான வேடிக்கை விநோதங்கள் என்பது நாடறிந்த உண்மை. சாதாரணமான கரையோரமுதலையாக வாலை நீட்டிச் சோம்பற் தூக்கத்திற் கிடக்கும் வீதி, இரவுப்பொழுதில், நெருப்புவைத்த அனுமார்வால்; போனீர்களோ பற்றிக்கொள்ளும்.... (எதுவென்று விளக்கமாக இங்கே சொல்ல எனக்கு அனுமதியில்லை என்று நினைக்கின்றேன்). இப்படி 'மது, மாது, ஆட்டம், பாட்டு, அடிபிடி, பிடிஅடி, ஒருபால்+இருபால், முதலை கேஜன் சான்விட்ஸ், போ-போய்' என்று இரவிலும் காலைச்சூரியநிழலாய் கைவிரித்துப் பரவும் உலகு, பகலிலே பிரெஞ்சுக்கால உப்பரிகைகள், நடைபாதை ஓவியர்கள், வீதி ஜாஸ் கலைஞர்கள், மிஸிஸிப்பி நதிக்கரை நடை, தாரைதப்பட்டை இசையோடும் தெற்கத்திய உணவோடும் ஆற்றுப்படகு உலா, ஐந்து டொலர்களுக்கு இரண்டு எகிப்திய ஆரூட சரிகைச்சட்டை அம்மணிகள், ஒற்றைச்சில் வண்டிக்கழைக்கூத்தாடிகள், 'குதிரைமேல் ஜக்ஸன்' கட்டம், சந்திக்குச் சந்தி நிறம் பூசிய வெள்ளிக்கிரகவாசிகள்/ செவ்விந்தியர்கள்/சாத்தான்கள்-"அசையமாட்டோம், விழி அமர்த்தமாட்டோம்-அதற்காக விரித்திருக்கும் தொப்பிக்குள்ளே காற்பணமும் சுண்டங்காய்ச்சில்லறையும் இட்டுச்செல்க" , கண்ணை படங்குத்துண்டு மூடிய குதிரைகள் பூட்டிய வண்டில்களும் அவற்றின் டிரகுலா ஆடைச்சாரதிகளும், பேய்வாழும் மாளிகைகள், ஐந்து டொலர் தொடக்கம் மத்திய, மாநில வரிகளும் உள்ளடக்கி ஆறாயிரத்து முப்பத்தி இரண்டு டொலர் வரைக்குமான நீர்வர்ண/நெய் டிகா ஓவியங்கள் தொங்கும் படுக்கும் கூடங்கள், 'பத்துடொலருக்கு ஒரு கறுப்புமூக்குத்தி, கொரியன் எழுத்தோவியர், தேவாலயத்துக்கு வாசனைத்திரவியங்கள்' பக்கம்பக்கம்குந்தியிருக்கும் பிரெஞ்சுச்சந்தை, போய்ச்சேர 'டிராம்' வண்டி என்று விரியும். (என்னை ஆசுவாசப்படுத்திக்கொள்ள மூச்சு விட்டுக்கொள்கின்றேன்) நானே இந்த இடத்தை இதற்கு மேலும் விரித்துச் சொல்வதிலும்விட ஏதாவதொரு ட்ரூமன் காப்டே, அனே ரைஸ் நூலை வாசித்துப்பாருங்கள் என்று கேட்பது உசிதமான காரியம்; மிக இலகுவானதும் சரளமானதுமான நடையிலே, நடப்பதைக் வாசிக்கின்றவர் கண்முன்தோற்ற, உயிர்ப்பூட்டத்துடனே விளக்கமாகச் சொல்லுவார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;இந்த நகர்வீதிகளிலே, நேற்று கண்டது இன்று மிஞ்சாது, இன்று கொண்டது நாளை தங்காது. அதனால், வார இறுதிநாட்களின் பிரெஞ்சுச்சதுக்கம் இவர்களுக்கு அலுப்பதில்லை. ஒரே மேடையிலே வேறுவேறு ஓரங்கநாடகங்கள் விளிம்பிலே தமக்குட் தொட்டு நடத்திக்கொண்டிருப்பதுபோல...... அருகருகே வேறுவேறு பாத்திரப்பண்புகளையும் ஊடாடும் கதைகளையும் காலிக்கொண்டிருக்கும் ஒரு தேயாச்சுரங்கம்...... ந்யூ ஓர்லியன்ஸ் பிரெஞ்சுச்சதுக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;மூவரும் பிரெஞ்சுச்சதுக்கத்தினைச் சென்றடைந்தபோது, காலை பதினொரு மணி இருக்கும். காலையிலே வீட்டிலிருந்தே இலேசாக ஆளுக்கு இரண்டு இனிப்புத்தோசைகள் என்று பால்தேனீருக்கு முன்னர் உண்டுவிட்டுப் போனதினால், பிற்பகல் இரண்டு மணி வரைக்கும் ஒரு முனையிலிருந்து மற்றொரு முனைக்கு குறுக்காகவும் நெடுக்காகவும் ஒன்றுக்கு மேற்பட்டதடவை சிறிய சிறிய சந்துகளிலே திரும்பித்திரும்பி அலைந்தார்கள். நண்பன், தன் ஒளியப்பதிவியினாலும் படக்கருவியினாலும் பிரெஞ்சு ஆட்சிக்குட்பட்டிருந்தபோது கட்டப்பட்ட கட்டிடங்களின் உப்பரிகைகளையும் பூந்தொட்டிகளையும் கைவினைப்பொருட்கள், ஓவியக்கடைகளின் வெளிப்பகுதிகளையும் படம் பிடித்துக்கொண்டிருந்தான்.  தனக்கு எப்போது கல்யாணம் ஆகக்கூடும் என்று 'பலபளவண்ணம்' கூரைத்தலைப்பாகை கட்டிய 'உவூடு' பெண்மந்திரவாதிடம் நான்கு டொலர் கொடுத்து கேட்ட போது நண்பனுக்குக் கிடைத்த ஆரூடமும், அவனது மூல நட்சத்திரத்தினையும் பெற்றார் பிறப்பையும் ஆதிமூலங்களாக வைத்து அவனின் தாயாருக்கு இலங்கையிலே சொல்லப்பட்ட காண்டக்கூற்றும் முற்றிலும் ஒன்றையொன்று நிராகரித்ததிலே நண்பனுக்கு மிகுந்த மனவருத்தம்; அதைத் தேற்ற, ஒரு பதிவோவியரிடம் இருபத்தைந்து டொலர் கொடுத்து, தன்னைப் பத்து நிமிடத்திலே பதித்துக்கொண்டான். அவர் ந்யூ ஓர்லியன்ஸின் ஜாஸ் இசைஞரோடு சேர்த்து வரையப்பட்ட நீலநாய் ஓவியத்தை மிகவும் சிலாகித்துக்கொண்டு வரைந்து கொடுத்த ஓவியத்திலே, தம் மீசை சிவப்பாகவும் தலைமுடி மஞ்சளாகவும் பண்பின் அடிப்படையிலே தீட்டப்பட்டு, திட்டுத்திட்டாக நிறங்கள் தேங்கிக் குழம்பி இருந்ததிலே அத்துணை மகிழ்ச்சி நண்பனுக்கு இல்லைத்தான்; என்றாலும், காசையும் திருப்திக்காக மேலும் சில ஒற்றை டொலர்த்தாள்களையும் வைத்து விட்டு ஓவியத்தைப் பார்த்துப்பார்த்து திட்டித்திட்டி நடந்தவனைக் கண்டு இவன் மனைவியிடம் கண்ணடித்துச் சிரித்தான்; அவள் 'வாயை மூடிகொண்டு பேசாமல் நடவுங்கள்' என்பதுபோலக் கண்ணால் முறைந்து, வலக்கைச்சுட்டுவிரலாலும் தன் உதடுகளுக்குக் குறுக்கே அழுத்திக்காட்டினாள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிலையிலேதான் ஜக்ஸன் சந்துக்கும் இருநூற்றாண்டுகாலத் தேவாலயத்துக்கும் அந்தப்புறம் டெகாடூர் வீதியிலே அந்த இரண்டு தட்டொலி ஆட்டக்காரப் பையன்களை இவர்கள் காண நேர்ந்தது. இவனும் இவன் மனைவியும் இரண்டு வருடங்களுக்கு முன்னர் இந்த நகருக்கு வந்தபோது, இப்படியான ஆட்டங்களைக் கொஞ்ச நேரம் நின்று பார்த்து, கூட்டத்தோடு கூட்டமாகச் சில்லறையை விசிறிவிட்டுப்போவார்கள். இப்போது நின்றுபார்க்கும் அளவுக்கு ஈடுபாடு இல்லை; ஊரிலே ஊனமுள்ள பிச்சைக்காரர்கள், சில்லறை கிடக்கும் தகரப்பேணியை இலயத்துடன் குலுக்கும் ஒலியினை ஒப்பிய ஓசையை மட்டும் கேட்டுக் கொண்டு, சுற்றி -கற்பனை நீள்வளையப்பரிதியொன்றின் மூன்றிலிருபகுதியிலே- நின்று பார்க்கும், சிறியதும் பெரியதுமான சுற்றுலாப்பயணிகளின் காலிடைகட்குள்ளாலும் தோற்பட்டைகட்கு மேலாலும் தெரியும் ஆட்டத்துணுக்குகளையும் நுணுக்குகளையும் நடையோடு நடையாகப் பொறுக்கிக்கொண்டு பிரெஞ்சுச்சந்தைக்குப் போகின்ற அளவிலேதான் அவர்களின் மனநிலை. இரும்புசல்பேற்றினாலான நகைகளின் புதிய மாதிரியுருக்களும் கொரிய, தூரிகைஎழுத்தோவிய நளினமும் 'நீண்ட கழுத்து-தொங்குகாது' ஆபிரிக்க மரப்பெண்சிற்பங்களும், இந்தக்காற்குதி பாதம் தட்டாட்டத்திலும்விட ஈர்ப்பு நிறைந்தவையாகத் தெரிந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், வந்திருக்கும் நண்பனுக்கு இன்றைக்கு ஒருமுறை அப்படியான ஆட்டமொன்றைப் பார்த்துத்தான் ஆகவேண்டும் என்ற விழைவு. இரண்டு கூட்டங்கள் கொஞ்சம் கொஞ்சம் தள்ளித்தள்ளி, ஒன்றோடு ஒன்று கலக்காமலும் கலந்ததும்போலக் கிடந்தன. அவற்றிலே -தேனீரிலே கரண்டியாற் கொட்டிய சீனி கரைவதுபோல- வெளியிருந்து உள்ளே நுழைந்து ஒருவாறு முன் வளையவரிசையிலே வந்து சேர்ந்தார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;இரு கறுப்பினச் சிறுவர்கள், ஆளுக்காள், கொஞ்சம் கொஞ்சம் தொலைவிலிருந்து ஆடிக்கொண்டிருந்தார்கள்; ஒருவன் ஏறக்குறைய பதினைந்து பதினாறு வயது விடலைப்பருவத்தோன்; மற்றையது, ஆறேழு வயதுப் பாலகன். பாலகனின் முன்னால், ஓர் நீண்ட கறுப்புக்கைக்குட்டை (அது, தலையிலே நாகரீகம் என்று அந்ரே அகாஸி கட்டிக்கொள்வது போன்ற 'பந்தனா' வகைப்பட்ட துணி என்று அவள் சொன்னாள்); மற்றவன் முன்னாலே கிடந்தது, மெக்ஸிக்கன் பாட்டுக்குழுக்கள் பயன்படுத்தும்வகையான தொப்பியாக இருக்கலாம் என்று அவன் எண்ணிக்கொண்டான். &lt;br /&gt;&lt;br /&gt;பாதத்தையும் குதியையும் நிலத்திலே தட்டித்தட்டி ஆடும் ஆட்டத்தை முகமெல்லாம் கறுப்புப்பூசிய வெள்ளை அல் ஜோன்ஸனின் படத்திலும் பிரெட் அஸெயர் படங்களிலும் பார்த்துவிட்டுவந்து இங்கே அதை எதிர்பார்த்து வருகின்ற சுற்றுலாப்பயணிகள் திருப்தியோடு திரும்பிப்போகின்றார்களா என்பது என்னைப் போலவே அவனுக்கும் தெரியாது. சில சந்தர்ப்பங்களிலே, அவனது சில நண்பர்கள் இந்த வகை நடனத்தில் உள்ள குதி, பெருவிரல் அசைவுகள், கால் மாற்றி ஆடுதல், நிலம் தட்டுகையின் மீடிறன், சுழிப்பு, தூரிகை, துள்ளல், முறிப்பு, பாதமூட்டு சுழல்வு என்பனவற்றினைப் பற்றியும் அவற்றின் இணைப்பு பற்றியும் அவனுக்கு விளக்கிச் சொல்லமுயன்றதுண்டு. ஆனாலும், அவனுக்கு அவை ஏறவில்லை. ஆக, அவனுக்கு, இயல்பினிலே உள்ள அழகுணர்வு மட்டுமே ஆட்டக்காரனது கற்பனை வெளிப்பாட்டிலும்  நளினத்தினதும் கண்ணைப் பதியவைத்து இது தனக்குப் பிடித்திருக்கின்றது/பிடிக்கவில்லை என்று சொல்ல வைத்திருக்கின்றது; அதற்குமேலே, எந்த ஒரு கலையையும் பற்றி தீர்மானமாக நல்லது கெட்டது சொல்ல அதைப் பற்றிய சொந்தப்பயிற்சி கொஞ்சம் அவசியம் என்று அவனுக்குத் தோன்றும். அவன் மனைவியின் கருத்து என்னவென்று அவள் வெளிப்படையாகச் சொல்வதில்லை. பிடித்திருந்தால், அவளின் முகத்திலே ஒரு வெளிச்சம் மினுக்கும்; இல்லாவிட்டால், "நகர்வோமா?" என்ற கேள்வி தொக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;பயிற்சியின் காரணமோ அல்லது இயற்கையிலேயே இருக்கும் திறமையின் காரணமோ, விடலைப்பையனின் ஆட்டத்துடன் மூவரும் மிகவும் ஒன்றிப் போகக்கூடியதாக இருந்தது. குறிப்பாக, அவன் நிதானமாக இட்ட ஒரு முழுத்தட்டுக்குப் பின்னால்,  விரைந்து ஒரு சீரான தொடராக குதிப்பும் பெருவிரலின் நில அரைத்தட்டும் என்று விழுந்த கணங்கள், இவையும் நண்பனையுமே தத்தம் கால்களைத் தட்ட வைத்ததுடன் ஓரிருமுறை விரல்களைக் கொண்டு உந்தவும் செய்யத்தள்ளியது. இவனின் மனைவி இதைப் பார்த்து சிரித்துக்கொண்டாள். அவள் மட்டுமல்ல, இப்படி செய்யும் எந்த நாற்பத்தைந்து வயது மனிதனின் மனைவியும் சிரிக்கத்தான் செய்வாள். அந்தக்காய்ப்பருவப்பையனுடைய சப்பாத்துக்களும் சிறியவனின் சப்பாத்துக்களைப் போலவே, சத்தம் எழுப்புவதற்கு அடிப்படையான அடிலாடங்களைக் கொண்டிருக்கவில்லை; அதற்குப் பதிலாக, இருவருமே குளிர்பான, மதுப்போத்தலின் மூடிகளை ஏதோ விதத்திலே தத்தம் தேவைக்கேற்ற வகையிலே உருமாற்றிப் பொருத்திக் கொண்டு ஆடிக்கொண்டிருந்தார்கள். அதனால், அவற்றிலேதும் கழன்றுவிடும் சமயங்களிலே நின்று நிதானமாகச் செருகியிருந்த இடத்திலே பொருத்தி, மீள ஆடவேண்டி இருந்தது. அது நடனத்திலே அடிக்கடி தொய்வினை ஏற்படுத்திக் கொண்டிருந்தாலும், அந்த நடனம் நளினத்துடன் இவர்களுள்ளே  ஓர் உற்சாகத்தை மூன்று மணிநேர நடைச்சோர்வுடன்கூடிய மனநிலைக்குத் தந்தது என்பதிலே ஐயமில்லை. ஆனால், இவன் நண்பனுக்கும் மனைவிக்கும் வெறுப்பைத் தந்தது என்னவென்றால், அந்த இரண்டும் கெட்டான் வயது ஆட்டக்காரனின் பொறுமையின்மையும் பணவேட்கையுமே. &lt;br /&gt;&lt;br /&gt;அந்த ஆட்டக்காரன் தொப்பிக்குள்ளே கணிசமான அளவு சில்லறையும் ஒற்றை ஐந்து டொலர் நோட்டுக்களும் இருந்தாலும்கூட, கொஞ்சம் தள்ளி ஆடிக்கொண்டிருந்த சிறுவனின் கைக்குட்டையிலே இவனின் வருவாயோடு ஒப்பிட்டு நோக்குகையிலே நிரம்பி வழிந்து கொண்டிருந்தது எனலாம். இது விடலைக்குப் பொறுக்கவில்லை; எல்லோரும் தன்னுடைய ஆட்டத்தைப் பார்த்துவிட்டு, பணத்தை மட்டும் சிறுவனுக்குப் போட்டு விட்டுப் போகின்றார்கள் என்றும் அது நியாயமில்லை என்றும் இடைக்கிடையே ஆட்டத்திற்கு இடையிலே நின்று நின்று கத்திக்கொண்டிருந்தான்; சில வேளைகளிலே சிறுவனின் கைக்குட்டையிலே யாராவது பணம் போட்டுவிட்டுச் சென்றால், அப்படிப்போட்டவர் தன்னுடைய நடனத்தினையே பார்த்துக் கொண்டிருந்தவர் என்றும், ஆனால் பணத்தை மட்டும் சிறுவனுக்குப் போட்டுவிட்டுப்போகின்றார் என்றும் குறைகூறிக் கொண்டு, சிறுவனின் கைக்குட்டையிலிருந்து அந்த டொலர்க்காகிதத்தை எடுக்கவும் முயன்றான்; அப்படியான கணங்களிலே சிறுவன்  தன்னுடைய ஆடமுயலும் செய்கையை நிறுத்திவிட்டு, தன் கைக்குட்டைக்குமுன்னால் குனிந்து போராடவோ அழவோ முயற்சித்துக்கொண்டிருந்தான். கூடியிருந்தவர்கள், பெரியவனை ஏசினார்கள்; அல்லது, சிறியவனுக்கு மேலும் சில சில்லறையை வீசினார்கள். பெரியவனின் உள்ளத்தின் ஆத்திரம், அவனது ஆட்டத்தின் துடியிலே தெரிந்தது. இன்னமும் அவனை யாராவது இவ்வாறு சூடேற்றினால் நல்லது என்று இவன் எண்ணிக்கொண்டான். &lt;br /&gt;&lt;br /&gt;விடலை சொல்கின்றதிலும் ஓரளவு நியாயம் இருக்காமல் இல்லை; சிறுவன் ஆடினான் என்பதிலும்விட ஆடமுயற்சித்தான் என்கின்றதே சரியாக இருந்தது; ஓரிரு சந்தர்ப்பங்களிலே  விழவும் செய்தான். மக்கள், "ச்தோ! பரிதாபம்" என்றார்கள்; பணத்தைப் போட்டார்கள்; பிறகு, சிறுவனின் பரிதாபத்தைப் பார்க்கமுடியாமல் முகத்தைத் திருப்பி, பெரியவனின் நளினத்திலும் குதிப்பிலும் ஒன்றினார்கள்; பேசாமல் திரும்பிப்போனார்கள். அவள் மட்டும் சிறுவனை உற்று உற்றுப் பார்த்து கண்ணைக் கலக்கினாள்... தனக்கொரு குழந்தை இருந்தால், அவனும் இப்படித்தான் நடனமாடலாம் என்று ஒரு நாற்பது வயதுக்காரி கலங்குவது சாதாரணவிடயம்தான். கடைசியிலே இரு ஆட்டக்காரர்களும் சோர்ந்துபோய், அவரவர்க்குச் சேர்ந்ததை எண்ணிக்கொண்டிருந்தபோது, இவன் காசைப் பெரியவனுக்கே போட்டான்; நண்பன், சிறுவனுக்குப் போட்டான்....அஃது இவனது மனைவிக்குச் சரியென்று பட்டது; இவனுக்கும் விடலைக்கும் முற்றாகப் பிடிக்கவில்லை. ஆட்டம் நின்றதால், பசி தெரிந்தது. திரும்பி நடந்தனர்; இவனின் நண்பன் கொடுத்த பணத்திற்கு சிறுவனும் பெரியவனும் அடிபிடி செய்து கொண்டு இருப்பது, பின்னாலே கேட்டது; சிறியபையன், இவன் நண்பனைத் தனக்காக பெரியவனிடம் பேசும்படி அழைத்ததும் கேட்டது; இவன் மனைவியும் நண்பனும் இடைத்தரகம் செய்யத் திரும்பிப் போனார்கள்; இவனுக்கு ஆத்திரமாக வந்தது. காலை நிலத்திலே ஓங்கிக் உதைத்தான்; வலித்தது; மனைவி திரும்ப வந்தபோது, பிரச்சனையைத் தீர்க்க, பெரியவனுக்கு அவள் திரும்ப ஒரு டொலர் கொடுக்கவேண்டியதாயிற்று என்றாள்; இப்போது, உதைக்காமலே வலித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இவனுக்கு பேர்பன் வீதியிலே ஒரு குறிப்பிட்ட கடை, நீயூ ஓர்லியன்ஸ் உணவுக்குப் பிரபல்யமானது என்பது தெரியும்; பொதுவாக, நண்பர்கள் வந்தால், பிரெஞ்சுச்சத்துக்கத்தைச் சுற்றிமுடித்தவுடன் அந்தக்கடைக்கே உணவுக்கு அழைத்துப்போய் அன்றையச் சுற்றுலாவை முடிப்பது வழக்கம். திரும்பி வரும்போது, இவன் நண்பனிடம் சிறிய பையனுக்குப் பணத்தினைக் கொடுத்திருக்ககூடாது என்றான். நண்பன் கொஞ்சம் கடுமையாக 'ஏன்?' என்று எடுத்தெறிந்து கேட்டான். "நீ ஒருபோதும் சிறியபையனின் ஆட்டத்தைப் பார்க்கவில்லை; முழுக்கமுழுக்க பெரியவனின் உழைப்பிலே விளைந்த அழகான நடனங்களைப் பார்த்துவிட்டு எப்படி நீ ஒரு கேவலமானவன்போல சிறியவனுக்குப் பணத்தை விட்டெறிந்துவிட்டு வரலாம்?" - இவன் ஆத்திரமாகவே சொன்னான்; "பெரியவனுக்கு நீ கொடுத்தாய்தானே? மற்றவனுக்கு நான் கொடுத்தால் ஆகிற்று; அது நியாயம்தான்" என்று அவனும் சூடானான். இந்தத் தர்க்கம் நியாயமாக இவனுக்குப் படவில்லை; "நான் உனக்காகப் பார்க்கவில்லை; எனக்காகப் பார்த்தேன்; அதற்காக நான் கொடுக்கவேண்டிய கூலியைக் கொடுத்தேன்; நீ பார்த்ததற்கும் சேர்த்துத்தான் நான் கொடுத்தேன் என்று நீ நினைப்பது எந்த வகை நியாயப்படுத்தல்?" - எகிறியபோது, ஊர் சுற்றிப்பார்க்க வந்திருந்தவன், "இப்படி நியாயம் அநியாயம் என்று வகைபடுத்தினால், சிறுபையன் இந்த வயதிலே ஆடுகின்றான்; எத்தனை தடவை விழுந்தான் என்று பார்த்தாயா? எங்களின் இந்த வயதிலே நாங்கள் எங்களை வாழவைக்க நாங்களே உழைக்கவேண்டிய அவல நிலையிலே இல்லை என்பதை எண்ணிப் பார்க்கும் போது, அவனின் நிலையையும் இயற்கை எங்களை அந்த அளவிலே கொடுத்துவைத்தவர்களாக வைத்திருப்பதையும் எண்ணும் எவனுக்கும், காசைக் கொடுக்காமல் வரமுடியுமா?" அழுத்தமாகக் கூறினான்; இவன் மனைவியும் அதை முழுதாக ஆமோதித்தாள்; அவளுக்கு எந்தக்குழந்தை ஆடினாலும் எந்த வயோதிபர் அழுதாலும் இதே பதிலைத்தான் சொல்ல வரும்.   &lt;br /&gt;&lt;br /&gt;இவன் நமுட்டுச்சிரிப்பு ஒன்றை உதிர்த்துவிட்டு, செயின்ஸ் லூயிஸ் வீதி-பேர்பன் வீதி முடக்கிலே திரும்பும் போது வினாவினான்; "அதாவது, சிறுபிள்ளைகள் வேலை செய்கின்றதை நீ ஆதரிக்கின்றாய்; ஊக்குவிக்கின்றாய்; நீ அதைத்தான் சொல்லவருகின்றாய் என்று உன் கருத்தினை நான் அர்த்தப்படுத்திக்கொள்ளலாமா?" நண்பன், கொஞ்சம் அரசியல் இடதுபக்கச்சாய்வுள்ளவன்; அண்மையிலே சியாட்டிலிலே நடந்த உலக வர்த்தகம் சம்பந்தப்பட்ட மகாநாட்டினைப் பற்றி மிகவும் கடுமையான மின் அஞ்சல்களை -அதனுடன் சம்பந்தப்படாத, அது என்ன விடயமென்றே தெரியாத- நண்பர்களுக்கும் அனுப்பிக் கொண்டிருக்கின்றான் என்பது பொதுநண்பர்கள் வட்டாரத்திலே உள்ளகுறை. சிறுவருழைப்பு என்பதற்கு கொஞ்சம் எதிரானவன். பாக்கிஸ்தான், இந்தோனேசியா போன்ற நாடுகளிலே ஆலைகள் வைத்திருக்கும் நைக்கி போன்ற பன்னாட்டுத்தொழில்நிறுவனங்களின்மீது தீராத கோபம் அவனுக்கு உண்டு என்று இவனுக்குத் தெரியும். &lt;br /&gt;&lt;br /&gt;நண்பன் கொஞ்சம் கலங்கித்தான் போய்விட்டான். பின் சிறிதுநேர யோசனைப்பிறகு, உணவுக்கடையினுள்ளே மாடிப்படியிலே ஏறும்போது மெதுவாகக் கேட்டான்; "சரி, நான் போட்டது தவறுதான்; ஆனால், இரண்டு விடயங்களை யோசித்துப்பார்; சிறியவன் சந்திமுனைகளிலே நின்று, சதம், காற்பணம் தா என்று பிச்சை கேட்காமல், கொஞ்சம் தானே உழைத்துச் சம்பாதிக்க முயல்கின்றான். எங்கள் நாட்டிலே உள்ளதுபோல, இங்கு அவனை எந்தத் தொழில்நிறுவனமும் அவன் இயலாமையை எண்ணி வஞ்சிக்கவில்லை.... அவனின் பெற்றோரின் வஞ்சிப்பு ஏதோ விதத்திலே இருக்கின்றது என்றால்கூட... அந்த உழைக்க முயலும் தன்னம்பிக்கையை ஊக்கப்படுத்த வேண்டாமா? பதினாறு வயதுக்காரன் வீதியிலே இதையே வருங்காலத்திலே தொழிலாகக் கொண்டு தன்னைக் குறுக்கக்கூடாது என்று நீ அவனின் உற்சாகத்தை வடிக்க வேண்டும்" என்றான்; இவன் மனைவி வேறு போதாக்குறைக்கு, "அந்த சிறுவனுக்குக் காசைக் கொடுக்காது அத பெரிய பையனிடம் பயந்து பயந்து கெஞ்சி நிற்க வைத்து வந்துவிட்டு, இங்கே நாங்கள் நிம்மதியாகச் சாப்பிடமுடியுமா?" என்று தன் பங்குக்கு ஒரு வாதத்தைப் போட்டாள். &lt;br /&gt;&lt;br /&gt;பரிசாரகன் வந்து பட்டியலைக் கொடுத்துவிட்டு உண்ண வேண்டியதைத் தேர்வு செய்யும்படி சொல்லிவிட்டுப் போனான்; அவலைத் தெரிவுசெய்யச் சொல்லிவிட்டு இவர்கள் இருவரும் தொடர்ந்து வாக்குவாதப்பட்டுக்கொண்டே இருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இவன், "அப்படியானால், பெரியவனின் நடனத்தைப் பார்ப்பதற்காக நாம் அங்கே தரித்திருக்கக்கூடாது" என்று இன்னொரு கோணத்திலே தொடங்கினான். நண்பன், "கலையும் பரிதாபமும் வேறு வேறு என்றும் இரண்டுக்குமே நாங்கள் அவையவைக்குரிய இடத்தைக் கொடுக்கவேண்டும்" என்ற நிலையிலே வாதாடினான். சாப்பிட்டு முடிந்து பணத்தைக் கொடுத்துவிட்டு, நடந்து வீட்டுக்குப் போக 'டிராம்' வண்டி எடுக்கும் இடம் வரைக்கும் நடந்தபோதும் மூவரும் இதையே பற்றி வாதாடினார்கள்..... இவன், பெரிய பையனின் உழைப்பினை மதிக்க வேண்டுமென்றும் அவனின் உழைப்பு, அருகே நின்று கொண்டிருந்ததாலும் வயது எழுப்பிய பரிதாபம் காரணமாகவும் சிறுவனுக்குப் போகக்கூடாதென்றும் சொந்த மொழியிலே அடித்துச் சொன்னான்; பல வேளைகளிலே அருகாமையிலே வீதியிலே சென்றவர்கள் மூவரையும் திரும்பிப் பார்த்தார்கள்; இவனது மனைவியும் நண்பனுமோ, சிறிய பையனின் வயதின் பரிதாபமும் சொந்தக்காலிலே நிற்கவேண்டுமென்ற உணர்வும் கணக்கிலெடுக்கப்படவேண்டுமென்றும் பெரியவனின் இந்தத்தொழில் மீதான ஈடுபாடு அவனின் எதிர்க்காலம் கருதிக் குறைக்கப்படவேண்டுமென்றும் வாதாடினார்கள்; அவர்கள் பேசியபோதும், வீதியிலே தனி ஆவர்த்தனம் வாசித்துகொண்டிருந்த சக்ஸபோன் வாத்தியக்காரர், கிற்றார் வாத்தியக்காரர், புல்லாங்குழல் வாசிக்கிறவர், ஏதாவது கடை பியருக்கு விளம்பரம் தூக்கிக்கொண்டிருந்தவர்கள் எல்லோரும் தத்தம் இலயிப்பினைக் கொஞ்சம் நேரம் மறந்துவிட்டு மூவரையும் உற்றுப்பார்த்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;கனால் வீதி வந்தபோது, 'டிராம்' வண்டியிலே ஏறமுன்னர், சிறுநீர் கழித்துவிட்டுப் போவது உசிதமான காரியமாக இவனுக்குப் பட்டது. பக்கத்திலே இருந்த 'மக்டொனால்ட்ஸ்' உணவுச்சாலை வீதியோரமாக பூந்தொட்டிகளுக்கு அருகாமையிலே மேசையொன்றிலே மற்ற இருவரையும் இருக்கச் சொல்லிவிட்டு, உள்ளே சிறுநீர் கழிக்கப்போனான். போகும்போதும் இவன் பெரிய பையனுக்கு ஆதரவாக ஏதோ சொல்லிக்கொண்டுபோக, நண்பன் மாற்றுநிலைப்பாட்டிலிருந்து ஏதோ பதில் கொடுத்தான். சிறுநீர் கழித்துக்கொண்டிருக்கும்போதும் கைகளைக் கழுவிவிட்டு வரும்போதும் நண்பன் சொன்னதற்குப் பதிலடியைத் தனக்குள்ளே தீவிரமாகத் தயாரித்துக்கொண்டிருந்தவன், வந்து உட்காரும்போதே, தன் பதிலைச் சொல்லத்தொடங்கினான். &lt;br /&gt;&lt;br /&gt;"சத்தம்போடாதே" என்ற ரீதியிலே சைகைகாட்டிய நண்பனையும் இவன் மனைவியையும் பார்த்து விழித்த இவனுக்கு கொஞ்சம் தள்ளியிருந்த மேசையினை நண்பன் சுட்டிக்காட்டினான்.&lt;br /&gt;&lt;br /&gt;திரும்பிப் பார்த்தபோது, தட்டொலிநடனமாடிய சிறுவனும் பெரியவனும் ஆளாளுக்குச் சேர்ந்த தொகையை, அந்த மேசையிலே மொத்தமாகக் குவித்து எண்ணிக்கொண்டு, 'அப்பிள் பை'யும் 'ஸ்ரோபரி சண்டி'யும் குடித்துக் கொண்டிருப்பது தெரிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;'00 ஏப்ரில், 13 வியாழன் 19:05 மநிநே. &lt;/em&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7096896-111242894336946729?l=punaivu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://punaivu.blogspot.com/feeds/111242894336946729/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7096896&amp;postID=111242894336946729' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7096896/posts/default/111242894336946729'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7096896/posts/default/111242894336946729'/><link rel='alternate' type='text/html' href='http://punaivu.blogspot.com/2005/04/blog-post.html' title='தட்டாட்டம்'/><author><name>-/பெயரிலி.</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='26' src='http://4.bp.blogspot.com/_OBFBfYawg8g/S8-wCagZnxI/AAAAAAAACCI/5ty9S8m_Ooc/S220/Abg_peyaB.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7096896.post-111146905280935795</id><published>2005-03-22T00:17:00.000-05:00</published><updated>2005-03-22T00:24:12.826-05:00</updated><title type='text'>தெநா. மே. உந. உபோ. உவீ.</title><content type='html'>&lt;strong&gt;தெருநாய்களின் மேலொரு உரைநடையும் உடைத்துப்போட்ட உரைவீச்சும்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#3333ff;"&gt;கடி வேட்டை நாய்களுக்கெதிரான&lt;br /&gt;என் வேக ஓட்டத்தின் பின் தொடரும்,&lt;br /&gt;தெரு வீதி நொண்டி நாய்களுக்கெதிரான&lt;br /&gt;கால் வீச்சு உதையும் கல்வீச்சு நிகழ்வும்.&lt;br /&gt;&lt;br /&gt;நேற்றைக்கிதுபோல,&lt;br /&gt;இன்றைய நேரத்திற்கிதுபோல,&lt;br /&gt;நினைவுக்கெட்டிய நாளெல்லாம் இதுபோல...&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;()()()()()()()()()()&lt;br /&gt;&lt;br /&gt;எங்கள் வீட்டிலே நாய் வளர்க்க எப்போதும் அனுமதியில்லை. குதறிக்கடிக்கும் விலங்கு என்பதிலும்விட வரவேற்பறை தொட்டு சமையலறை, படுக்கையறை எல்லாம் தன் சொந்தப்பிரதேசம் என்று அதன் வர்க்கம் எண்ணிக்கொண்டு இருக்கலாமென்று எங்கள் வீட்டில் எண்ணிக் கொண்டிருந்தார்கள்; எங்களுக்கும் சொல்லிக்கொண்டிருந்தார்கள். உண்மை பொய் தெரியாது; ஏனென்றால், எங்கள் வீட்டிலே எப்போதும் நாய் வளர்க்க அனுமதியில்லை. ஆனால், நாய் வளர்க்க அனுமதியில்லை என்பது நாய் வர அனுமதியில்லை என்று பொருள்படும் என்று நீங்கள் எண்ணிவிடக்கூடாது. அதற்கு ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் வீட்டுவாசல்வரை வர அனுமதியுண்டு. அன்றைய தான்யதானத்துக்குக் காலித்தனமான தெருநாய்கள் எல்லாம் புளியடிப்பைரவமூர்த்திக்கு நன்றியுடையவைகளாக இருக்கவேண்டும். எவராலும் கவனிக்கப்படாத தான் கவனிக்கப்படுவதற்கு வைரவமூர்த்தி எங்கள் வீட்டைச் சுற்றிச் சுற்றி இரவில் அந்த நாய்களும் வரவிட்டாமற் காவலுக்குப் போயிருக்கவேண்டும். இதுதான் எவருமே கையொப்பமும் இடாமல், பேச்சளவிலும் சொல்லிக்கொள்ளாமல் நம்பிக்கை அடிப்படையில் நடைமுறையில் வைத்திருக்கும் ஒப்பந்தம். வைரவர் வந்து போகிறார் என்பது மேல்மட்டத்தின் ஐதீகம். கீழ்மட்டத்துக்குப் பயம்; இடைமட்டத்துக்கு ஐயம். ஆனால், வீட்டளவிலும் ஜனநாயகம் என்பது துரதிர்ஷ்டவசமாக, மூன்றில் இரண்டு பங்கு வாக்கு&lt;br /&gt;விகிதத்தில் மட்டுமே ஏற்கப்பட்டு உறுதியாகப்படுகின்றது என்பது வெட்கத்துக்குரிய விடயம்.&lt;br /&gt;&lt;br /&gt;அழைத்துவரப்படும் நாய் அதெற்கென ஒதுக்கப்பட்ட கோப்பைக்குட் போடப்பட்டது எதுவானாலும் அத்தனையையும் அப்படியே காலி பண்ணிவிட்டே போயாகவேண்டும். இலைதழை சாப்பிட அது விரும்பாவிட்டால், விலங்கியலில் விஞ்ஞானமாணிப்பட்டம் பெற்ற வீடுத்தலைமட்டத்தின் அபிப்பிராயத்தின்படி, மாமிசபட்சணியின் இயற்கை என்றோ அல்லது குறைந்தபட்சம் நாயினது, எங்கோ சாப்பிட்ட நேற்றைய மீன்தலையின் சமிபாடடையாக்குணமென்றோ கருதப்படமாட்டாது. அந்த நாய்ப்போக்கு, நாயின் திமிர்த்தனத்துக்கும் அலட்சியப்போக்குக்குமே எடுத்துக்காட்டு ஆகுமாம். ஆனால், ஞாயிற்றுக்கிழமைகளில் ஏதாவது ஒரு தெருநாய் அதற்கான தட்டில், அதெற்கென்று போடப்பட்ட இலைதழைச்சோற்றை பிரதோஷ, வைகுந்தஏகாதேசி விரதகாரன் மாதிரி முழுவதுமாகக் கட்டாயமாகச் சாப்பிட்டே கவேண்டும். கொஞ்சம் விரிவுபடுத்திச் சொல்லப்போனால், தெருநாய் சாப்பிடாவிட்டால், அதை அன்றைக்கு ஏதாவதொரு சைவமுட்டையினாலான பதார்த்தத்தைக் காட்டி (நாய்களுக்கு முட்டையிலே சைவமுட்டை, அசைவமுட்டை என்ற பேதம் இல்லை என்பது என் தாழ்மையான அனுபவரீதியான கருத்து என்பதையும் இந்தநேரத்தில் நீங்கள் கருத்தில் எடுத்துக் கொள்ளவேண்டும். ஏனென்றால், இந்த உரைநடையையும் உரைவீச்சையும் வாசித்து முடித்த பின், நான் இங்கே நீதியெதையும் சொல்லவில்லை என்று குறை கண்ட உணர்வோடு ஏமாற்றமடைந்துவிடக்கூடாது என்பதில் நான் கவலை கொண்டிருக்கின்றேன்), வீட்டுக்கு அழைத்து வந்த எனது, ஏதோவிதமான மறைமுகமான தூண்டுதலின் தூண்டற்பேறாக விலங்கியல் விஞ்ஞானமாணிக்கும் அவரின் தலையாட்டிப் பிரதி சனாதிபதிக்கும் தோன்றாத ஞாயிறுகள் எனக்குமுன்னே தோன்றிக் கழிந்ததில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;கிளர்ச்சிக்காரர்களின் தலைவர்களை அடையாளம் காண்பது, வசப்படுத்துவது என்பன கீழ்மட்டக்கலகக்காரகளின் களச்செயற்பாடுகளில் மாற்றங்களை, தடுமாற்றங்களைக் கொண்டு வருவதற்கான ஆக்கபூர்வமான ஒரு யுத்ததந்திரம். மேலும், கலகக்காரர்களுக்குப் பொதுவாக ரம்பங்களிற் தலைவர்கள் இருப்பதில்லை. அப்படி எவர்களும் உலாவியும் காணப்படுவதில்லை. ஆக, இன்னாராகத்தான் இருக்கமுடியும் என்று சந்தேகப்பட்டு யாரோ ஓரிரு பேரை அரசு கண்டுபிடித்து அறிவிப்பதே கலகக்காரர்களுக்கு ஓர் ஒழுங்கான தலைமைப்பீடத்தையும் கலகத்துக்கு ஒரு செயல்நோக்கத்தையும் கலகக்குழுவிற்கு ஓர் இயக்கவடிவமைப்பினையும் ஏற்படுத்தி, தன்னைக் குற்றங்களிலிருந்து விடுதலை பண்ணும் என்பது எல்லா அரசுகளூக்கும் தெரியும். அதன்பின், செயற்திட்டம், இயக்கவளர்ச்சி என்பன, அடையாளம் காணப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட தலைமைப்பீடத்தின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப மாறுபடலாம். இந்தளவில் எனது விளையாட்டுக் கண்ணாடிக்குண்டுகளுக்கும் துடுப்புமட்டைக்கும் தண்ணீர்த்தொட்டித் தங்கமீன்களுக்குமான தேவைகட்கு மீளக் குறைந்த வட்டியுடன்கூடத் திருப்பிச் செலுத்தத்தேவையில்லா நிதியுதவி கிடைப்பதற்கு நான் தெரு நாய்களுக்கு நன்றியுடையவன்.&lt;br /&gt;&lt;br /&gt;மேல்மட்டம் சாப்பிடமறுக்கும் கீழ்மட்டங்களினைச் சரிப்பண்ண வைக்கும் தந்திரத்தை நான் நாய்களுக்கும் வாய்ப்புப் பார்க்க அனுமதியுண்டு. இருப்பதைச் சாப்பிடமறுக்கும் கொடூரத்தனம் மிக்கவர்களுக்கு, சை காட்டிப் புசிக்கப்பண்ண, கொடுப்பதற்குள் அவர்களுக்குப் பிடித்தவற்றைக் கலந்து கொடுக்கமுடியும். சைவமுட்டைக் கேக் கலந்த இலைதழைச்சோற்றைக் கலப்பது காணாத நாய்கூட, மயக்கமருந்து கலந்த மதுவைத் தேடித் தேர்ந்தெடுத்துப் பருகிவிட்டு, "தப்புப்பண்ணிவிட்டேன் கதாநாயகி" என்று வீட்டு + வீதி மூலைகட்கு மூலை எருமை மாதிரி முட்டிக்கொண்டு பாட்டுப்பாடும் திரைப்படநாயகன் மாதிரி, தேடித்தின்னும். ஆனால், எல்லா உற்சவங்களும் நடந்து முடிந்தப்பிறகு, கலந்த குற்றத்திற்கு, கந்தன் சூரனைக் காத்திருந்து கொல்லப் பார்த்திருந்து ஆரவாரித்த பக்தர்கள்போல, கிணற்றடியில் முதல்வாளித்தண்ணீர் யாராவது அள்ளி என்னில் ஊற்றியபின், பின் நானே குளித்துவிட்டபின்னரே, வீட்டுக்குள்போக எனக்கு அருகதையுண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், நாய்களுக்கு இத்தத்துவத்தை வாய்ப்புப்பார்ப்பது என்னும்போது, இடத்துக்கும் உயிரினத்துக்குமான திருத்தங்களினை வீட்டுக்கீழ்மட்டங்களுக்காக ஏற்படுத்தப்பட்ட சூத்திரத்திற் பண்ணவேண்டும். மேல்மட்டம் கலப்பதைத் தாங்கள் காணாததுபோலப் பாவனை பண்ணுவதை மேல்மட்டம் காணாதது போலப் பாவனை பண்ணவேண்டும் என்பது, கீழ்மட்டத்தின் எதிர்பார்ப்பும் அதனூடாக எப்போதும் ஒப்பந்தம் கிழியலாம் என்ற எச்சரிக்கையும். நாய்களோ, தங்களுக்காகவே இடைமட்டங்கள் (சைவ)முட்டையைக் கலக்கின்றன என்பதைத் தாங்கள் கண்டுகொண்டிருப்பதை, இடைமட்டங்களும் கண்டு கொள்ளவேண்டும் என்பதை ஒப்பந்த முதல்நிபந்தனையாக முற்போடும்.&lt;br /&gt;&lt;br /&gt;#######################&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#3333ff;"&gt;வேட்டை நாய்கள் பற்கள் போன்றே,&lt;br /&gt;கொடும் கூரானவை,&lt;br /&gt;அவைதம் மூளைக் கலங்கள், நரம்புகள்;&lt;br /&gt;முளைகள் எல்லாம் முன்னே முட்கள் பிசிறி,&lt;br /&gt;சண்டைச்சேவல் கொண்டைகளாய் சிலும்பி...&lt;br /&gt;&lt;br /&gt;அவற்றின் சித்தத்தில்,&lt;br /&gt;மனிதர், கோழி&lt;br /&gt;சதைகளும் எலும்புகளுமே&lt;br /&gt;கொழித்துக்&lt;br /&gt;குலுங்கிப்&lt;br /&gt;பிதுங்கும்&lt;br /&gt;சமையற்குறிப்புப்புத்தக&lt;br /&gt;வண்ண வரைபடங்களாக.&lt;br /&gt;&lt;br /&gt;நொண்டி நாய்களோ,&lt;br /&gt;உடல் போலவே மனதாலும் நொந்துபோனவை.&lt;br /&gt;நாளைப் பொழுது உணவு கிடைக்கும் வரை&lt;br /&gt;நக்கிக்கொண்டிருக்கும் தம் நாட்பட்ட உடற்புண்கள்.&lt;br /&gt;கல்லடி பட்டாலும் காலுதை பட்டாலும்&lt;br /&gt;மெல்லத் தம்முள் வருந்திக் கொண்டு&lt;br /&gt;தெரு மூலைக்குட் பதுங்கும்;&lt;br /&gt;நாட்பட்ட சோறோ,&lt;br /&gt;இல்லை,&lt;br /&gt;ஈரப்பதம் செத்த ரொட்டியோ&lt;br /&gt;மட்டும் நிலைத்து நிற்கும்&lt;br /&gt;அவை சித்தத்தே.&lt;br /&gt;&lt;br /&gt;இவற்றின் இடைப்பட்ட,&lt;br /&gt;துவிச்சக்கரப் பயணி நான்.&lt;br /&gt;எனது பயணத்தில்,&lt;br /&gt;வேட்டைநாய்களின் காட்டினிலே,&lt;br /&gt;நான் ஒரு நொண்டி நாய்.&lt;br /&gt;முட ஞமலிகள் தெருக்களினிலே,&lt;br /&gt;நான் ஒரு கூரான கடி விலங்கு.&lt;br /&gt;&lt;/span&gt;()()()()()()()()()()&lt;br /&gt;&lt;br /&gt;ஞாயிற்றுக்கிழமை தெருநாய் அழைப்பிலும்கூட எனக்கு, எதேச்சைத்தேடல் நிகழ்த்தும்படியோ, 'கண்ணில் முதற்படும் மிருகம் இன்று முதற் புசிக்கும்' என்ற அந்நாளைய கூப்பன்கடைவரிசை&lt;br /&gt;மனிதத்தேற்றத்தைப் பயன்படுத்தும்படியோ கட்டளையிருக்கும். இதற்கு, ஒரே ஞமலி தொடர்ந்து இரண்டு வாரங்கள், மூன்று வாரங்கள் உண்டால், விளையாட்டுப்பந்தய விக்கட் வீழ்ச்சிபோல, சரித்திர சாதனையாகி விடும் என்பதல்ல காரணம் என்பதை நான் மிக நன்கு அறிந்திருந்ததால், கடைகளிற் பொருட்கள் வாங்கும்போது பயன்படுத்தும் விற்பனைத்தத்துவத்தை எங்கள் வீட்டிற்கும் வைரவர் பயன்படுத்திவிடுவாரோ என்று மேல்மட்ட அங்கத்தவர்கள் அஞ்சுவதாக நான் சந்தேகப்பட்டேன். ஒரே பொருளை ஒன்றுக்கு மேலே வாங்கினால், பொருளுக்கான விலை கழிவோடு, குறைக்கப்பட்டுவிடலாம். அதனால், வாரத்துக்கு வாரம் வேறு வேறு நாயாகப் பார்த்துப்பிடிக்கவேண்டும் என்று அபிப்பிராயப்பட்டது மேல்மட்டம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு சமயம், வைரவர் அப்படியான வழிமுறையைக் கையாளாமல், 'பத்து எடுத்தால், பதினொன்றாவது இனாம்' என்று தரும் விலையைக் குறைக்காமல், ஆனால், பொருளைக் கூட்டும் யுத்தியைப் பயன்படுத்தவும் சந்தர்ப்பம் ஐம்பதற்கு ஐம்பது இருக்கின்றது என்று என் நிகழ்தகவியல் அறிவைப் பயன்படுத்தி ஒரு கருதுகோளை, ஒரு மேல்மட்டமும் இடைமட்டமும் இல்லாத முட்டுக்காய்ப்பருவமட்டம், வேறு ஒரு கடிதம் கொடுக்கும் போக்குவரத்துப் பண்ணும் காரணத்துக்காக, கொஞ்சம் என் மட்டத்திற்கு இறங்கி வந்த, அல்லது என்னைத் தன் மட்டத்திற்கு ஏற்றிக் கொண்ட நேரத்தில் முன்வைத்தேன். என் எடுகோளை, நிபந்தனை என்பதுபோல, எடுத்தமாத்திரத்தில் எகிறுகோள் பண்ணி, உணர்ச்சிவசப்பட்டு உடனடியாக நிராகரித்த முட்டுக்காய்மட்டம் தன் தேவையை இன்னும் கீழ்மட்டத்திற்கு இறங்கிப் போய்ப் பூர்த்தி செய்து கொண்டுவிட்டது. அன்று என் அதிகப்பிரசங்கித்தனத்தால், வாராவாராம் உபரியாக நிரந்திர வருமானம் தந்து கொண்டிருந்த ஒரு வாடிக்கையாளரை எனக்கு அடுத்த போட்டிச் சில்லறை வியாபாரிக்குக் காவு கொடுத்ததாக உணர்ந்து கொண்டதால், பிறகு வந்த காலங்களில் வாழ்க்கைக்கான கொள்கைகளையும் வயிற்றுக்கான வியாபாரங்களையும் வேறுவேறாகப் பிரித்து நடத்த வேண்டும் என்பதை உணர்ந்து கொண்டேன். பல நாய்கள் பிடிப்பதில் எனக்கென்ன கஷ்டம் இருக்கக்கூடும் என்று தெருநாய்களோடு சகவாசம் வைத்துக் கொள்ளாத சாரமான பிறவிகள் அல்லது பஞ்சுமெத்தைப்பைநாய்கள் வளர்க்கும் மேற்தட்டு ஜீவன்கள் கேட்கக்கூடும்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படிப்பட்ட பிறவிகளுக்கு, இதற்கான விளக்கத்தை, "நாய்களோடு சகவாசம் பண்ணுவது என்பது, மனிதனோடு சகவாசம் பண்ணுவது போன்ற அளவுக்குக் கஷ்டம் அற்றதுதான் என்றாலும்கூட மா கொய்யா மரங்களோடு சௌகரியமான சகவாசம் பண்ணிக்கொண்டிருக்கும் இடைத்தட்டுக்களுக்கு ஒப்பீட்டளவில் மிகமிகக் கஷ்டமானதாகும்" என்று விஞ்ஞானரீதியாகச் சார்பியற்தத்துவ ஒப்பீட்டளவிற் சொல்லுவதிற் தொடங்கலாம். ஆறாவது அறிவு இல்லை என்பது மட்டுமே நாய்களை நல்லதாக மாற்றி நியாயபூர்வமாகச் சிந்திக்கவைத்துவிடாது. மரங்கள் இப்போது ஏறி ஒரு கிளையை உடைத்துவிட்டோ அல்லது பேனாக்கத்தியினால், "எடி இவளெ, உயிர் போகும் வரைக்கும் உல்ளத்தின் உல்லே நீதான்" என்று விள்ளலாய் அட்சரப்பிறழ்வோடு எழுதிக்கிழித்தாலும் அடுத்த நிமிடநேரத்தில் மறந்துபோய், உணர்ச்சி மரத்துப்போய், இன்னொரு முறை கனியிருக்கக் காயிரண்டு கவர்ந்திருக்க ஆட்சேபணை பண்ணுவதில்லை. நாய்களோ ஆடி மாதத்தில் வீதியிற் புணர்கையிற் குறி வைத்துக் கல்லெறிந்தால், ஐப்பசி மழைக்கு முதல், காலில் ஒரு கல்லுக்கு ஒரு பல் என்ற விகிதத்திற் குறி வைக்க அனுமதி கொடுத்தாலொழிய, அதன்பிறகு ஆளுக்காள் சுமுகமான நட்பு தொடரமுடியாது என்ற மாதிரிக்கு எண்ணம் வைத்துக்கொண்டு ஒரு வகையான சுயமரியாதையை எதிர்பார்க்கும் ஜந்து. "கௌரவம் என்பது கேட்டுப் பெற்றுக் கொள்வதல்ல; சுயமே தன் நடத்தையினால் மற்றவர்களுள் ஏற்படுத்திக் கொள்ளும் விடயம் என்பது ஏன் ஒரு பெட்டைநாயைத் தேடி, அதற்காக தெருச்சண்டைகளுக்கும் முன்னிற்கும் சில காலி நாய்களுக்குப் புரியவில்லை என்பது எனக்குப் புரியவில்லை. இந்த நிலையில் 'எதேச்சைத்தேடல்களும்', 'முதல்வந்தது முன் வாரம் வந்திராவிடில், அதுவே இன்று இலைகுழை புசிக்கும்' என்ற நியதியோடும் நீதியோடும் எனக்கு முரண்பாடு நாய்கள் சம்பந்தப்பட்ட அளவில் உண்டு. விதிகளும் நெறிகளும் மனிதர்களின் தினவாழ்க்கைச் சௌகரியத்துக்காகவேயொழிய, வைரவரினது திருப்திக்கோ, அவரின் வாகனங்களின் திமிருக்கோ வளைந்ததாக அமைக்கப்படக்கூடாது என்று எனக்கிருந்த ஆழமான ஆட்சேபணையை, மேல்மட்டம் தன் 'வல்லரசுக்களுக்கான அதிகார மறுப்புவாக்கு'களைப் பயன்படுத்தித் தடைசெய்தது. இலாபகரமான "ஞாயிறுகளில் நாய் தேடும்" தொழிலைத் தாம் என்னிடமிருந்து கைப்பற்றிப் பெற்றுக் கொள்ள, கீழ்மட்டம், என் நாய்த்தர்க்கம் புரியாதபோதும், மேல்மட்டவாக்கை அப்படியே ஏற்றுக்கொண்டதாக பொதுச்சபையிற் கையைத் தூக்கியது. 'தக்கன பிழைக்கும்' என்பதாக அனுபவரீதியில் அறிந்திருந்த மற்றவீடுகளின் சக இடைமட்டங்களும் 'நடைமுறை வாழ்க்கையில் உண்மையைப் பேசினால் உருப்படவாய்ப்பில்லை' என்பதை உதாரணங்கள் மூலம் எனக்கு எடுத்துச் சொல்லினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;#######################&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#3333ff;"&gt;என் சிந்தனைத்தளத்தில்,&lt;br /&gt;கடி நாயோடு போராட முடியாது&lt;br /&gt;கடிவாளம் போட்டிருக்கும்&lt;br /&gt;அறிவு.&lt;br /&gt;&lt;br /&gt;அவற்றால் பட்ட துயர்,&lt;br /&gt;தூசு தட்டிக் கழியும்,&lt;br /&gt;எட்டி இரண்டு முட நாய் உதைப்பில்,&lt;br /&gt;என் உணர்வுத்திருப்திக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;கடி நாய்களை உதைக்கும் காலத்தைக்&lt;br /&gt;காத்திருக்கும் பொழுதுகளில்,&lt;br /&gt;என் இயலாமையினால்,&lt;br /&gt;முட நாய்களை உதைக்காமலும்&lt;br /&gt;இருக்க்கமுடியவில்லை.&lt;br /&gt;நாய்கள் என்று மட்டுமே,&lt;br /&gt;வெறிநாய்க்காட்டுக்கும்&lt;br /&gt;சொறிநாய்வீதிக்குமிடையே&lt;br /&gt;என் உணர்வுக்குப் பாதை&lt;br /&gt;தெரிகின்றது.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;()()()()()()()()()()&lt;br /&gt;&lt;br /&gt;ஆனாலும், எனக்கு ரொமியிலும் விட கொசுவை மிக மிக அதிகமாகப் பிடிக்கும். நாய்களுக்குப் பெயருண்டோ என்றோ, அதுவும் தெருநாய்களுக்கும்கூடப் பெயருண்டோ என்றோ, அதிலும்கூட, கொசு என்று தெருநாய்களுக்கோ அல்லது எந்த கொம்பன்நாய்க்கென்றாலும் கூடவோ பெயரிருக்கும் என்றோ கேட்டுவிடத்துடிக்கும் ஒரு (நாய்ச்)சமூகவியல் ஆய்வாளர் நீங்கள் என்பது எனக்கும் நன்றாகத் தெரியும். பொறுமை அவசியம். ஒவ்வொன்றாய்ச் சொல்ல வருகின்றேன். எங்களூர்த்தெருநாய்களுக்கு எண்சோதிடம் பார்த்து 'ப' வரிசையில் நான்கெழுத்துப் பெயராய் வைத்துத்தான் ஆகவேண்டும் என்று எவரும் பிடிவாதம் பிடிப்பதில்லை; இடுகுறிப்பெயர்களும் இடுவதில்லை. அதனாற்றான், அந்தப் பெயரிலி விலங்குகள் தங்களுக்கு ஒரு பெயரைப் பெற்றுக் கொள்ளத் தம்முள் ஏதாவது ஒரு குணத்தை அதீதமாக வளர்த்துக் கொள்கின்றனவோ என்றும் எனக்குச் சந்தேகம். அதற்குப் பிறகும் அவற்றின் பெயர்கள், நேரம்சாராக் கணிய- "இன்றைக்கு வாலையாட்டினால், சடையன்; நாளைக்கு காலைப்பிடித்தால், சனியன்." இதுதான் எங்களூர்த்தெருநாய்களுக்கான மேல்மட்டசபையினால் அங்கீகரிக்கப்பட்ட பெயரீட்டுமுறை. தெருநாய்களுக்கும் பெயருண்டா என்று கேட்காமல் விட்டவர்கள் நீங்கள் என்றாலும், ரொமியிலும்விடக் கொசுவை தரிப்பவன் என்றதற்காக, நான் மொழிப்பற்று மிக்கவன் என்பதாக எண்ணிக்கொண்டு அடுத்த அனுமானத்திற் தோற்றுவிடக்கூடாது.&lt;br /&gt;&lt;br /&gt;ரொமியிலும் கொசு மிகவும் இளைச்சலாக, ஏதோ இனம்புரியாத ஏக்கம் நிறைந்ததாக என் கண்ணிற்பட்டதுதான் காரணம் என்பதும் அல்ல. அறிந்தவர்கள் சொன்னபடி, அது ஒரு&lt;br /&gt;மேற்சாதிவீட்டு நாயினதும் கீழ்ச்சாதித் தெருநாயினதும் திருட்டுத்தொடர்பிற் பிறந்தததால், வீதியிலேயே கைவிடப்பட்டுத் தன் சுயமுயற்சியினாலேயே பிறந்ததுமுதல் வளர்ந்தது என்றும் கைவிட்ட தந்தையின் மிகைப்பணிவடக்கமும் நன்றித்தனமும் அறிவுத்திறனும் நிறை நன்நாய் என்றும் அதன் சரித்திரம் ஒரு தமிழ்த்திரைப்படக் கதாநாயகனின் வாழ்க்கைக்குறிப்புப் போல விரிந்து நகர்ந்துபோகும்.&lt;br /&gt;&lt;br /&gt;அதன் மேற்குடிப்பிறந்த தந்தையாக, ஒன்றுக்கு மேற்பட்ட வீட்டுநாய்களை எங்கள்தெரு முடிதிருத்தும் நிலையத்து இலவசப்பத்திரிகை படிக்கும் முழுமொட்டைத்தலையர்கள், வான்குண்டு சிகையற்ற சிரங்களில் விழுந்துபோகும் கால(ன்)ம்வரை குற்றம்சாட்டிக் கொண்டிருந்தார்கள். வீட்டுநாய்கள், தம் சாதியின் ஒரு புறம்போக்குப்பேர்வழியின் செயலால் மற்ற அப்பாவிகள்மீது பொதுப்படையாகக் குற்றம் சாட்டக்கூடாது என்பதையே, அடிக்கடி கட்டறுத்து இவர்களுக்கு கடித்து குறியீட்டுபூர்வமாகச் சொல்லிவைக்க முயர்சித்ததாக எனக்குப் பட்டது ஏனோ மற்றவர்களுக்குப் படவேயில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;கொசு, தன் தாயினைத் தேடிக் கண்டுபிடிக்க, ஏதாவது ஒரு பரம்பரையலகூடாகக் கடத்தப்பட்ட தனித்துவ ஊளையிடல், அல்லது சங்கேதக்குரைப்பு என்று தாய்நாய் அதற்குப்  பிறந்த நேரத்திற் சொல்லிக் கொடுத்திருந்ததா, மேலும், தந்தையைக் கண்டுபிடிக்க சிகைசிரைநிலையத்துச் சிகையற்றோர் ஏதாவது மரபணுப்பரிசோதனை பண்ண எண்ணியிருந்தார்களா என்பதெல்லாம் இங்கே அநாவசியம் என்று விட்டுவிட்டுப்பார்த்தால், கொசு ஒருநாளும் என்னைத் துரத்தியது இல்லை என்பதே அதன்மீது என் (அதீத)அன்புக்கான காரணம். ஞாயிற்றுக்கிழமை சைவமுட்டை கலந்த இலைதழைக்காக அது என்னைத் துரத்தவில்லையா, அல்லது அது துரத்தாததாலேயே நான் அதை ஞாயிறு அடுப்பு நெருப்பு நடுப்பகல்களிற் தேடித் திரிந்திருந்தேனா என்று அறிய விரும்புகிறவர்கள், எனக்கு முதலில், "கொடியசைந்ததும் காற்று வந்ததா,காற்று வந்ததும் கொடியசைந்ததா" என்ற பாடலுக்கான முழு விளக்கத்தையும் தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன். நாய்களுக்கும் அவற்றின் வாலைப் பிடிப்பது வைரவருக்கு வாலைப் பிடிப்பது என்று நினைத்துக்கொள்ளும் வீட்டுமேல்மட்டங்களுக்கும் இடைமட்டத் தரகூடாக ஓர் எழுதா ஒப்பந்தம் உருவாக  முடியுமானால், ஓர் முன்னேறத்துடிக்கும் இடைமட்டத்துக்கும் ஒரு புரிந்துணர்வுள்ள நாயிற்கும் இடையே ஏன், "உனக்குச் சைவமுட்டை, எனக்கு கண்ணாடிக்குண்டு" என்று ஒரு 'வாழ்க்கையே ஒரு பண்டமாற்று வியாபாரம்'தான் தத்துவ நடைமுறைப்படுத்தல் நிகழக்கூடாது? இதற்கு மேலாலும் ஒப்பந்தப்பங்குதாரர்கள் என்ற எல்லைக்கு அப்பாலும்கூடக் கொசு எனக்கு எந்த நேரத்திலும் மரியாதை தந்திருக்கிறது. என் கண்முன்னால், எந்தப் பெட்டை நாயையும் விரட்டியதில்லை; வீதிமரங்களுக்கு, விளக்குக்கம்பங்களுக்கு உரவிலக்கு என்பது தன் கொள்கையில் உள்ளடக்கம் என்று காட்டியிருக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் கல்லடி பட்டு முனகியோ முடங்கியோ நொண்டிக் கிடக்கும் நேரத்திலும்கூட எழுந்து வாலாட்டி மரியாதை செய்ய முயற்சித்திருப்பதையும் கண்டிருக்கின்றேன். தன் அங்கீகாரத்தை எதிர்பார்க்கும் ஜீவன்களுக்கு மோதிப்பைக் கொடுத்து முகமலர்ச்சியைக் காணுவதை மரியாதை என்று எண்ணும் ஓர் இடைத்தரத்துக்கும்கூட இந்தக் கனம்பண்ணும் செயல்கள் தன் தகுதிக்கு மீறியவை எனப்பட்டது. இதனால், அங்கீகாரத் தலையாட்டலுக்கு மேலாக, அ·து என்னைக் கவனிக்காத காரணத்தினால், காதல்விடு நிகழ்வுகளையும், கழிப்புக்கடன்கள் உந்து விளைவுகளையும் பண்ணிக் கொண்டிருந்தாலும்கூட காணாததுபோல நகர்ந்துவிடும் யுக்தியை, எப்போதும் முகத்துக்கு முன்னே பணிவான, என் சில்மிஷங்களைத் தற்செயலாகக் காண நேர்ந்தும் காணாததுபோகும் போகும் தமிழாசிரியர்களிடம் இருந்து கற்றிருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;காலப்போக்கில் எனக்கும் அதற்குமிடையான இந்த ஒப்பந்தம் அதற்கு மேலும் இந்த வெற்றியிலான வியாபாரத்தில் விரிந்து போயிருக்கிறது. என்னைத் தெருநாய்கள் துரத்தும்போது, எனக்காக அவற்றுடன் அதன் தொழிலாகப் பட்டால், அதற்கு அதே நிகழ்வு நடக்கையில் நான் அதற்காகப் படை திரட்டி என் கணக்கினைச் சமப்படுத்த முயல்வதுண்டு. நாய்ப்போருக்குப் பயந்த சில கோழை இடைத்தரங்கள், "கொசுதான் மற்ற நாய்களிடம், 'நீ கடிக்கின்ற மாதிரி பாவனை பண்ணு; நான் காக்கின்ற மாதிரி பாவனை பண்ணுகிறேன்; பதிலுக்கு, ஒரு நாளைக்கு அந்த மரம், அல்லது இந்தப் பெண்நாய் உனக்கு' என்கின்ற மாதிரி ஓர் ஏற்பாடு" என்ற தப்பபிப்பிராயத்தைத் திணிக்க முயன்றார்கள். நான் காதலித்துக்கொண்டிருக்கும் பெண்கள் வேறு யாரையாவது காதலிக்கக்கூடும் என்று நம்ப நான் அன்றைக்கும் தயாரில்லை என்பதை அவர்களுக்கு அந்தந்த நேரங்களிலும் தெளிவாக எடுத்துச் சொல்லியிருக்கின்றேன். மேற்தரமோ கீழ்த்தரமோ வாழ்க்கையில் நம்பிக்கைதான் முக்கியம்; இல்லையா, என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;ரொமியைப் பற்றி நீங்கள் அறிந்து கொள்ளவேண்டியவை இரு வசனங்கள் மட்டுமே. ஒன்று, திரைப்படக்கெட்டவனான 'வில்லனி'ன் (குறிப்பாக, பௌதீக விதிகள் அனைத்தையும் மறுதலித்த கதாநாயகன் அந்தரத்திலிருந்து குதித்துக்குதித்து குத்துகையில், சந்தைகளிற் உடைவதெற்கென்றே காத்திருக்கும் மண்குடங்கள், மரக்கறிவண்டிகள் என்பற்றில் விழுந்து நொருக்கும் கெட்டவனின்) சகல குணவியல்புகளும் அதனுள் அடக்கம்; அதற்கு என்னைப் பிடிக்காததால், கொசுவைப் பிடிக்கவில்லை அல்லது கொசுவைப் பிடிக்காததால், என்னைப் பிடிக்கவில்லை என்பது மற்ற வாக்கியம். அதனது பற்கடி எனக்கும், எனது கல்லடி அதற்கும், வகை தொட்டு வலி வரைக்கும் முதலாம் வாய்ப்பாடு மாதிரி. என் ஞாபகசக்தி இன்றைக்கும் சரியாகத் தொழிற்படுகின்றது என நம்பிக் கொண்டால், 'கடிப்பவை, நாய்களோ, நரர்களோ முதற்கடியிலேயே வாழ்க்கைக்கும் அவர்களை வெறுக்கும் இயல்பினை என்னுள் அனுபவத்தூடாகத் திணித்த பெருமையை ரொமி எவரோடும் பங்குபோடவிடாமல் பலகாலம் தன் பற்களிற் கவ்விக் காவி வைத்திருந்தது' என்பதாய் நினைக்கின்றேன், ரொமியோடு ஏதாவது கண்முறைப்புத் தொடக்கம் காலுதைப்பு வரையுமாகத் தொடர்புபடாமல், தெருநாய்களின் எல்லையை நான் கடந்து வந்த நாட்கள் முற்றாக இல்லை - முறைப்பும் உதைப்பும் அன்றன்றைய எம்மிருவர் மனநிலைக்கு ஏற்ப வேறுபட்டிருக்கும் என்பதைத் தவிர. போகும் ஏதாவது நாய் கடித்தோ, வாகனம் உடல் ஏறியோ, இல்லை நகரசபை நாய்வண்டி உள்ளே ஏற்றியோ என் கண் முன்னாலேயே அ·து அற்றுப்போயிருக்க வேண்டும் என்பதே&lt;br /&gt;என் பரீட்சைப்புள்ளிகளுக்கான கடவுளுடனான பேரம் பேசலினைக்கூடச் சமயாசமயங்களில் இரண்டாம் நிலைக்குத் தள்ளிவைத்த லயப்பிராத்தனைகளாக இருந்திருக்கின்றன. அ·து என்னை வேதனைப்படுத்தி வம்புக்கிழுப்பதற்காகவே சும்மா பந்து வி¨ளையாடப் போய்க்கொண்டிருக்கும் என் முன்னே அதிகம் கொசுவை வம்புக்கிழுத்துக் கடித்து வைப்பதாகப்பட்டது. சைவமுட்டை+இலைகுழைக் கூட்டுக்கு முன்னாலான கொசுவுக்கான - மேற்தட்டை வேறு வேறு நாய் என்று நம்பவைக்கும் முயற்சியின் பேரிலான- என் கை+வாய் ஒப்பனைத்திறனுக்கும் மிஞ்சி, பலமுறை "ஏன் ரொமியூடாக வைரவரின் புண்ணியம் கிடைக்கக்கூடாது?" என்று மேற்தட்டு அக்கலாய்த்திருக்கின்றது. னாலும் அப்படியான அங்கலாய்ப்புக்கள் அல்லது ஆளும்வர்க்கத்தின் விருப்புத்தேர்வு வாக்குகள் பிரயோகிக்கப்படலாம் என்றான சமயங்களில், என் ஏதாவது ஒரு காலில் (அல்லது இரண்டு கால்களிலுமே, நிலைமையின் தீவிரத்துக்கேற்ப தொடை, கைகள், கழுத்து, மூக்கு என்றும் பரவக்கூடும் என்பதையும் அறியத் தருவது என் கடமை) உள்ள காற்பந்துக்காயங்கள், மரமேறு உரசல்கள் எல்லாவற்றுக்கும் ரொமி திட்டு வாங்கவைக்கும் விதத்தில் வாக்குமூலம் அளிப்பது என் கடமை என்பதாய் மனச்சாட்சி குத்திச் சொல்ல உணர்ந்து செயற்பட்டிருக்கின்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;#######################&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#3333ff;"&gt;ஆனால்,&lt;br /&gt;உதைத்து விட்டு,&lt;br /&gt;வீட்டுக்குப் போய்,&lt;br /&gt;மூலைச்சுவரில்&lt;br /&gt;சக்கரவண்டி சாத்துகையில்,&lt;br /&gt;மௌனத்தில், மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்,&lt;br /&gt;அந்தச் சில அப்பாவி நாய்களிடம்,&lt;br /&gt;என் மதத்தின் மூர்க்கத்தின் மூலம்,&lt;br /&gt;கடிவாளம் அற்ற காட்டு நாய்களின்&lt;br /&gt;அப்பாவியிற் பல் பதிக்கும் அற்ப செயல்கள்&lt;br /&gt;என்பதை எனக்குளேயே எடுத்துச் சொல்லி......&lt;br /&gt;&lt;br /&gt;புரையோடிப்போன புண்களில்&lt;br /&gt;புழு கொழுத்து அவதிப்படும்&lt;br /&gt;அப்பாவி நாய்கள் அறியப்போவதில்லைத்தான்,&lt;br /&gt;என் செயலின் அற்பத்தனத்தின் திமூலம்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;()()()()()()()()()()&lt;br /&gt;&lt;br /&gt;உங்களைக் கனம் பண்ணுகின்றவர்கள் என்று நீங்கள் மற்றவர்களுக்குச் சொல்லிக் கொள்பவர்கள், உங்களைக் கண்டும் காணாமல் இருப்பது மனதுக்குச் சங்கடமானபோதும், அதைச் சமதட்டுகளுக்குக் காட்டிக் கொள்வது உங்களுக்கு அவமரியாதையாகும் என்பதை என் வீட்டு மேற்தட்டுக்களும் எல்லாவீட்டு மேற்தட்டுக்களும் சொற்படுத்தாது, - ஆனால்- செயற்படுத்தி ஏற்கனவே காட்டியிருப்பதால், கொசுவின் 'கண்டும் காணாத இருப்பி'ன் போக்கை நானும் கண்டும் காணாததுபோல திட்டமிட்டு அலட்சியப்படுத்தி, கூட வந்த இடைத்தட்டுக்களுக்குக் காட்டிக் கொள்ளவில்லை. இத்தனைக்கும், முதல் ஞாயிறுகூட, அரை மணிநேரம் அலைந்து, தொடர்ந்து மூன்றாவது வாரமும் (ஆனால், இடையில் ஒரு வாரம் கிட்டே வந்து மேற்தட்டுகள் அடையாளம் காணத் துடிக்காத மாதிரிக்குச் சாக்கடைத்தீர்த்தம் அதற்குத் தெளித்து) வைரவசாந்திக்கு, என் வீட்டு முன் சந்நிதிக்குக் கொண்டுபோயிருந்தேன். வேறு உயர்வான முழுமாமிச வைரவவிருந்துக்காரனுக்கு வாடிக்கையாளன் ஆகிவிட்டதோ என்ற என் வாழ்வுக்கவலையும் வயிற்றெரிச்சல் வசப்பட்ட சினமும் அலட்சியப்படுத்தப்பட்ட அவமான உணர்ச்சியும் சேர நகர்ந்தவன், வீட்டுக்கு, சந்திமுனையில் ஒரு பொய்முகம் எடுத்துப் போட்டுக் கொண்டுபோய், அன்றைக்கு விளையாட்டுமைதானத்தில், இரண்டு ஓட்டங்கள் அடித்த நிலையில், போட்டவன் கைக்கே பந்தை அடித்து வெளியே போனவன் படவேண்டிய அளவுக்கு அதீதத்திலும் அதீதமாகவே மீறி ஆனந்தமயநிலையைச் சொரிந்து (¦)காட்டினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சொல்லப்போனால், இந்தச் சம்பவத்தில், எல்லாவற்றிலும்விட, மிக வெறுப்பாக இருந்த விடயம், ரொமியும் கொசுவும் அருகருகே குந்தியிருந்து, "பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ?" என்ற மௌனத்திலே ஒன்றை ஒன்று பார்த்திருந்து என்னை முறைப்பதாக இருந்ததே. ரொமி, காத்திரமான ஆத்திரப்பார்வைக்குள், கேலிப்புன்னகை பொதி கட்டி வேறு அனுப்பக் கற்றிருந்ததாய் வேறும் தெரியவந்தது. என்ன மனித-நாய் இடைப்பட்ட அந்நியோன்ய நட்பென்றாலும், தன் இனம் என்று வரும்போது, மனிதர் மனிதருடனேயே; நாய்கள் நாய்களுடனேயே என்று சொல்லும் சலித்துப்போன உவமை, 'இனம் இனத்தோடுதான்' உண்மையாகிப் போய் பள்ளித் தமிழ்ப்பாடத்திட்டங்களிலும் வாழ்க்கைக்குப் பயன்படும் அர்த்தமுள்ள விடயங்கள் இருப்பது காலநேரம் தெரியாமல் ஞாபகத்துக்கு வேறு வந்து தொலைத்தது. முகம் தெரியாத எதிரிகள் தொகை பத்தின் நேரடுக்குகளின் எண்ணிக்கையில் வலுத்தொடராக அதிகரிப்பதிலும்விட, நண்பர்கள் ஒற்றைப்படையாய்க்கூட எதிர்முகாம் போவது வேதனைக்குரியது.&lt;br /&gt;&lt;br /&gt;மனமொத்த காதலும் அதைக் காட்டும் அன்புச்செயல்களில் மாற்றமில்லாவிடின், சலிப்புத் தரும் என்று வகுப்புப்புத்தகங்களுள் மறைத்துப் படித்த மஞ்சள் இலக்கியம் சொன்னதாய் ஒரு சின்ன ஞாபகம். அடுத்த ஞாயிறு, ஒரு சமாதானத்தூது போய் வந்து நட்பைப் பழுதுபார்ப்பது என்பதும் தூசு தட்டுவதென்பதும் அர்த்தமுள்ள செயலாகப்பட்டது. ஆனால், போனபோது, கண்ட மாத்திரத்தில், இரண்டும் ஒத்த இணைகளாய்க் குரைத்துத் துரத்த (அதிலும், கொசு, மிகவும் குதறும் கொலைத்தனம் உமிழ்நீர்ப்பையிருந்து ஒழுகி அதன் பற்களினைக் கோரப்படுத்த...), மற்றைய இடைத்தட்டுக்களில் நகைப்பினையும் பொருட்படுத்தாது, வீட்டுச்சமையலறை வரை நில்லாதோடிய ஓட்டத்துக்கு உயிர் தந்தது, அவமானாமல்ல; உயிரச்சமுமல்ல; நம்பிக்கைத்துரோகத்தின் அடியென்றே என் கருத்தாகி இருந்தது. மேற்தட்டு, முதல்முதலில் என் குரலுக்குப் பயந்து பயந்து பேசியது, அன்றைக்கே முதற்றடவை என்று எண்ணுகின்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;#######################&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#3333ff;"&gt;ஆனாலும்,&lt;br /&gt;வெறி மிஞ்சிப்போனால்,&lt;br /&gt;ஒரு நாள்,&lt;br /&gt;கடி விலங்குகள்&lt;br /&gt;என் கைத்துப்பாக்கிக்குண்டுகட்கு,&lt;br /&gt;தம் நெற்றிப்பொட்டில்&lt;br /&gt;திலகம் வைத்துச் செத்துச் சாய்கையிலே,&lt;br /&gt;முட நாய்கள் அறியும்,&lt;br /&gt;என் மூர்க்கம்,&lt;br /&gt;முற்றிலும் பிறழ்ந்ததல்லவென்று.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;()()()()()()()()()()&lt;br /&gt;&lt;br /&gt;அதற்கடுத்த ஞாயிறு வரமுன்பு, செவ்வாயோ புதனோ, ஒருநாள் கொசுவுக்கு வெறி என்று ஊருக்குச் பேச்சு. இரண்டு மூன்று பேரைக் கடித்ததாய்ச் சொன்னார்கள். முடிதிருத்துநிலைய மொட்டைத்தலையர்கள் தொடக்கம் வீட்டு மேற்தட்டுவரைக்கும் எல்லோரும் தங்களுக்கு சாதுக்கொசு இப்படி வெறிக்கொசுவாகும் என்பது முன்னமே எந்தவளவுக்கு ஊகிக்கக்கூடிதாக இருந்தது என்று -தரவு சேகரிக்கப்பட்ட நேரத்தொடர் நிகழ்வுகளுக்கு, அவசியம் செத்த காலந்தாழ்த்திய எதிர்வுகூறல்- சொல்லி, தங்களின் முதுகுகளைத் தாங்களே தட்டமுயற்சித்து, மற்றைய சொந்த முதுகுதட்டிகள் வாரிவிட்டதாற் தோற்றும் ஒத்துக் கொள்ளாமல், திரும்பவும் தன் முயற்சியிற் தளரா விக்கிரமாதித்தன்களாவதை மௌனமாகப் பார்த்துக் கொண்டிருந்த எனக்கு, அப்பாவிகள் மட்டுமே மேலும் தலையிற் குட்டப்படுவதாகப்பட்டது. நல்லவை என்பதற்கு, இயல்பில் நீதி பிறழ்ந்த உலகில், நெறியென்று சொல்லப்பட்டதோடு வாழப்போராடித் தோற்றுப்போகின்றவை என்பதே வரைவிலக்கணமாக -எப்போதாவது ஓர் ஒழுங்கான என் மொழி அகராதி யாராலும் தொகுக்கப்பட்டால், கோப்பாளர்கள் சொல்லிவைக்கவேண்டும் என்று ஒரு கோரிக்கையை- என் விஞ்ஞானப்புத்தகத்தின் இல்லாத கடைசிப்பக்கத்திற்கு முன்பக்கத்திற் 2HB எழுதுகோலால் எழுதிவைத்த ஞாபகம். தாய்நாயோ, தந்தைநாயோ, எதுவாயினும் இப்போது கவலைப்படக்கூடுமோ என்ற ஓர் அநாவசியச் சந்தேகம் வேறு எழுந்தது. கடந்தகாலங்களில் உப்புச்சப்பில்லை என்று நினைத்த அதனுடனான தொடர்பு ஒவ்வொன்றிற்கும், குறைந்தபட்சம் ஏதோவோர் அர்த்தம் உணர்வு அளவில் எழுந்ததாய்ப்பட்டது. கூடவே, ஏன் இந்த வெறி, ஏற்கனவே தன் நாள்நாய்ச்செயலளவில் நடைமுறைப்படுத்தும் ரொமிக்குப் பிடித்திருக்கக்கூடாது என்று தீயவற்றின் பிரதிநிதி என நான் கருதியதன்மீது, ஒரு கையாலாகாத ஆத்திரம், விடை தேவைப்படா வினாவாகவும் அநீதியாக எழுந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;மற்றையநாள், வீரனைச் சுட்டு நகரசபைநாய் வண்டியுட் போடுக் கொண்டுபோனதைப் பார்க்க மற்றவர்களுடன் நான் போகாததற்குக் காரணம், நான் அழுவதை மற்றவர்கள் பார்த்துவிடக்கூடுமோ என்று வெட்கப்படுவதாக கீழ்த்தட்டு எண்ணிக்கொண்டது; காப்பாளன் இல்லாததால், இனி ரொமியைக் கண்டால், முற்றாகவே அஞ்சிக் கட்டைக்காற்சட்டையில் மூத்திரம் பெய்துவிடுவேன் என்று அனைத்துமறிந்ததாக அப்பாவித்தனமாக எண்ணிக்கொண்டிருக்கும் மேற்தட்டு, நானறியாமற் தமக்குட் சொல்லிக் கொண்டோமெனத் தம்முட் திருப்திப்பட்டுக்கொண்டு, ஒரு எச்சில்நாய்க்கான பார்வைப்பரிதாபம் எனக்காய், ஆளுக்கொன்று (சமையலறைக்குள் ஒன்று, சாய்வுநாற்காலிக்குள் மற்றொன்று) எறிந்துபோனது. எனக்கென்றால், கண்ணுக்கு முன் இறக்காத ஒன்று எங்கேயோ இன்னமும் தற்காலிகமாகப் பிரிந்திருப்பதாக எண்ணி -அறிவுபூர்வ முட்டாற்றனத்துடனெனினும்- உணர்வுபூர்வமாக வேதனை குறைந்திருக்கலாம் என்பதே என் செயலுக்கான என்&lt;br /&gt;காரணமாகத் தெரிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;#######################&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#3333ff;"&gt;நாய்கட்கும் நீதி கேட்கும் நியாயம் உண்டு என்பதுபோல்&lt;br /&gt;என் நியாயம் புரியும் பக்குவமும் நெஞ்சிருக்கும் என்ற நம்பிக்கை.&lt;br /&gt;அவற்றிற்குத் தெரியும்,&lt;br /&gt;கடி நாய்க்கும் முடநாய்க்கும் உள்ளே பல்பேதமிருந்தாலும்,&lt;br /&gt;இல்லை, வெளித்தூங்கு நீள்மூஞ்சியில்&lt;br /&gt;ஏதும் பாடபேதமென்று.&lt;br /&gt;&lt;br /&gt;முட நாய்கள்,&lt;br /&gt;என் மூர்க்கத்தைப் புரிந்து கொள்ளமட்டுமே&lt;br /&gt;என் இன்றைய காலைப் பிராத்தனை,&lt;br /&gt;கடிநாய்கள் என் காலைப் பதம் பார்க்கத்தொடங்கிய&lt;br /&gt;காலம் தொட்ட காலைகள் எல்லாம் போல.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;()()()()()()()()()()&lt;br /&gt;&lt;br /&gt;ஆனாலும், அடுத்து வந்த நாட்களில் அந்தவீதியை எக்காரணம் கொண்டும் நான் உபயோகப்படுத்த மறுத்திருந்தேன். பிறகு வரும் ஞாயிறுகளில், வைரவவிருந்துக்கு நாய் தேடப்போக என்னை எவரும் அழைக்கவில்லை; எனக்கும் என்னை அழைத்துவிடுவார்களோ என்பதே பெரிய பயமாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு மாதங்களின்பின் எதேச்சையாக இன்னொரு வீதியில், என் துவிச்சக்கரவண்டியின் முன்னே குறுக்கே ரொமி ஓடக்கண்டேன். ஆனால், அ·து என்னைத் துரத்தமுயலவில்லை. எனக்கும் அதற்கு எட்டி உதைக்கவேண்டும் என்றுபடவில்லை. (இருவரும்) திரும்பிப் பார்க்க, இருவர் கண்களும் சந்தித்துக் கொண்டன, எதிர்பாராத சந்திப்பெனிலும், இளைத்திருந்த அதன் விழிகளில் எதையோ தொலைத்திருந்த வெறுமை; என் கண்களும் அதன் சிந்தைக்கு அப்படித்தான் பட்டது போலும்; தான் ஓடுவதாற்றான் ஓடுவதுபோலத் தோன்றும்படி, மெதுவாக வாலை ஆட்டிய உணர்வு. வண்டி மணியை எனக்கு முன்னே போகாத கிழவியொருத்திக்குப் பாதையோரத்தை ஞாபகப்படுத்த நானும் அடித்துவைத்தேன், என் பங்கு சரியாக இருக்கவேண்டும் என்ற நேர்மையான உணர்விலும் கவனத்திலும்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த ஞாயிறுக்கு டசின் கண்ணாடிக்குண்டுகளுக்கோ, தங்கமீன் இணைக்கோ பேரம்பேசாமல், எவரும் வேண்டுகோள் விடுக்காமலே, "நானே வைரவவிருந்துக்கு நாய் தேடிப்பிடித்து வருகின்றேன்" என்று புறப்பட, புதிதாக தொழில் பெற்ற கீழ்மட்டம் தன் பஞ்சுமிட்டாய் வயிற்றிலடித்ததாய், 'வீட்டுவழமையை' முன்னிறுத்தி ஆட்சேபித்து, ஆர்ப்பாட்டம் பண்ணியது; மேல்மட்டம், என் புத்திசுவாதீனத்திற் சந்தேகப்பட்டதாய்த் தெரிந்தது. அரைமணிநேரம் கழித்து, ரொமியுடன் வந்து, தனக்கான கூலியைக் கீழ்மட்டத்துக்குக் கையுறையாகக் கொடுக்கும்படி மேல்மட்டத்திடம் தாழ்மையாக விண்ணப்பித்துவிட்டு, சாதுவாக சைவமுட்டை கலக்காமலே, இலைகுழைச்சோறு சாப்பிடும் ரொமியை மௌனமாகப் பார்த்துக் கொண்டிருந்தவனின் புத்திசுவாதீனத்தின் சமநிலையைக் கீழ்மட்டமும் சந்தேகித்தது மிகவும் தெளிவாக முகங்களிற் தெரிந்தது; உதவி மேல்மட்டம், அதியுயர்மேல்மட்டத்திடம், "இடைமட்டத்துக்கு வைரவபூசை ஒன்று பண்ணி, நூல் மந்திரித்துக்கட்டவேண்டும்" என்று மிகக்கவலையாகச் சிபார்சு பண்ணி அங்கலாய்த்து, மேற்கொண்ட செயலுக்கு அடுக்குப்பண்ணிக் கொண்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இடைமட்டம், தான் கூர்ப்புத்தாவரத்தின், இதுவரையில்லாத ஒரு மேற்மட்டப் புதுக்கிளையினைத் துளிர்ப்புப்பண்ணிப் பூப்பெய்தியதாக உணர்ந்து கொண்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;'99, பெப்ருவரி, 13, சனி 22:52 மநிநே&lt;/em&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7096896-111146905280935795?l=punaivu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://punaivu.blogspot.com/feeds/111146905280935795/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7096896&amp;postID=111146905280935795' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7096896/posts/default/111146905280935795'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7096896/posts/default/111146905280935795'/><link rel='alternate' type='text/html' href='http://punaivu.blogspot.com/2005/03/blog-post_22.html' title='தெநா. மே. உந. உபோ. உவீ.'/><author><name>-/பெயரிலி.</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='26' src='http://4.bp.blogspot.com/_OBFBfYawg8g/S8-wCagZnxI/AAAAAAAACCI/5ty9S8m_Ooc/S220/Abg_peyaB.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7096896.post-111088622977918761</id><published>2005-03-15T06:14:00.000-05:00</published><updated>2005-03-15T06:30:29.796-05:00</updated><title type='text'>நா. எ. இ. ஆ.</title><content type='html'>&lt;strong&gt;நான் என்பது இன்மை ஆகும்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;"எனது பார்வை முற்றிலும் தெளிவாக இல்லாதவரை..... &lt;br /&gt;நான்கு மேதகு உண்மைகளைப் பொறுத்தமட்டில், &lt;br /&gt;மெய்யான விழிப்பினை நான் உணர்ந்து &lt;br /&gt;கொண்டேன் என்று சொல்லமாட்டேன்." -கௌதமபுத்தர். &lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;I &lt;br /&gt;&lt;br /&gt;பதினாறு அகவைச் சித்தார்த்தனின் ஓரப்பார்வைகள் யசோதராவின் விழித்திசையை விரிகோண வளைப்புகளில் வழிமடக்கி விரட்டின. இரு சிறு பொய்கைகளிற் துருதுருத்துச் சுற்றிச் சுழன்றோடின கரு மச்சங்கள் இரண்டு. சாக்கிய சுத்தோதனன் இதைச் சாக்கிட்டு மேலும் கோப்பை மதுவை ஊற்றி விழுங்கினான். மட்டற்ற மகிழ்ச்சி; வில் வளைத்து மலரம்படிக்கும் மாரனே இறுதியில் வென்றேன் என்று மெல்லச் சிரித்தான் என்று மட்டற்ற மகிழ்ச்சி.அந்தக்கிழட்டுக் குறிசொல்பவனின் எச்சரிக்கை காத்தது. இனி கௌதம சித்தார்த்தன் எட்டுத்திசைகளும் கட்டியடக்கித் தன் காலடிக்குள் வைத்திருக்கப் பட்டம் கட்டவேண்டியதுதான் பாக்கி என்றான் சுத்தோதனன் மனக்கட்டியக்காரன். &lt;br /&gt;&lt;br /&gt;சித்தார்த்தன் கண்களிலோ, அவன் நாற்பதாயிரம் ஆடற்பெண்களினையும் தன் பாதம் படும் திசைக்குத் தூசு தட்ட வைத்திருக்கும் அழகு யசோதரா மட்டுமே. அவனது உலகத்தில், யானைகள் மதம் கொண்டு போரிடவில்லை; வெள்ளி ஆபரணம் அணிந்து அழகு பார்க்கப்பட்டன. யுத்தபேரிகைகள் சப்தித்து, மரண மேளங்கள் முழங்கி அறியப்படவில்லை; யாழ்களின் நாதத்தில் மேல்மாடத்துப்பார்வைகளில் மலைச்சாரல்களில் தண்மதி மட்டும் மோனத்தில் மோகமாய், மோகனமாய்ப் புன்னகித்தான். இறந்த குழவியை எழுப்பித் தரக்கேட்டு எந்த ஏழை ஏழைப்பெண்ணும் இறைஞ்சி நிற்கவில்லை. மேனிக்கும் ஆடைக்கும் பேதம் புரிபட்டாவண்ணம் குழப்பம் தரும் பட்டுப்பாவையர் மட்டும் அவன் குரல் கேட்டமாத்திரத்தில் நர்த்தகித்து நின்றார்கள். குட்டநோயில் எவரும் அங்கங்கள் அழுகித் தொங்க, துண்டாக, தோல் தளர்ந்து கண்முன்னே கிடக்கவில்லை. இளமனம் விம்மிப்புடைக்க, மலர்ந்த, மதர்த்த அங்கத்து மங்கையர் மட்டும் அன்னமாய், மயிலாய், கிளியாய், குயிலாய் அங்குமிங்கும் அசைந்திருந்தார்கள் ...... இப்போது இவையெல்லாமே அர்த்தமேயற்ற சின்னச் சந்தோஷங்கள் என்று ஆவியாய்ப் போம் வண்ணம்... மனமெங்கும் சுற்றி,,, யசோதரா ... சித்தார்த்தன் மனப்பொய்கையில் காதலும் காமமும் கலந்தொரு பொன்மீனாய்ப் பிரகாசித்து, மகிழ்ச்சியிலே மேலெழுந்து மீண்டும் மீண்டும் துள்ளித் துள்ளி விழுந்தது இன்ப எண்ணச்சுழியுள் .. . . . . .&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"நானே பாக்கியசாலி; எனக்காய் உலகத்தே எத்துணை இன்பம் படைந்து வைத்தாய், மலரன்பு மாரா. . . . ." &lt;br /&gt;&lt;br /&gt;##########&lt;br /&gt;&lt;br /&gt;குஞ்சுத்தங்கமீனுக்கு மகிழ்ச்சி; மகிழ்ச்சியென்றால், கண்ணாடித்தொட்டி மேலாயும் கரைபுரண்டோடி, அதை அதற்குள் விட்டவனின் வீடெல்லாம் நிரப்பும் தடுப்பற்ற ஊழிப்பெருவெள்ளம். தனக்கென அழகுத் தொட்டிவீடு தந்தவன் கைகளை முத்தமிடவும் தோன்றியது, சுட்டி மீனுக்கு. அதற்கென ஒரு வீடு; சுத்தமாய் நீர்; சுற்றியோடச் சுழன்றோடும் தாவரங்கள். விளையாட வண்ணங்கள் வடிவங்கள் வேறுபட்டாலும் எண்ணங்கள் வேறுபடா இன்னும் பல மச்சத்தோழர்கள். ஒழிந்து கொள்ள பொம்மைச் சுழியோடி, குட்டிக்கற்கள், கவிழ்ந்த சிப்பி. "எத்தனை கோடி இன்பம் வைத்தனை நீ, என்னை இத்தகு நீர்ப்பிறப்பென்று படைத்தவனே! இத்தகு நீர்ப்பரப்பினை நீந்தக் கொடுத்தவனே!! " காற்றை எடுத்துக் கொண்டு அடிச்சிப்பிக்குள் விட்ட குமிழ்கள், பெரிதாகி மேலே வந்து மீண்டும் காற்றில் உடைந்து போனது காணவில்லை, சின்னத்தங்கமீன். தன் குதூகலத்தின் பிடியில் மேலும் காற்றைக் குடித்து குமிழை விட்டுக் கொண்டிருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;##########&lt;br /&gt;&lt;br /&gt;மயானத்துச் சுவரிற் துள்ளியிருந்தவன், இடிந்த நூற்றாண்டுக்காலச்சமாதி வெடிப்பிருந்தெல்லாம் மகிழ்ச்சி பாளம் பாளமாக வழிந்தோடக் கண்டான். கரித்துண்டொன்றெடுத்து அத்தனை மயானமதில், மரம், சின்னம் எல்லாம், "என்னவள் பெயர் இது;  அவளை நான் என் இன்னுயிர் மேலாய் இந்தளவு நேசிக்கிறேன்" என்று விடலைத்திரைப்படநாயகர்கள்போல எழுத ஆவல்.  கூனோ, குருடோ, செவிடோ, அழகோ, அதுவுமில்லையோ ஒருத்தி தன்னைக் காதலிக்கிறாள் என்ற எண்ணமே எத்துணை மாற்றங்களை உன்னதங்களை ஒருவனுள் ஆக்குகின்றது. தினசரிச்சவரம், உடைகளிற் தேர்ந்தெடுப்பு, பின்காற்சட்டைப்பையுள் சிறு கண்ணாடியும் சீப்பும், சந்திக்கொருமுறை வண்டி நிறுத்தித் தலைவாருகை, 'பார் என் ஒவ்வொரு அசைவிலும் அலட்சியம் நிறைந்த காளைமாட்டுத்தனம்' என்பது போலக் காட்டிக் கொள்வதில் மிக அவதானம். . . . . . .. எல்லாவற்றுக்கும் மேலாக, வாழ்க்கையில் முன்னேற ஒரு துடிப்பும் ஒழுங்கும் அர்த்தப்படுதலும் அதனால் நெஞ்ச நிறைவடைதலும். இப்போதெல்லாம் மறுபிறப்புக்கள் மனிதனுக்கு உண்டு என்று பட்டது அடிக்கடி நெஞ்சுக்குள், அவள் நினைவு முகிழ்க்கும்போதெல்லாம். சொல்லப்போனால், இந்த வாழ்க்கை எப்போதும் அற்றுப்போகலாம் என்ற வகையிலும் அவளைப் பிரிவது என்பதை ஒத்துக்கொள்ளமுடியாததால், தொடர்ந்தும் பிறப்புக்கள் இருந்து கொண்டே இருக்கும் என்பதை நம்புவது காதலுக்குச் சிரஞ்சீவித்தனத்தைத் தந்து, தோன்றும் பயம் நிறை பிரிவுத்துயரை நீக்கியது. இன்னும்மேலாக, ஆயிரமாயிரம்வருடங்களுக்கு முற்பட்ட பிறப்பொன்றில், ஏதோ காரணங்களால், தான் விட்டுப் பிரிந்தவளோ, அல்லது தன்னை விட்டு அகன்றவளோ மீண்டும் கைக்கெட்டியிருக்கிறாள் இனியேனும் விட்டுப்பிரியாதே எந்தப்பிறப்புக்கும் ஏது காரணம் கொண்டும் என்பதுபோற் சித்தப்பிரமை. &lt;br /&gt;&lt;br /&gt;&gt;&gt;&gt;&gt;&gt;&gt;&gt;&gt;&gt;&lt;&lt;&lt;&lt;&lt;&lt;&lt;&lt;&lt;&lt;&lt;&lt;&lt;&lt;br /&gt;&lt;em&gt;"ஒரு கனவைப் போல. &lt;br /&gt;எனக்கு மகிழ்ச்சி தருகின்ற எதுவும் &lt;br /&gt;ஒரு ஞாபகப்படிவாய் உருமாறும்; &lt;br /&gt;கடந்தவை மீள வரா" - சாந்திதேவர் &lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;II &lt;br /&gt;&lt;br /&gt;பள்ளியறை வாயிற் கதவினின்று திரும்பி அவள் முகத்தைப் பார்த்தான் சித்தார்த்தன். நிலவொளியிற் சப்ரமஞ்சத்தில் மார்புத்துகில் கலையத் தூங்கிக் கிடந்தாள் யசோதரா. பதின்மூன்று வருடத்து இன்பத்துய்ப்பு; மண வாழ்க்கை ஆரம்பத்திற்கு இன்று சற்றே உடற்கட்டுக் குலைந்து போயிருந்தாலும் சித்தார்த்தன் தேவைகட்காய் மட்டுமே இன்னும் தன் இளமையைக் குலையாமற் காக்கப் போராடிக் கிடந்தாள் அந்நங்கை என்று அறியாதான் அல்ல சாக்கிய இளவரசன். அவனுக்கான அவள் சேவையிலும் காதலிலுங்கூடச் சிறுமருவுக்கும் களங்கம் இல்லை. ஆயினும், விரல் அழுகித் தொங்க, வீதி கடக்க முனைந்தும் முடியாக் குட்டரோகிக்காய்த் தேர்ச்சக்கரங்கள் சுற்றமறுத்ததே. . . . . பல்லக்கின் மூடுதிரைக்கூடாக மூப்புக் கைநீட்டி உண்டிக்குப் பொருள் யாசித்ததே . . . . யாக்கை நிலையாதென உயிரற்ற தெருப்பிணம் சொல்லாமற் சொல்லிப் போனதே . . . . &lt;br /&gt;&lt;br /&gt;..இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் இயற்கையுடன் நீ தாக்குப்பிடிப்பாய் என் இளவழகி யசோதரா? மூப்பு உன்னையும் குருதி வழியவழியப் பற்றித் தின்னும்; என்னையும் அதுபோலவே. . . இறுதியில் முன்னோ பின்னோ மாரன் சக்தி இற்றுப்போய் ஒரு காலம் காலன் கைப் பற்றிப்போவான் உன்னை, என்னை. என் இடத்தே அமர்வான் இராகுலன்; உன் பஞ்சணையிற் துயில்வாள் இன்னொரு இளநங்கை இராகுலனுக்காய்த் தன் எழில் வற்றிப் போகாமல் காலத்துடன் தோற்பேன் என்றறிந்தும் சமர் நிகழ்த்தி. . . . வீதியிற் கண்ட விதிச்சக்கரமோ, மேலும் தன் ஒழுக்கிலேயே மெதுவாய்க் கறங்கும்.. &lt;br /&gt;&lt;br /&gt;...மீண்டும் திரும்பாமல் ஒரு திருடனைப் போல் கதவை மூடிச் சென்று தேர்ச்சாரதியிடம் கபாடக்கதவு திறந்து காடு நோக்கித் தேரை ஓட்ட ஏவல் படைத்தான். நாட்டெல்லையிற் தேர்ச்சாரதி அங்கி தான் புனைந்து, செயலளவில் சித்தார்த்தன் உலகுக்குச் செத்து அடவிக்குட் துறவியாய் அறியாத ஒன்றைத் தேடி அலையத் தொடங்கினான். &lt;br /&gt;&lt;br /&gt;##########&lt;br /&gt;&lt;br /&gt;தங்கமீன் பருத்திருந்தது. ஆயினும், தன்னைத் தவிர வேறொரு மீனும் தனியே நீரைச் சுற்றி தெரியாத எதையோ தேடி ஓடுவது போலவோ அல்லது அறியாத ஏதோ துரத்த ஓடுவது போலவோ அதற்குப் படவில்லை. நட்புக்காய் மிகுதி மச்சங்கள் இப்போதும் தன்னுடன் தாவரம் சுற்றினாலும் கற்களுள்ளே ஒளிந்திருந்து விளையாடினாலும் எல்லாமே ஒரு வெளி ஒப்புக்கு என்று பட்டது. அவற்றின் கவனம் தத்தமது துணைகளிலும் முட்டைகளிலும் குஞ்சுகளின் உணவுக்காய் ஒன்றோடொன்று போரிடுவதற்காகவுமே என்று தென்பட்டது. தங்கமீன்களுக்கு மட்டுமே தனிமை அதிகமாக இருக்குமென்பதாய் ஒரு சுட்டிக்காட்டும் உணர்வு. மிகுதி வெள்ளி, பூச்சுவண்ண மீன்களிலே பொறாமை விரிந்தது. தங்கமீனுக்கு நீருள் வெறுமை பூத்தது; நீர் தனிமைத்துயர் கலந்து கரைந்து நிரம்பற்கரைசலாய் மூச்சைத் திணறப் பண்ணியது. &lt;br /&gt;&lt;br /&gt;நேரத்துக்கு உணவும் நீந்த நீரும் மட்டுமே வாழ்க்கையில்லை என்று பட்டது. அடிக்கடி நீர் மேலோரம் எழுந்து வந்து வெளித்துள்ளி வெறுமையகற்ற ஏதும் வழி  காணமுயன்றது. உணவு தந்தவன் மீண்டும் நீருள்ளே தூக்கி விட்டான், இன்னும் திணறு... நான் இரசித்திருப்பேன் என்பதுபோல. தாவரத்தினைச் சுற்றிச் சுற்றியே இருத்தல் அலுத்துப்போய், மற்றைய குடும்பங்கள் மகிழ்ச்சியையும் கெடுக்காவண்ணம் தொட்டி அடிப்பகுதிப் பொய்யசைவு பொம்மைச் சுழியோடியோடு தனித்து விளையாடக் கற்றுக்கொண்டது. அதன் உலகம் வெளிச்சுருங்கி, உள் விரிந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;##########&lt;br /&gt;&lt;br /&gt;.லையுணவு, கார்ச்சாரத்தியம், கணினிவேலை, மதியவுணவு, கணினிவேலை, கார்ச்சாரத்தியம், நளபாகம், இரவுணவு,  தொலைக்காட்சி, தொலைபேசி, தூக்கம், கா. . &lt;br /&gt;&lt;br /&gt;. . &gt;&gt;&gt;&gt;&gt;&gt;&gt;&gt;&gt;&gt;&gt;&gt; கடந்த நான்காண்டு சுழல்வே கார்ச்சக்கரம்போல. . . . . நிமிடநேரங்கள் வாழ்ந்திருக்கும் நோய்க்கிருமிகள், நாட்காலம் உயிர்தரிக்கும் நுளம்புகள் - இவை வாழ்க்கைகள் எத்துணை மேற்பட்டவை என்றுபட்டது நெஞ்சுக்கு. வாழ்தலுக்காய்த் தொழிலா, தொழில்புரிதட்காய் வாழ்க்கையா? தொழிலைக் குறை சொல்லி என்ன பயன்? எங்கிருந்தாலும் தின்னத்-தூங்க தேவைப்பட்டததுதானே. ஆனால், முன்னர் மறுத்தவர்கள் அந்நாட்டிலே இந்நாட்டுத்தூதரகத்தினர் என்றால், இன்றைக்குச் பெற்றோர் சொந்தக்கடமைகள் சுற்றிப்போட அவள். கடமைகள் . . .. . எவர்க்குத்தான் இல்லை? இதுதான் உனக்காக என் கடமைகளிற் பிறழ்ந்ததுபோல, நீயும் பிறழக் கற்றிருக்க மறுப்பதென்ன என்று எதிர்ப்பார்க்கும் நீதியற்ற ஏமாற்ற மனப்பாங்கோ??? புரியவில்லை. வலுப்படுத்தி அழைத்தால், வராது போகாள். ஆனால், வந்தும் கடமை பிறழ்ந்ததற்காய் தன்னுள் வருத்துண்டு, அதனால், தன்னவனுள்ளும் குண்டூசி விதை  முளைக்கக் கற்பித்துக் கிடந்தால் . . . . ஒரு வீடு . . . நூல்களிற் சொல்லப்பட்ட நரகங்களில் இரண்டு. யாருடையதோ வேடிக்கை மீன்பிடித்தல்களுக்குத் தூண்டிற் புழுவாய்த் தாம் நெளியச் சபிக்கப்பட்ட இரு மானுடர்கள். பொம்மைக்கணினிப்பொய்யைத் துரத்திச் சாரளத்தினைத் திறந்து தெருவுக்கு அடுத்த கரை மயானத்தைப் பார்த்திருக்கத் தொடங்கினான் . . .. இந்நாட்டு மயானங்கள் மிகு நேர்த்தி . . . . உணர்வுகள் குமிழியிட்டுப் பொங்கிவர சமாதிகளில் வெடிப்புகள் சிதறல்கள் இருப்பதில்லை. . .. இறுகிப் பாறைக் கற்களாகவே அற்றவர் உலகம் . . . சாகாத சவங்கள் சிலதின் மனங்கள் போல... &lt;br /&gt;&lt;br /&gt;&gt;&gt;&gt;&gt;&gt;&gt;&gt;&gt;&lt;&lt;&lt;&lt;&lt;&lt;&lt;&lt;&lt;&lt;&lt;br /&gt;&lt;em&gt;"பிறவாத வெறுமையானது, இருப்பினதும் &lt;br /&gt;இருப்பின்மையினதும் அதீதங்களைக் கடந்ததாகும். &lt;br /&gt;ஆதலினால், அது, தானே மையமாகவும் &lt;br /&gt;மையப்பாதையாகவும் இருக்கின்றது. வெறுமையானது, &lt;br /&gt;நடுநிலைமனிதன், நகரும் தடமாகும்" - ஷொங்கப்பா &lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;III &lt;br /&gt;&lt;br /&gt;"நகர எல்லைப்புறத்தே வந்திருக்கிறான் சித்தார்த்தன்" - தொனி அகட்டிச் சொன்னவன் அவனைப் பெற்றவன், சுத்தோதனன்; "அல்ல, இளவரசி; இவர் வேறொருவர், புத்தநிலை பெற்ற மகான் என்று முகத்தில் ஒட்டிக்கிடக்கிறது", சொன்னாள், குரல் தணித்தொரு சேடிப்பெண். யசோதராவின் குழப்பமனம், "எவராயினும் என்ன? என் இளவரசராகவும் இருக்கக்கூடும்; இல்லாவிட்டாலும் மகானையாவது கண்டு வருவேன்" என்று இராகுலனையும் நகர் எல்லைக்கு இழுத்துக் கொண்டோட வைத்திருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;a.&lt;br /&gt;தன் முன்னே தலை தாழ்த்தி நிற்கின்ற பெண்ணை நோக்கி யாக்கை நிலையாமை பாற்றி எடுத்துச் சொன்னான் புத்தன். மீதிப்பேர்கள் காலத்தின் கோரப்பல் கடிபட்டு கடவாயிற் குருதி வடிந்தோடும் இந்த விசித்திரத்தைக் கண்டிருந்தனர். &lt;br /&gt;&lt;br /&gt;முடிவில் யசோதரா, "பிட்சாபாத்திரம் ஏந்திப் பிக்குணியாய்ப் போக விழைவு, ஐயனே" என்றாள். இராகுலனும், "தந்தை வழி, தாய்வழி என்பதுவே எந்தன் வழியும்" என்று சொன்னான். புத்தன் அதற்குச் சொல்வான், "தந்தை வழி தாய்வழி அல்ல; இது எவரிலும் சார்ந்தெழாத உனக்கான உந்தன் சொந்தத் தனி வழி." &lt;br /&gt;&lt;br /&gt;O~O~O~O~O&lt;br /&gt;&lt;br /&gt;b.&lt;br /&gt;யசோதராவின் கண்களிற் போதிசத்துவன் தெரியவில்லை, வெளிக்கு இளைத்திருந்து சீவர ஆடையில் பிட்சாபாத்திரம் ஏந்தி அவள் சித்தார்த்தனே கண்ணிற்பட்டான். "சித்தார்த்த, என் இளவரச, என்ன குறை என்னிற் கண்டு இந்நிலைக்கு சென்றிருப்பாய்? என்னிடம் சொல்லாமலே நடுவிரவில் விலகிப் போக . . . உன்னை நம்பித் தொடர்ந்து வந்து உனக்கென மட்டும் வாழ்ந்தவளை, வாழ்பவளை, நிர்க்கதியாய் இடைவிட்டு உந்தன் உய்வைத் தேடித் தனியே கானகம் போய் நீ கண்டு கொண்டதுதான் உண்மையென்று ஊர் சொன்னாலும், அது எந்தவகையில் நேர்மைத்தனம் நிறைந்த சொல்; நீயே சொல் . . " - அவள் வெளிப்படையாயக் கேட்டுத் தன் சித்தார்த்தனை அவமதிக்க விரும்பவில்லை. சீதையுடன் இராமன் வாழ்ந்த காலம் இலக்குமணனுடன் ஊர்மிளை வாழ்ந்த காலத்திலும் மேல். ஆனால், உறங்காவிலிக்காய்த் தான் உறங்கிக் கிடந்த பெருமையெல்லாம்கூட அவனுக்கே போகவிட்டிருப்பதில் பெருமை கண்டாள். யசோதரா தன் சித்தார்த்தனை, மற்றோர்முன், அவன் புத்திரன் முன் தன் வருடகாலத்து வினாக்களினால், களங்கப்படுத்த விரும்பாள்; அவன் புத்தனானதில் பெரும் பூரிப்படைந்தாள். "சித்தார்த்த, காமத்தீயடங்கிப் காலம் பல; ஆயினும், உன் மேலெனக்குக் காதற்தீ அணையாது." - தங்கமீன், அவள் நெஞ்சுப்பொய்கைக்குட் இறுதி முறையாய் எகிறித் துள்ளியது- "தினம் உன்னைக் காணும் திருப்திக்காய் என்னையும் இணைத்துக் கொள்வேன் உன் சங்கத்தில்" - இதையும் வெளிச் சொல்லாள், சமநிலை பிறழ்ந்த உலகுக்காய்த் தண்டிக்கப்பட்ட பாவை. சித்தார்த்தன் உணர்ந்திருக்கக்கூடும். பிற்காலத்தில், குத்தனின் வீட்டு நஞ்சேறு காளான் உண்டு மரித்தபோதாவதெனிலும், அவனுக்குப் பட்டிருக்கக்கூடும், யசோதரா தன்னை விடத் தெளிவு பெற்ற போதிசத்துவ அவதாரம் என்பது ஏட்டில் எவராலும் எழுத விழையப்படா வரலாறு என்பதை. வெளிப்பார்வைக்கு மாலையில் முத்துக்கள் முன்னதுபோலவே கோர்க்கப்பட்டு இருந்தன; ஆனால், உள்ளே சேர்த்திருந்த இழை மட்டும் வேறார், புதிதாய்... . . . &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;##########&lt;br /&gt;&lt;br /&gt;இத்துணை காலம் தனியே கிடந்ததேயென்று தொட்டிக்குள் தங்கமீனுக்குத் துணையாக ஒரு பெண் பொன்மீன் தேடிக் கொணர்ந்துவிட்டனன் அதன் வளர்ப்பாளன். &lt;br /&gt;&lt;br /&gt;a.&lt;br /&gt;துள்ளிக் குதித்தோடிய பெண்மீனைக் கண்ட மாத்திரத்தே, உள்விரிந்த உலகம் சுருங்கி வெளியே குளிர்நீருள்ளும் நெருப்பேறியது தங்கமீனுக்கு. அதற்கெனவும் ஓர் தனி உலகம் விரிந்தது. நாளை அவ்வுலகில் நண்ப மச்சங்களுக்காய்ப் போக்கமுடியாது பொழுதுகள் பொறுப்புக்கள் நிறைந்து வழியலாம்; ஆயினும் என்ன?? சுமைகளும் இரண்டு வகைப்படலாம் . . .. இன்பச்சுமை, துன்பச்சுமை. வட்டத்துள் கறுப்புவளைபாதியுள் வெளுப்புச் சிறுவட்டம், வெளுப்புவளைபாதியுள் கறுப்புச் சிறுவட்டம் என்று யிங்-யாங் கற்காமலே புரிந்து கொண்டது மீன். கற்றும் செயற்படுத்தாததிலும் கற்காமலே செயற்பட்டிருத்தல் சிறப்பு. &lt;br /&gt;&lt;br /&gt;O~O~O~O~O&lt;br /&gt;&lt;br /&gt;b.&lt;br /&gt;துள்ளிக்குதித்தோடிய பெண்மீன், தன்னைக் கண்டமாத்திரத்தே கீழிருந்த தங்கமீன் மேலோடி வராத காரணத்தைத் தான் சுழியோடிக் கீழ்ச்சென்று கண்டு கொண்டது. தங்கமீன் மல்லாக்காய் மிதக்க அதிககாலம் இல்லை என்பது போல பக்கவாட்டிற் சரிந்து அசைந்திருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;தனியாகவே இருந்திருக்கலாம்; நம்பி வந்த துணையும் இறந்திருக்கக்காணல் மிகக் கொடுந்துயர். இனி, பெண்மீன் தனியே பொம்மைச் சுழியோடியைத் தான் சுற்றி வரலாம். ஆனால், அதற்குக் கூடவே சுமையாய், தன்னைக் காலம் தாழ்த்தி இங்கு அனுப்பிய கொடுமைக்கு எவரில் ஆத்திரம் கொள்வது என்று புரியாத ஓர் இலக்கற்ற குருட்டுவேதனை அதன் இறப்பு வரைக்கும் வாலுடனேயே மாயக் குஞ்சம் கட்டித் தொடர்ந்திருக்கக்கூடும். &lt;br /&gt;&lt;br /&gt;அதன் வளர்ப்பாளனின் விருந்தாளி வெளிப்பார்வையாளனுக்கு, தங்கமீன் நீர்த்தொட்டிக்குள் அன்றைக்குப் போல இன்றைக்கும் மாறுதலின்றி நீந்திக் கொண்டுதான் இருந்தது. வளர்ப்போனுக்குத் தெரியும், முன்னைக்கு நிலை இன்றைக்கு வேறென்று; ஆனால், பொம்மைக்குத் தனியே காவல் நிற்கச் சபிக்கப்பட்ட மீனுக்கு மட்டும் புரியக்கூடும், அதன் துயர்களும் கோபங்களும், அதற்கு இழைக்கப்பட்ட அநீதிகளைப் போலவே, அதிகமென்றாலும் அவைபோற் திட்டமிடப்பட்டவை அல்லவென்று. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;##########&lt;br /&gt;&lt;br /&gt;சுங்கப்பரிசோதனை முடிந்து பைகளை வண்டியிற் தள்ளிக் கொண்டு வந்தவளைக் கண்ட மாத்திரத்தில், &lt;br /&gt;&lt;br /&gt;a.&lt;br /&gt;மனது எட்டு வருடங்களுக்கு முன்னே மயானச்சுவரிற் குதித்ததுபோலவே துள்ளியது. இடைவந்த காலத்துயர்களும் கோபங்களும் வேதனைகளும் கணப்பொழுதில் அற்றுக் கலைந்தன விமானநிலைய மேகக்கூட்டங்களுடன். வற்புறுத்திப் பற்றித்தெடுத்த பைகளைத் தான் சுமந்து, ஊர்தியில் வைத்து விட்டு ஓட்டுநர் இருக்கைக்கு மறுபக்கத்துக் கதவைத் திறந்து இருக்கசொன்னான். &lt;br /&gt;&lt;br /&gt;வண்டி நகர ஒன்னொரு உலகம் முளைத்தெழுந்தது. காதல் என்பது வயதில் இல்லை; வயப்படுகிறவர்களில் என்று ஒற்றைப்பொறி இரட்டை மூளைகளில் ஒற்றைக்கணத்திற்குப் பட்டுத் தெறித்தது, முகங்களின் புன்னகைபோல. &lt;br /&gt;&lt;br /&gt;தொய்ந்த இழை முறுக்கேறிப் பலம் பெற்றது. &lt;br /&gt;&lt;br /&gt;O~O~O~O~O&lt;br /&gt;&lt;br /&gt;b.&lt;br /&gt;இரசாயனமாற்றம் எட்டு வருடங்களுக்கு முன்னைப்போலவே ஏற்படவேண்டும், ஏற்படும் என்று அவனும் எண்ணியிருக்கவில்லை; அவளும் எதிர்பார்த்திருக்கவில்லை. ஆனாலும், அவளைப் பார்க்க இவனுக்கும் இவனைப் பார்க்க அவளுக்கும் பரிதாபமாக இருந்தது. சில பைகளைக் கைகளில் வாங்கிக் கொண்டான். ஊர்தியில் அவற்றை வைத்துவிட்டு, பின்புறக்கதவைத் திறந்து அமரச் சொல்லி வாகனத்தை அவன் ஓட்ட, பௌதீக அளவில் நெருங்கிய நிலையிலும், இரண்டு உலகங்கள் இடைவெட்டாமலே தனித்து நகர்ந்தன. &lt;br /&gt;&lt;br /&gt;காதல் மாறவில்லை; ஆனால், இனி வெளியே உணர்வு பீறிடமுடியா சமாதிக்கல்லாய் உருமாறிப் போயிருந்தது காலச்சாட்டையின் சொடுக்குதலால் விறைத்துப்போய். இருவரும் ஒட்ட எதிர்பார்த்தும்கூட, தொய்ந்த இழை, கடைசித் தொட்டிருத்தலும் ஏனோ அற, முற்றிலுமாய் உயிரற்றுத் தொங்கியது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&gt;&gt;&gt;&gt;&gt;&gt;&gt;&gt;&lt;&lt;&lt;&lt;&lt;&lt;&lt;&lt;&lt;&lt;&lt;br /&gt;&lt;em&gt;"எந்த நிபந்தனைகளும் நிரந்திரமானவையல்ல; &lt;br /&gt;எந்த நிபந்தனைகளும் நம்பகரமானவையல்ல; &lt;br /&gt;தான் என்பது இன்மை ஆகும்" - கௌதமபுத்தர். &lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&amp;&amp;&amp;&amp;&amp;&amp;&amp;&amp;&amp;&amp;&amp;&amp;&amp;&amp;&amp;&amp;&amp;&amp;&amp;&amp;&amp;&amp;&amp;&amp;&amp;&amp;&amp;&amp;&amp;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;'99, பெப்ரவரி 4, வியாழன் 17:48 CST&lt;/em&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7096896-111088622977918761?l=punaivu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://punaivu.blogspot.com/feeds/111088622977918761/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7096896&amp;postID=111088622977918761' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7096896/posts/default/111088622977918761'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7096896/posts/default/111088622977918761'/><link rel='alternate' type='text/html' href='http://punaivu.blogspot.com/2005/03/blog-post.html' title='நா. எ. இ. ஆ.'/><author><name>-/பெயரிலி.</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='26' src='http://4.bp.blogspot.com/_OBFBfYawg8g/S8-wCagZnxI/AAAAAAAACCI/5ty9S8m_Ooc/S220/Abg_peyaB.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7096896.post-110955883575318065</id><published>2005-02-27T21:45:00.000-05:00</published><updated>2005-02-27T21:49:27.106-05:00</updated><title type='text'>இ.எ.எ.எ.</title><content type='html'>&lt;strong&gt;இன்றிரவுவரை எழுத எண்ணாத எழுத்துக்குப்பை&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;குடையாத ஓடமாய் தண்டுகள் வலித்தது எறும்பு.  பாதி உடம்பு அமிழ்ந்து மீதி விளிம்பால் வெளியே தெரிய, ஒரு திசையில் என்று இல்லாமல், ஒரு பாதி கோளநீர்த்துளியில் தன் வயிற்றை மையமாக்கிச் சுழன்றது.  அதன் சுழற்சிக்கு, அதற்கு குறித்த திசையில் வெளிப்படுதற்குத் தேவையான  ஒருங்கிய சிந்தனை இல்லாதது காரணமா, இல்லை, தன் வெப்பநிலையை இழந்து கொண்டிருக்கும் தேனீர்க் கோப்பையிலிருந்து சூடாகிக் கொட்டிய நீரின் மேற்பரப்பிழுவிசையா காரணம் என்று தேவையில்லாமல் எண்ணிக் கொண்டிருக்க மூளைக்கு ஓய்வாக இருந்தது. உற்சாகமாயும் மகிழ்ச்சியாகவும் இருந்ததா இல்லையா என்று எனக்குச் சரியாகச் சொல்லத் தெரியவில்லை. ஆனால், வழக்கத்தில் யாரும் திட்டவட்டமாய் எனது முடிவு இதுவாக அல்லது அதுவாக இருப்பதற்கு என்னென்ன ஆதார காரணங்கள் என்று கேட்காத விடயங்களில் எனக்கு ஒரு மகிழ்ச்சியும் தன்னம்பிக்கையும் பிறப்பது உண்டென்று அறிவேன். &lt;br /&gt;&lt;br /&gt;எறும்பு நிலைக்குத்துப்பார்வையிற் பார்க்கும்போது, இப்போதுதான் அரிச்சுவடி படிக்கத் தொடங்கிய சின்னக்குழந்தை மயிர் சிரைந்து பிசிறிய தூரிகையினால், ஒரு வட்டத்துக்குள் போட்ட சிவப்பு எட்டு ஒன்று; அதன் அசைவிற்குப் புதிதாக என்ன உவமை சொல்லலாம் என்று யோசிக்க, தலைக்குள் காலையிலிருந்து அமுக்கியிருந்த வேலைப்பளுவும் மேலதிகாரியிடம் வாங்கிய ஏச்சும் கொஞ்சம் தங்கள் கையைக்காலை நீட்டித் தமது உடல் சரித்துக் குட்டித்தூக்க வயப்பட்டிருக்க வேண்டும்... ஓர் இலேசான உணர்வு... முதல் மிடறு தேநீரினை உறுஞ்சமுன்னர், இந்த உவமேய நிர்வாணத்துக்கு, எல்லோருக்கும்  புரிகிறதோ இல்லையோ, புதிதென்று தெரிகின்ற மாதிரிக்கு ஓர் உவமைச்சட்டை மாட்ட வேண்டும் என்று பட்டது; சீனியும் பாலும் தேயிலையும் என் நாக்கின் சுவைநரம்புகளின் அன்றைய திமிர்த்தனத்துக்கேற்ற விகிதத்தில் சுடுநீரோடு கலத்தலுக்கும் என் மேலதிகாரியின் மனக்கோலங்களுக்கும் ஏதேனும் வளைகோட்டாலேனும் வளைத்துப் போடக்கூடிய கணிதத்தொடர்பு இருக்குமா என்று இன்றும் யோசித்தால், எறும்பு மறந்து போகும்... அர்ச்சுனனுக்குக் கிளி மட்டுமே படும், கிளை மறைந்து கிடக்கும். சுவையற்ற தேநீரின் முதல் மிடறு, அடுத்தடுத்த மிடறுகளைவிட எரிச்சல் மிக்கவை என அறிவேன். உடலிலோ உள்ளத்திலோ எரிச்சல்களும் நமைச்சல்களும் தோன்றக்கூடிய உவமைகளின் உவமேயங்களுக்கான பொருத்தல்களில் இடைவெளிகளை அதிகரிக்கக்கூடியவை. கிட்டத்தட்ட, எட்டு வயதுப் பையனுக்கு வாங்கிய முழங்காலுக்குக் கீழே தொங்கும், அல்லது, தொடை பிரிந்து விதை, குறி தள்ளிக்காட்டும் அரைக்காற்சட்டைபோல. எறும்பின் அசைவு, குழந்தையின் எழுத்தைக் கற்றுக்குட்டி வலைப்புலமமைப்பாளன் ஒருவன், நேரப்பரிமாணத்தே இடை-வெளி விட்டு, கார்ட்டீஸியன் அச்சிலே திசை சுற்றி உயிரோட்டம் பண்ணி ..... சலிப்புத் தட்டத்தொடங்கியது சிந்தனை. நினைவோட்டங்களுக்கு இருட்டு முடுக்குகளும் வாயிலற்ற போக்குக் காட்டும் குகைச்சுவர்ப்பாறைகளும் உண்டு. &lt;br /&gt;&lt;br /&gt;இந்த எறும்பு தேநீரைச் சுவைக்குமா? "ஆவீன, அகமுடையாள்..." என்றதுபோல் விவேகசிந்தாமணிப்பாடலில் வருகின்றவன், ஒரு சொட்டும் துளித் தேன், புலியோ முதலையோ தன்னைத் தின்னமுன், வாயில் விட்டுச் சுவைக்கவே விழைவான் என்பது கதை மட்டும்தானா... அடிக்கடி "ஆவீன.." என்ற பாடலினை உதாரணத்துக்கு நான் எண்ணிக்கொள்வதாகப்பட்டது. இதுவரை தெரிந்ததோடு மட்டும் சுருங்கிப் போனேனா நான்? எறும்பு நீரின் வெப்பத்தாலும் தத்தளிக்கலாம் என்று பட்டது. தீக்கோழி நெருப்புத்துண்டுகளைத் தின்னும் என்று சின்ன வயதில் யாரோ சொல்லியிருந்தார்கள். இன்றைக்கும் என் பிள்ளை "அ·து உண்மையா? தீக்கோழி தின்னுமா?" என்று கேட்டால், பதில் சொல்ல நிச்சயம் நான் தத்தளிப்பேன். இதுவரை அ·து இயற்கையில் உண்மையா பொய்யா என்று அறிந்து கொள்ளாமல் எறும்பு தத்தளிப்பதை வேடிக்கை பார்த்தபடி பொழுதைப் போக்குகின்றேன் என்று ஒரு வெட்கம் சூழ, நான் நெஞ்ச மையப்பகுதி பற்றி அளவிற் சுருங்கி எறும்பிலும் கொஞ்சமே பெரிதாகத் தெரிவதை அறிந்து கொண்டேன். இந்தநிலையில் என் மேலதிகாரியோ அல்லது சக ஊழியரோ..... முக்கியமாக என் மனைவியோ, குழந்தையோ.... அதை விடவும் இந்த எறும்போ கண்டு விடக்கூடாதே என்று பதை பதைத்து மேசையைப் பிடிக்க முயன்றேன். கை எட்டவில்லை; தேநீர் இன்னும் கொஞ்சம் கையிலிருந்து தளும்பி மேசையிலும் சற்று நேரம்முன் எடுத்திருந்த அடிக்குறிப்புகளிலும் சிதறியது. சமநிலைக்காய்த் தடுமாறினேன். கால்கள் நிலத்தே நிலை படவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;எறும்பு என்னைக் கண்டிருக்கமுடியாது; நான் ஊரில் ஒருமுறை  தீர்த்தக்கேணியில் மூழ்கிப் போயிருக்கின்றேன். எறும்பிற்குத் தெரியாது அந்தக் கணங்களின் என் துன்பமும் உயிர் வாழ வேண்டும் என்ற போராடும் மனப்பாங்கும். சீனி பால் கலந்த தேநீரின் அடர்த்தியிலும்விட, தனி நன்னீர்க்கேணிநீரின் அடர்த்தி குறைவு. அடர்த்தி குறைந்தவற்றில் மூழ்காமற் தப்புதலே கடினம். அதைப் பலமுறை பல வடிவங்களில் உணர்ந்திருக்கின்றேன். &lt;br /&gt;&lt;br /&gt;துளித்தண்ணீருக்குச் சலவித்தை பண்ண இயலற்ற சிற்றெறும்புக்குக் கேணிநீர் பற்றித் தெரிந்திருக்கமுடியாது; "தீக்கோழி நெருப்புத்துண்டு தின்னுமா?" என்று தெரிந்திருக்காதது ஒன்றும் பெரிய அறிவீனம் இல்லை என்று எறும்புக்குப் புரிய வைக்கமுடியாது என்பதை எண்ணிய போது வந்த நமுட்டுச்சிரிப்பை எறும்பு காணாதவண்ணம் மற்றப்புறம் திரும்பிச் சிரித்து வைத்தேன். எறும்பு எத்துணை அறிவிலியாய் இருப்பினும், அதை அதற்கு முன்னுக்கே முகத்திலடித்தாற்போலச் சொல்லுவதுபோல சிரித்து வைப்பது ஒரு நல்ல, மென்மையான மனிதன் தான் என்று எண்ணிக்கொண்டு இருப்பவனுக்கு அழகற்றது என்று இன்றைக்கும் நினைப்பவன் நான். புரிந்தும் புரியா மனிதர்களிடம் பச்சாதாபம் காட்டுகையில் எறும்பிடம் காட்டுவதில் எனது மனிதநிலை பண்பிலே உயர்ந்து அதியுயர்மனிதனாவேன் கணப்போதில் என்று என் வாழ்வின் எந்தக்காலகட்டத்திற் தோன்றியது என்று தெரியாத கும்ட்டு நம்பிக்கை. ஆசியஜோதி படித்தபோதா.... மீண்டும், எறும்பு, மரக்கிளையிலும் விடக் கீழிறங்கி அடி மரமாகி, ஆண்டு வளையங்களும் கண் பட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;தீர்த்தக்கேணியின் மத்தியில் நீர் சுரப்பதற்காக ஆழமான கிணறு ஒன்று கட்டாயம் இருக்கும் என்று நான் அந்த வயதில் யோசிக்காதது என் மூடத்தன்மையைக் காட்டாது என்று நான் வாதாட முடியும் என்று கருதுகின்றேன். இந்த நேரத்தில் நான் வெளிப்படையாக என் மூழ்கிப் போனதையும் அலறி அடித்துக் கைகளை அபயம் கேட்டு எம்பி எம்பி மூன்றாம் முறை எம்பியபோதே யாரோ ஒரு நண்பன் என்னைக் காப்பாற்றியதையும் நீச்சல் தெரியாமல் குதித்த அறிவின்மையையும் ஒத்துக் கொள்ளும் என் மனப்பாங்கு எனக்கு என்னைப் பற்றிய ஓர் உன்னத பெருமிதத்தைத் தர, என்னால் உயர்ந்து மேசையைப்ம் நிலத்தையும் தாராளமாக-முன்னைக்கு விட மேலாகவும்- தொடமுடிந்தது. நெஞ்சுக்கும் காற்குதிக்குமிடையே இடைவெளி மீளப்பெருத்ததை உணர்ந்தேன். இடம்போதாமை அறியப்பட்டு அறிவிக்கப்பட்டது என் மனத்துமூலைகட்குள். அம்மா, "நீச்சல் தெரியாமற் குதித்தது அறிவின்மையில்லை, அவசரத்தனம்" என்று சொன்னாலும், அ·து அறிவின்மைதான் என்று நான் ஒத்துக்கொள்கின்றேன். காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு..... மீள மீளப்பயன்படுத்திய உவமா.... ஆனால், தண்ணீரிலிருந்து தரையிற் தூக்கிப் போட்ட என்னிடம், ஒரு நண்பன், தான் நான் முதல்முறை கிணற்றுள் மூழ்கும்போது, இயலுமானவரை கால்கைகளை அடிக்காமல் இருக்க முயற்சிக்கச் சொல்லிக் கத்தியதாகவும் அவன் சொன்னபடி நான் செய்திருந்தால், இரண்டாம்முறை மூழ்க முன்னரே தானோ வேறு யாருமோ வந்து தலைமயிரினைப் பற்றி இழுத்தெடுத்திருக்க வசதி கூடியிருக்கும் என்றும் சொன்னான். அவன் சொன்னதை நான் மறுத்து ஏதும் பேசவில்லை; என்னைக் காப்பாற்ற முயன்றவர்களில் அவனும் ஒருவன்; ஆனால், உண்மையில், நான் மூழ்கும்போது அவன் கத்தியது கேட்கவில்லை; அம்மா அழுவார் என்பதுவோ அல்லது வேறேதோ அகவளை வயப்பட்டோ புறச்சலனத்துக்கு, புலன் செத்திருந்தேன். இழுத்துப்போட்ட படிக்கரையிலே புரைக்கேறி வெளிக் கக்கிய நீருடனேயே புறச்சூழல் புலனேறியது. &lt;br /&gt;&lt;br /&gt;எறும்பு என் கணநேர அவமானத்தினைக் கண்டிருக்கமுடியாது என்று பட்டது; குறிப்பாக, நான் குறுகிப்போனதைக் கண்டாற்கூட, என் மனம் எழுப்பிய அவமான அலைகளின் மீடிறனையும் வீச்சத்தையும் அறிந்திருந்தாற்கூட, என் கண்களை, தன்னைக் கொண்டிருக்கும் குறுகிய உடலைத் தானே கண்ட என் கூசிய கண்களை அது கண்டிருக்கமுடியாது என்பது நிச்சயமானது. அதன் தாயெறும்பு பின்னர் அழக்கூடுமோ அல்லது அவாப்பட்டு அடிபிடிபட்டு மழைக்குச் சேர்த்துவைத்த அரிசியையோ சீனியையோ அடுத்த நூற்றாண்டு எறும்பொன்று கண்டெடுத்தாயினும் உண்டு பயன்பெறுமோ என்று யோசித்துக்கொண்டிருக்க அந்தக்கணம் அதற்குப் பயன்பட்டிருக்கக்கூடும் என்று எனக்குட் சொல்லப்பட்டது. இறப்பின் அருகில் வாழ்க்கையினை இன்னொரு முறை வாழக்கிடைப்பின், அடுத்த முறையேனும் அடுத்துக் கெடுதல் புரிவோர்க்கும்கூட கெடுதல் புரியாமற் கழித்திருக்க அவாப் பிறக்கும் என்பது வெளிக்கக்கிய கேணி நீருள்ளே நான் பிழிந்த கணஞானம். முதல்மிடறு தேநீர் இன்றையகலவை மோசம் செய்யவில்லை என்பது போலிருந்தது. அடுத்த இருமிடறுகளுக்குமிடையே எறும்பின் என்- அவமதிப்பு-காணாமை ஒரு தேர்ந்தெடுத்த காணாதிருக்கும் பாசாங்குச்செயலாக இருக்கமுடியாது என்று அழுத்த திருத்தமாக உறுதிபண்ணிக்கொண்டேன்.... சத்தியமாக, நான் நீருள் மூழ்குகையில், எவர் கத்தியதும் கேட்டிருக்கவில்லை.... சொல்லப்போனால், நான் நீரை மூக்காலும் வாயினாலும் உள்ளெடுத்துக் கொண்டிருந்ததுகூட எனக்குப் புரிந்திருக்கவில்லை. எறும்பிற்கு இப்போது தான் நீருள் ஆழ்ந்திறப்பது பற்றி ஒருவன் தன்னுள்ளே தனிச்சமர் நடத்திச் சிந்தித்துக் கொண்டிருக்கின்றான் என்று தெரிந்திருக்குமா? என் மனச்சலனமும் என் குறுகிப்போன அவமானம்போல் நிகழ்காலப்புலனிற்ற எறும்புக்குக் கேட்காது என்று உணர்ந்து அதைத் தட்டி நீருக்கு வெளியே எடுக்க மேசையிலே குவிந்திருந்த அரைக் கோளத் தேநீர் இக்ளூக் குமிழினை நோக்கித் திரும்பினேன்.&lt;br /&gt;  நீ&lt;br /&gt;     ண்&lt;br /&gt;         ட&lt;br /&gt;           ......&lt;br /&gt;             .........&lt;br /&gt;               நீர்க்கீலம்.....&lt;br /&gt;                  .......... எறும்பு எப்போதோ எங்கேயோ போய்விட்டிருந்தது. &lt;br /&gt;                               பின்னே கண்ட எறும்புகளில் அந்த எறும்பை நான் ஒருபோதும் கண்டிருக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;'99 ஜூன் 10, வியாழன். &lt;/em&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7096896-110955883575318065?l=punaivu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://punaivu.blogspot.com/feeds/110955883575318065/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7096896&amp;postID=110955883575318065' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7096896/posts/default/110955883575318065'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7096896/posts/default/110955883575318065'/><link rel='alternate' type='text/html' href='http://punaivu.blogspot.com/2005/02/blog-post_27.html' title='இ.எ.எ.எ.'/><author><name>-/பெயரிலி.</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='26' src='http://4.bp.blogspot.com/_OBFBfYawg8g/S8-wCagZnxI/AAAAAAAACCI/5ty9S8m_Ooc/S220/Abg_peyaB.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7096896.post-110937152573310221</id><published>2005-02-25T17:45:00.000-05:00</published><updated>2005-02-25T17:47:36.420-05:00</updated><title type='text'>சிகை சிரைப்பு</title><content type='html'>முதலிலே நானும் பில் வ்'போல்கனருமே மாலை 5:30 இற்குப் போவதாக இருந்தது. பிறகு நான் போவதாகக் கூறி வழக்கம்போலவே போகாமல் வந்து ஏதேனும் சாட்டுச் சொல்வேன் என்ற எண்ணத்திலே என் மனைவி தானும் வருவேன் என்றாள்; அதனால், மாலைநேரம் கொஞ்சம் தாமதித்து, 6:00 இற்குப் போனோம்.&lt;br /&gt;&lt;br /&gt;சிகை சிரைப்பதொன்றும் பெரிய வேலை இல்லைத்தான்; ஆனால், என்னைத் தலைமயிர் வெட்டவைக்கின்றது என்பது என்னைச் சார்ந்தோருக்கு ஒரு பெரும் மலையை மல்லாக்கப் புரட்டும் விடயம். அவனவன் தலையிலே புல்வெளி வறண்டு கொண்டே மேலேறித் தரிசு நிலப்பரப்பு விரிகிறதென்று கவலைப்படும்காலங்களிற்கூட, நான் 'சூப்பின பனங்கொட்டை,' 'கபூலிவாலா,' 'கொலிவாக்' என்று பலவிதமான பட்டப்பெயர்களுக்கு ஆத்திரப்பட்டுக் கொண்டிருந்தேன். ஆனாலும், என் சிகையின் செறிவிலே 'அவ்ரோ வெட்டு'க்கள் பற்றித் தெரியாத காலத்திலும்கூட எனக்கு ஒரு 'தலை கனத்த' பெருமை. சிலவேளைகளில், "வெட்டு வெட்டு' என்று சொல்லி அலுத்துப்போன அப்பாச்சி, நான் சனி ஞாயிறு மத்தியானங்களிலே, சாப்பாட்டுக்குப் பிறகு, 'புத்தகம் வாசிக்கின்றேன்' என்று பெயர் பண்ணிக்கொண்டு முகத்தை அந்தப் புத்தகத்தினாலே மூடிக்கொண்டு நித்திரையாகிப் போகிற நேரத்திலே, தையலியந்திரத்தினுள் இருக்கும் மாமியின் கத்திரிக்கோலோடு வந்து தாறுக்கும் மாறுக்கும் வெட்டிவிட்டுப் போய்விடுவார். எழும்பி ஒரு 'சன்னதம் ஆடிவிட்டு' என் 'ஆமிக்காரன் தொப்பியைப்' போட்டுக் கொண்டு 'செல்வி சிகை அலங்கரிக்கும் நிலைய'த்துக்குப் போனால், மோஹனதாசுக்குச் சிரிப்பு....... "என்ன தம்பி, ஆச்சி இண்டைக்கும் உன்ரை தலையிலை கீரை ஆஞ்சிருக்குப் போல"..... திரும்பப் போய், கிணற்றிலே யாராவது முதல் வாளி தண்ணீரள்ளி ஊத்தும்வரைக்கும் நின்று... பிறகு நானே அள்ளிக்குளித்து.... ஒரு ஞாயிற்றுக்கிழமை கடற்கரைக்காற்று அநியாயச் செலவு.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், இப்போது இந்தப்பிரச்சனை ஏதுமில்லாதபோதும், என்னைத் தலைமுடி வெட்ட வைக்க இவள் செய்கிற சித்துவேலைகள் அப்பாச்சியிலிருந்து வேறுபட்டவை.... இதைத்தான் தலைமுறை இடைவெளி என்பதோ தெரியாது. கல்யாணம் ஆகி விமானம் ஏறும் நேரத்திலும், அம்மா என் சிகைப்பற்றறுத்தல் மிகவும் கத்திரிச் சிக்கலான கைங்காரியம் என்று மருமகளிடம் சொல்லியிருந்ததாக ஒருமுறை தெரியாமல் ஒப்புதல்வாக்குமூலம் கொடுத்திருந்தாள். சில நோய்கள் பெண்களுக்கு வராது, ஆனால், அவர்களின் மரபணுக்களூடாக, ஆண் வாரிசுகளுக்குக் கடத்தப்படும் என்று பின்னே என்ன சும்மாவா மரபணு விஞ்ஞானிகள் சொன்னார்கள்? தாங்கள் மட்டும் அடியில், அடிப்பாதத்திலும் முடி தொடுகின்றதா என்று பிரம்மா விஷ்ணு போல் அளந்து கொண்டு இருக்கலாம், ஆனால், பிள்ளை புருஷன்காரன் கொஞ்சமும் வளர்க்கக்கூடாது..... தான் வேகமான ஓட்டக்காரன் என்று காட்ட கூட ஓடுகிறவனை, 'கொஞ்சம் சாவகாசமாக வெத்திலைபோட்டுக்கொண்டு நடந்துவா' என்று சொல்கிற சித்து.. பிறகு வந்த காலங்களிலே, இன்னொரு தந்திரம்... இப்போதெல்லாம், உள்ளே புல்லு விதை வைத்து மண்ணடைத்து வெளியே சாக்கினால் கரடி, குரங்கு, நாய், பூனை என்று வடிவமைக்கப்பட்ட பல பொம்மைகள் விற்கத்தொடங்கியிருக்கின்றன. நான் தலைமயிர் வெட்டுகிற அன்றைக்கு அப்படி ஒன்றை வாங்கி வைத்துக்கொண்டு, அதற்கு ஒவ்வொருநாளும் காலையிலே தண்ணீரூற்று.... ஆக, காலையிலே கண்விழித்தால், சாளர ஓரம் என் முடிவளர் நாட்காட்டி.... தொல்லை.... மேலும், மிக அண்மையிலே "இன்றைக்கு வேலை கொஞ்சம் கூட; முடித்துப் போக முடிதிருத்தும் நிலையம் மூடிவிட்டான்" இப்படியாகச் சாட்டுகள் சொல்ல, "எனக்குக் கத்திரிக்கோலும் அந்த இலத்திரனியற்செதுக்கியும் வாங்கித்தா, நானே வெட்டிவிடுகின்றேன்" என்று சொல்லத் தொடங்கியிருக்கின்றாள்..... இதற்கு என் நண்பர்களின் மனைவிகள் வேறு வக்காலத்து..... வேலையில்லாத வேலிக்கு சாட்சி சொல்ல வாலில்லாத ஓணான்கள்..... நான் அவள் முகத்துக்கு நேராகவே கடுமையாகச் சொல்லிவிட்டேன், "எத்தனையோ புதுச்சாரதிகள் உழவியந்திரங்களிலே வயல் கோலிப் பார்த்திருக்கின்றேன்; இப்படிப்பட்ட விளையாட்டுகள் மட்டும் வேண்டவே வேண்டாம்."&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிலையிலேதான் என்னோடும் பில்லோடும் அவளும் வரப்போகின்றேன் என்றாள். உள்ள எரிச்சலிலே 'சரி வா' என்று இழுத்துக்கொண்டு போனேன். இங்கே நானிருக்கும் இடத்திலுள்ள பல முடிதிருத்தும் நிலையங்கள் எனக்கு ஒத்து வருகின்றதில்லை; போய்க்குந்தியவுடனேயே, 'இந்தமுறை, யூற்றா ஜாஸா, சிக்காக்கோ புல்லா' என்றோ, 'போர்ட்டிநைனேர்ஸோ செயின்ஸோ' என்று கேட்கும் சிகை அலங்கரிப்பாளர், என் அன்றைய மனநிலையை அப்படியே சிகையோடு சேர்த்துச் சிரைத்துவிடுவார். அதனால், நான் கொஞ்சம் 'நாட்டுப்புறமாக' இருக்கும் 'தெற்கத்தைய டிக்ஸி' சிகையறுப்பாரின் இடங்களுக்கே போதல் வழக்கம். இதற்கு இன்னொரு காரணமும் உண்டு. தவழும் குழவி எழுத்தாளர்களுக்கு எந்த நாட்டிலும் இப்படியான பழங்காலத்துச் சிகையலங்கரிப்பு நிலையங்களிலே அவ்வவ்விடப்பண்பாட்டினை அவதானிக்கவும் கிரகித்து உள்வாங்கவும் நிரம்பவே வாய்ப்புத்தரப்படுகின்றது என்ற நம்பிக்கை எனக்குள் இருக்கிறதே அதுவாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த முடிதிருத்தும் நிலையம்கூட அதிக தூரத்திலே இல்லை; வீட்டுக்கு முன்னாலிருக்கும் 'நான்கு-ஒழுங்கை' வீதியைக் கடந்து, பிறகு, 'பப்பாஜோன் ப்ட்ஸா' கடை..... நடை.... தெற்கத்தைய 'கேஜன் பர்ஹர் பப்பா-மம்மா' கடை .... நடை... (கொட்டியிருக்கும் குப்பைமீது தாவுக)....இங்கு துவிச்சக்கரவண்டி விற்றலும் பழையன வாங்குதலும் மற்றவை திருத்துதலும் செய்யப்படும் ("ஞாயிறு திறக்கப்படமாட்டாது")........ வீதியை அக்கம்பக்கம் பார்த்து, குறுக்கே கட......'கல்ஹ¥ன் பப்' (மகிழ்ச்சி மணிநேரங்கள் மாலை 4:00-8:00; 'உதை கழுதை' பியரும் மடி- நடனமாதுக்களும் உண்டு.....இன்று, 'பிக்பூப் ஹக்ஸி')......... ஒருதிசைப்பட ஒளிகசி சாளரக்கண்ணாடியூடே பார்த்தும் பாராதது போல நடை.....'ஓல் ஸ்ரேட் காப்புறுதி' முகவர், ஜிம் அப்துல்லா...... ("1981 இலே இங்கு வரமுன்னர், பாக்கிஸ்தான் பலூஸிஸ்தானிலே அகமதியா ஜிம்மினை எப்படி அழைப்பார்கள்?").... நட.....(இது உனக்குத் தேவையில்லாத கேள்வி ... முன்னாலே பார்) ......'டிக்ஸி' முடிதிருத்துநிலையம்... நுழைந்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;கடை, நடைபாதைத் தாழ்வாரத்துக்கு வலதுபுறமாக, இரண்டு பிரிவுகளாகத் தடுப்பினாலே பிரிக்கப்பட்டிருக்கின்றது. முதலாவது (வயதுபோன) பெண்களுக்கு.... அவர்கள் மிஞ்சிய தலைமுடிகளினை நூற்கட்டைகள் போன்ற சிறு உருளைகளினாற் சுருட்டிக்கொண்ட பிறகு, ஐம்பதாம் ஆண்டுக்கால கருப்புவெள்ள 'ஹொலிவுட்' செவ்வாய்க்கிரகத்து வனிதாமணிகள் போன்று கண்ணாடிக்கோளங்களுக்கிடையே தலையை வைத்து கதிரைகளிலே உட்கார்ந்து தலையைச் சூடாக்கிக் கொள்வதைப் பார்க்கும் எவருக்கும் மின்சாரநாற்காலியூடான மரணதண்டனையை ஒழித்தே ஆகவேண்டும் என்ற ஆவேசம் உடனடியாக வந்தே தீரும்......&lt;br /&gt;&lt;br /&gt;..... "........... நான் நம்பமாட்டேன்", "தேனே, ஜூடித்தின் ஓடிப்போன மகள், பிலொக்ஸியிலேதான் இருக்கிறாளாம்"......., "இருக்கமுடியாது; அவளை ஜக்ஸனிலே கண்டதாக ரோய்ஸ் என்னிட...."&lt;br /&gt;&lt;br /&gt;.....அடுத்ததாக, ஆடவருக்கானதுக்குள்ளே நுழைந்தோம்; என் மனைவி "உள்ளே வரவா? இல்லை, வெளியேயே தரிக்கவா?" என்று, கடைசி நேர ஹம்லட் போல அறைவாசலிலே இழுக்காத இலட்சுமணக்கோட்டுக்கு இடது காலெடுத்து பரதம் ஆடினாள். இழுத்துக்கொண்டு, உள்ளே போக,'பாபா பொயிட்,' ஒரு கிழவருக்கு வலது தாடையில் இழுத்துக் கொண்டிருந்த சவரக்கத்தி -தரித்து - யிலிருந்த முடியைத் தோளிலே தொங்கிய துணியிலே வழித்துக் கொண்டு, 'வருக, கதிரையிலே அமர்ந்திருந்து பத்திரிகை காண்க' என்று விட்டு, தாடைக்கு மீண்டும் தாவினார்; கத்தியில் நுரையைத் தடவினார்; தேய்த்தார்; இழுத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;மேசையிலே மாசிகையும் தாளிகையும் மாதமிரு பத்திரிகையும் அறுபதாம் ஆண்டிலிருந்து முந்தநாள்வரைக்குமாக தொடர்ச்சியில்லாது, இலவச ' ஒன்றெடுத்தால் இரண்டு இனாம்' போட்டிக்கட்டங்கள் கத்திரிக்கோலே படாது கை வரிசைக்குக் கிழிக்கப்பட்டு, பின்னர், நிலம் முழுவதும் மயிரிடையே இராணுவம் புகுந்து சோதனை செய்த வீட்டுப் பொருட்களாக எறிந்து கிடந்தன. 'நஸனல் எஸ்குயரர்', 'த குளோப்,' 'த ஸ்ரார்', 'ஹோம் கார்டினிங்', 'செவன்ரீன்'....... யாரோ பிரித்தானியாவிலிருந்து 'மினக்கெட்டுக்' கொண்டு வந்து, ஒரு பிரதி - 'ஸாரா பெர்குஸ்ஹன் அன்ரூவின் மார்பகம் வெனீஸ் ஓடத்திலே வெளிச்சத்திலே வெண்மையாகத் தெரிகின்றது' என்ற தொண்ணூற்றி இரண்டாம் ஆண்டு- 'த மிரர்' கூடக் கருணையோடு போட்டிருந்தார்கள். வானொலியிலே, லூயிஸ் ஆம்ஸ்ரோங்கின் 'ஜாஸ்' குரலிலே யாரோ ஒருவர், முதலைக்கட்லட்டுக்கு தரமான உணவுக்கடை இதுதான் என்று எதையோ சொல்லிவிட்டு, காலநிலை, வீதிவிபத்து எல்லாம் வரிசைக்குச் சொன்ன பின், தாரை தப்பட்டைகூட 'ரம்பெட்'டினார்கள். நான், ஒஸ்கார் விருதாளி, கெவின் ஸ்பேசி உண்மையிலேயே ஒருபாற்புணர்ச்சியிலே நாட்டம் கொண்டு திரிகின்றார்தானா என்று வாசிக்கத்தொடங்கினேன். சதுர அடியிலே வாழ்விடமும் சமையலறையும் கொண்ட எனது அவள், 'ஹோம் ஹார்டினிங்' இனை எடுத்து, பத்து ஏக்கரிலே ஓரிகன் வீட்டு முற்றத்துக்கு ரோஜாப்பாத்தி போடுகின்றதை மிகவும் ஆர்வத்தோடு வாசிக்கின்றது எனக்கு இடப்பக்கமாக மயிர்க்குவியல் மீதெழுந்திருந்த மெத்தை பிய்ந்த 'ஊத்தை'க்கதிரையிலே தெரிந்தது. பில், கைக்கடிகாரத்து முட்களை கண்ணாலே துரத்தித்துரத்தி ஓட்டமுடியுமா என்று பார்த்துக்கொண்டிருந்ததையும் நான் அறிவேன்.&lt;br /&gt;&lt;br /&gt;தாடிக்கிழவர் எழுந்தபின்னர், பில்லைப் பார்த்த பாபாவுக்கு, பதிலாக அவன் என்னைப் பார்த்தான்; நான் 'போ' என்று கண்ணைக் காட்டினேன்; எனக்கு அருகாமையிலே வீடு; அவனுக்கு பரிசாரகராக, இரவு வேலையும் எட்டுமணிக்கு ஒரு தனிக் கல்யாண விருந்திலே இருக்கின்றதாகச் சொல்லியிருந்தான். கோடைவிடுமுறைக்கு 'யெலோ ஸ்ரோன்' தேசியப்பூங்காவுக்குப் போகின்றதற்கு பணம் சேர்க்கின்றதிலே மும்முரமாயிருக்கின்றான் என்று சொன்ன ஞாபகம். ''எம்என்பிஸி' ரிவேரேவும் மனைவியும் பிரியப்போகின்றார்கள்' என்பதை மிகவும் அக்கறையோடு வாசிக்கத் தொடங்கினேன்...... பில்லும் பாபாவும் கோரினையும் புஷ்ஷையும் அக்குவாறு ஆணிவேறாக, அவர்கள் செனட்டர் அப்பாக்கள் நடத்தைகளைக்கூட, பிய்த்துப்பிய்த்துப் பேசிக்கொண்டிருந்ததும் இடைக்கிடை இந்த விவாகமுறிவு நிகழுமா இல்லையா என்ற கயிற்றிலே தொங்கும் கதையூடாக எனக்குக் கேட்டது....அரசியல், மித்திரன்-குளோப் பத்திரிகைகள், ராணி-செவன்ரீன் சஞ்சிகைகள், திரைப்படநடிகர்கள்... நடிகைகளின் மதர்த்த மார்புகள்.... அல்லி-ஆன் கேள்வி பதில்கள்....... முடிசிரைக்கும் நிலையங்கள் எங்கும் தம் அர்த்தம் பொதுவிலே மாற்றுவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;..... 'ஹேய்! நீதான் அடுத்தது;' பில், பாபா கிழவரிடம் ஒரு பத்து டொலரைக் கொடுத்துவிட்டு, பிறகு கூடவே மற்றைய காசுப்பை உள்ளறையிலிருந்து இரண்டு ஒரு டொலர்த்தாட்களையும் எடுத்துக் கொடுத்துவிட்டு, 'நன்றி' என்று விட்டுப் போனான். இங்கே வழக்கமாக முடி வெட்டிக்கொள்ள பன்னிரண்டு டொலரானபோதும், புதன், வியாழன் ஆகிய இரண்டு நாட்களிலும் மாலையிலே நான்கு முதல் எட்டு மணிவரை பத்து டொலராகும் என்பதாக இங்கே நான் முடி வெட்டிக்கொள்ளத் தொடங்கிய காலத்திலே இதனை எனக்கு அறிமுகப்படுத்திய மாணவர் இரண்டு வருடங்களுக்கு முன்னர் கூறியிருந்தார். மேலும், வெளி அறிவிப்புப்பலகையிலே, கீழோ மேலோ சிறிய எழுத்துக்களிலே அவ்வாறு எழுதியிருந்தது என்று நினைவு (இப்போதெல்லாம், யார் அறிவிப்புப்பலகையைப் பார்த்து நுழைவது? கண்ணாடியூடே ஒவ்வொரு கடையுள்ளும் நிகழும் செயற்பாடுகளைக் கண்டுகொள்ளக் கவனம் செல்ல, கால்கள் தம்பாட்டிலேயே கடைக்குள்ளே கொண்டு வந்து தள்ளி நிறுத்துகிறன.) கூடவே, ஓர் இருபது வீதம் வெட்டுகின்றவர் 'மகிழ்ச்சிக்காக' இரண்டு டொலர் தாட்களைத் தள்ளவும் சொன்னார். அவ்வாறே செய்து வருகின்றேன். அமெரிக்கன் ஆனபோதும் பில்லுக்குக் கூட இந்த இடத்தை ஓர் எட்டு மாத காலம் முன்பு ஆவணியிலே அறிமுகப்படுத்தியது நான்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் ஏறிக் கதிரையிலே அமர்ந்தேன்; பாபா, 'அதிகமா, குறைவா, இடையா?" என்று முடியினைக் குறைக்க வேண்டிய அளவினைக் கேட்டார்; 'எனக்கு கொஞ்சமாகவே குறைக்க விழைவு; ஆனால், இவள் நான் வெட்டுகிறது மாதிரி பொய் வேலை பண்ணிக்கொண்டு வீட்டுக்கு வருகின்றேன் அல்லது கிட்டத்தட்ட குளிர் காலத்திலே இலைகிளையெல்லாம் உதிர்த்துவிட்ட கூம்பிய நெட்டைக்காட்டுமரம் மாதிரி மொட்டையடித்துக் கொண்டு வருகின்றேன் என்கிறாள்; அதனாலேயே அவளையும் கூட்டிக்கொண்டு வந்திருக்கின்றேன்; அவளிடமே கேட்டுக்கொள்ளூங்கள்; முடியோடு எனக்கு முடிவெட்டலுக்குப் பின்னான அவளின் தொணதொணப்பும்கூடச் சேர்ந்து குறையட்டும்" என்று நீண்டதாக நகைச்சுவையாகப் பேசுகின்றேன் என்ற எண்ணத்தோடு சொன்னேன். பாபா திரும்பி அவளிடம் அதைப் பற்றி ஒன்றும் கேட்காமல், 'இளம்பெண்ணே, இந்த நகரத்திலே உள்ள சுவருக்கடிக்கும் வர்ணம் விற்கும் கடைகளிலே நிறச்சாயம் வாங்கப்போகும் கணவர்மார்களிடம் கடைச்சிப்பந்திகளும்கூட, இதைப்போலவே, மனைவியிடம் இருந்து இந்த வண்ணம்தான் வேண்டும் என்று உத்தரவாதக் கடிதம் வாங்கி வரச்சொல்வதுண்டு. இல்லாவிட்டால், கணவனுக்கும் தொல்லை; கடைச்சிப்பந்திக்கும் தொல்லை; காருக்கும் ..... இப்போது ஏறியிருக்கும் விலையில் அதை ஓட்டுகிற 'காஸலீனு'க்கும் தொல்லை." - காவிப்பல் தெரியச் சிரித்தார் கிழவர்..... எனக்கென்றால் பயமாகிப்போய்விட்டது.. எந்த நேரத்திலே இவள் இதற்கொரு பெண்ணிலைப்பார்வை பார்த்து பேசி வைக்கப்போகின்றாளோ என்று..... அவள் சிரித்துக்கொண்டாள்... "இடைப்படவே வெட்டிவிடுங்கள்.' சிக்கல் இனி கிழவருக்கில்லை; இரவு எனக்குத்தான் என்று வெட்டவெளிச்சமாகித் தெரிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;கிழவர் வெட்டத்தொடங்கினார்; முன்னிலைக்கண்ணாடியின் மேலே, 'அம்மப்பா/அப்பப்பா, உங்களுடன் நான் அன்போடு இருக்கின்றேன் - சமந்தா' என்று தடித்த அட்டையிலே எழுதி, அதன் கீழே, வட்டத்தலை, இரட்டைப்பின்னல், குச்சிக்கைகாலோடு ஒரு சின்னப்பிள்ளைக் 'க்ரையான்' கிறுக்கலும் ....... "என் மகளின் மகள்; மிகவும் பொல்லாதது.... மேலே ஸெர்வபோர்ட்டிலே அவள் அம்மாவோடு இருக்கின்றது; இந்த வார இறுதிக்கு என்னையும் என் மனைவியையும் பார்க்க வரும்; அதுபோகட்டும்; நீ எந்த நாடு?" என் கொப்புளிப்பு உற்சாகம் கொஞ்சம் வடிந்தது.... இ·து ஏழாவதோ எட்டாவதோ தரம் இங்கே முடிவெட்டிக்கொள்ள வருகின்றேன்... அதே கேள்வி மூன்றாவதோ நான்காவதோ தடவை இவரிடமிருந்து.... நான்கு முறை அறிமுகத்துக்கு அப்பாலும் ஞாபகம் வைத்துக்கொள்ள இயலாத அடையாளமில்லாத மனிதனா நான்? சமாளித்துக்கொண்டு, "போனதடவையே சொல்லியிருந்தேனே.. இலங்கை." "அப்படியா? மன்னித்துக்கொள் மகனே, நான் வயோதிகனாக மிகவும் விரைவாகவே ஆகிக்கொண்டிருக்கின்றேன்.' என்னிலே எனக்கே ஒரு வெறுப்பு ஏற்பட்டது.... நான் கூடத்தான் இன்று காலை நூல்நிலையத்திலே பார்த்துச் சிரித்த சீன மாணவனை ஒளியூடுபுகவிடுகண்ணாடியூடே பார்க்கின்றவன்போல ஊடுருவி அவனுக்கப்பாலே பார்த்துக்கொண்டு சிரிக்காமல் வந்துவிட்டேன்.. என்ன நினைத்தானோ? குற்றம் அழுத்தியது...... கிறிஸ்மஸ¤க்கு வைத்த மரம் இன்னமும் ஆறு மாதங்களுக்குப் பிறகும் கழற்றப்படாமலே ஒரு மூலையிலே சாத்திக் கிடந்தது.. தூசு, 'ரெஜிபோர்·ம்' செயற்கை வெண்பனிமீது அழுக்காகப் படிந்துபோய் அறைக்கு ஒரு இருட்தன்மையைத் தந்ததுவாய் அதைப் பார்த்தபிறகு எனக்குப்பட்டது. மேசையிலே பலபல வடிவங்களிலும் அளவுகளிலும் சீப்புகளும் தண்ணீர்க்குடுவையுள்ளேயிருந்து நீரை பூவிசிறியாக, அழுத்தத் தெறிக்க வைக்கும் ஹ¥க்காக் குழாய்களும்.....&lt;br /&gt;&lt;br /&gt;.....கிழவர் ஏதும் பேசுவதாகத் தெரியவில்லை..... அவரின் மனதை என் பதில் புண்படுத்தியிருக்கக்கூடுமோ? ஏதாவது நான் பேசித்தான் ஆகவேண்டும்..."கோடை காலம் ஆரம்பமாகின்றதுபோலத் தெரிகின்றது... கொஞ்சம் கூடவே தலைமுடி வெட்டினாற்றான், வியர்வையின்றி தடிமன் பிடிக்காது இருக்கும்.. ஏற்கனவே சைனஸ¤டன் நான் படும்பாடு சொல்லிமாளாது..." ...பேசிவிட்டேன்... "அப்படியானால், உன் விருப்பம்போலவே, இன்னமும் குறைத்துவிடுகின்றேன்..." கிழவர் நான் சொன்னதை மிகவும் அர்த்தத்துடன் எடுத்து குரலிலே என் சைனஸ¤க்கு வருத்தம் தெரிவித்து, வெட்டும் வேகத்தை என் பதிலை எதிர்பார்த்துக்கொண்டு குறைத்தார். "வேண்டாம் வேண்டாம்... எப்படியும் சரியான உக்கிரமான கோடை எறிக்கமுன்னர், மீண்டுமொரு முறை உங்களிடம் தலைமுடிவெட்ட வருவேன்தானே? அப்போது அவ்வாறு மிகவும் அளவிற் குறைத்து, பயிற்சி- இராணுவவீரர் முடிவெட்டு வெட்டிக்கொள்ளலாம்" - அவசரப்பட்டு, அதே நேரத்திலே சொல்லும் சொற்கள் ஒவ்வொன்றையும் பயனுள்ளதாக அர்த்தப்படுத்தும் வண்ணம் சொன்னேன். "ஏதேனும் சிக்கல் நிகழ்ந்துவிட்டதோ?" என்று, வாசிப்பதை நிறுத்தி ஓரளவு பதட்டத்துடன் கேட்ட அவள், எங்களிருவரினதும் ஒத்தொலித்த, "இல்லை, இல்லை; நாங்கள் எங்களுக்குள்ளே பேசிக்கொண்டிருக்கின்றோம்" பதிலுடன் விட்டவிடத்திலிருந்து தொடர்ந்து வாசிக்கத் தொடங்கினாலும், அடிக்கடி தலையை உயர்த்தி உயர்த்தி எங்களைப் பார்த்தும் கொண்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் ஒரு வெள்ளையரானபோதும், அறை முழுவதும், ஐம்பது அறுபதாம் ஆண்டுக்காலப்பாடகர்களினது படங்கள், கறுப்பர்-வெள்ளையர் பேதமில்லாது, கண்ணாடி தவிர்ந்த அனைத்துப் பிரதேசங்களிலும் பெரிய அளவுகளிலே ஒட்டப்பட்டிருந்தன. அதனால், அவரோடு பேசுவதற்கு இசை ஓர் ஊடகமாக ஆகமுடியுமென்று எனக்குத் தோன்றியது; நான் கிழவரிடம் நாட்டுக்குப் புதியவனாதலால், எனக்கு கறுப்பின மக்களின் ஜாஸ் மற்றும் ப்ளூஸ், ஆத்மீக, நாட்டுப்புறப் பாடல்களினை எப்படி வகைபிரிக்கின்றார்கள் என்று சொல்லமுடியுமா என்று கேட்டுக்கொண்டேன். பிறகு, இடைக்கிடையே ஒரு கைக்கண்ணாடியினை எடுத்து என் தலைக்குப் பின்புறம் -அங்கும் இங்கும்- வெவ்வேறு இடங்களிலும் கோணங்களிலும் வைத்துக்கொண்டு, "இது சரியா? இவ்விடத்திலே இந்த அளவுடன் முடிவெட்டுதலை நிறுத்திக்கொண்டாற் போதுமானதா? இது உனக்குத் திருப்தியா, மகனே?" என்று கேட்ட சந்தர்ப்பங்களைத் தவிர, மிகுந்த நேரமெல்லாம் (ஒரு பத்துநிமிடநீளம்), கிழவர் நிறுத்தாத இசைச்சரித வாகனம். இடைக்கிடையே, கிட்டத்தட்ட குரலினாலே ஒத்தோரின் வேறுபாடுகளைச் சுட்டிக்காட்டுமுகமாக, மெல்லிய குரலிலே வெவ்வேறு பாடவும் செய்தார். அவள் தலையை நிமிர்த்தாது, விழிகளையும் புருவங்களையும் மேலுயர்த்தி, கூடவே சிறு இடையறா முறுவலையும் உதிர்த்துக் கொண்டிருந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;இறுதியிலே, அவர் ஒரு துண்டினாலே என் புறங்கழுத்தினைத் துடைத்துக் கொண்டிருந்தபோது, "வெட்டுக்கூலி எவ்வளவு?" என்று கேட்டேன்; சாவாதானமாக, 'பன்னிரண்டு' என்றார். துணுக்கென்றிருந்தது; நெஞ்சின்மேலே போர்த்தப்பட்டு, கைகள் மேலே பரவிப் படர்ந்திருந்த (முடி உடலிலே விழுவதைத் தடுக்கும்) போர்வையின் கீழே, கைமுஷ்டிகளால், கதிரையின் இருகைப்பிடிகளிலும் ஆத்திரத்துடன், அதேநேரத்திலே அதிராமலும் ஒலியெழுப்பாமலும் தொடர்ந்து போர்வையை அவர் விலக்கும்வரையும் குத்திக்கொண்டேன். இன்று வியாழக்கிழமை மாலையாக இருக்கையிலே எப்படி பன்னிரண்டு...? கூடவே, பில், வெறுமனே ஒரு பத்து டொலர்த்தாள் கொடுத்துவிட்டு அவர் சேவைமீதுள்ள திருப்திக்காக மகிழ்ச்சியுடன் இரண்டு மேலே வைத்துப்போனதைக் கூடக் கண்டேனே..... நான் இந்த நாட்டுக்காரன் இல்லை என்பதை அறிந்து கிழவர் என்னை ஏமாற்றுகின்றாரா அல்லது என் நிறத்துக்காக எனக்கு மட்டும் இந்தக்கூலியா? .... எதுவெனத் தெரியவில்லை; சே! எவ்வளாவு என்று கேட்காமலே பத்து டொலரைக் கொடுத்துவிட்டு இரண்டு மேலே 'சந்தோஷ'த்துக்காக வைத்துவிட்டுப் போயிருக்கலாம். மேலதிகமான இரண்டு டொலர்கள் பெரிதல்ல....ஆனால், இந்த ஏமாற்றுப்படுகின்றோம் என்று அறிந்தபடியே ஏமாற்றுப்பட்டுக்கொண்டு, கையாலாகதவன் போல, 'பெரிய மனிதத்தன்மையுடன் சிறியவர்களின் கெடுதல்களை அலட்சியம் செய்து விட்டுப்போவதே என் உளப்பண்பும் செயல்வலிமையும்' என்று பொய்யாய்க் காட்டி, பன்னிரண்டு டொலரினையும் கொடுத்து மேலும் இரண்டு டொலர், 'திருப்தி உன் சேவை' என்று வைத்துவிட்டுப் போகிற ஆள் நான் என்ற பண்பும் நினைப்பும் பிறப்பிலிருந்தே எனக்கு இல்லை; அதிலும் குறிப்பாக, நான்கைந்து முறை என்னை அறிமுகப்படுத்திக்கொண்டபிறகும் என்னைப் பற்றிய படிமத்தை ஞாபகத்திலே ஏற்றியிருத்திக்கொள்ளாது, அதையும்கூட, "நான் கேட்டால் என்ன, நீ குறைந்தா போகப்போகின்றாய்? மீள அறிமுகப்படுத்திக்கொள்" என்ற தொனியிலே கேட்கும் ஒருவனை, அவன் வயது ஒன்றை மட்டும் காரணங்காட்டி, என்னை ஏமாற்றவிடமுடியாது; இதிலே முரண்படுவதுதான் என் நெறியும், சேரவே நீதியின் வெற்றியும் என்று எனக்குத் தெள்ளென தெளிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;பேசாமல், எழுந்து பின்காற்சட்டைப்பையிலே இருந்து, காசுப்பையினை எடுத்து எண்ணி, தனியே வெட்டுக்கூலி, பன்னிரண்டு டொலரினைக் கிழவரின் அமெரிக்க வெள்ளைக்கையிலே என் இலங்கை மண்ணிறக்கையினாலே வைத்து விட்டு, திரும்பிப் பாராமலே அவளுடன் நடந்தேன். கிழவர், பேசாமல், வாங்கி மேசை இழுப்பறைக்குள்ளே வைத்துவிட்டு, அடுத்துக் காத்திருந்தவரை அழைத்தது நான் நடக்கும்திசையிலே இருக்கும் கண்ணாடியிலே தெளிவாகத் தெரிந்தது; அவள், கூனிக் குறுகிக் கொண்டு, "அவருக்கு நீங்கள் 'டிப்ஸ்' வைக்கவில்லையே?" என்று கிசுகிசுத்தாள்... "ஏன் அவர் உன் மாமனாரா? நான் போகின்றேன்; வேண்டுமென்றால், நீ போய் பத்து டொலர் வெத்திலை பாக்குடன் தாம்பாளத்திலே வைத்துக் கொடுத்து விட்டு வீட்டுக்கு வா... இது மட்டும் என் ஊராயிருந்தால், அவர் நடத்தின முறைக்கு, அவருக்கு ஒரு பக்கத்துக்கு இரண்டு என்று நாலு கன்னத்திலே வைத்திருப்பேன்.' அவளுக்கு ஏதோ நடந்துவிட்டதென்று அப்போதுதான் புரிந்திருக்கவேண்டும். மௌனமாகத் தொடர்ந்தாள்; அறைக்கு வெளியே வந்து தாழ்வார ஓடையிலே நடக்கும்போது, கிழட்டுப்பாபா நடத்தின முறைக்கும் எனது சொல்லால் திருப்பி அடித்துக் கேட்கமுடியாத கையாலாகாத்தனத்துக்கும் அவளிலே கோபம் கொள்வது முறையாகாது என்பதோடு, மேலாக, கிழவர் என்னை பயன்படுத்திக்கொண்டது போலவே அவளின் நல்ல நோக்கத்தினை வந்த வீச்சிலேயே எதிர்த்திசை திருப்பி முகத்திலே அறைந்து எனது ஆத்திரத்தை தவறான முறையிலே வடிகால் செய்கின்றேன் போலத் தோன்றியது. அவளிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டு, தணிந்த குரலிலே நடந்ததைச் சொன்னேன். வெளியே, வாசலுக்கு வந்தபோது, முகப்பிலே ஒட்டியிருக்கும் கட்டணம் பற்றிய அறிவிப்புத்தாளினைக் கிழித்தெடுத்துக் கொண்டுபோய் அவரிடம் காட்டி ஏன் எனக்கு மட்டும் பன்னிரண்டு டொலர் என்று கேட்போமோ என்று ஒரு கணநேரவெறி; ஆத்திரத்திலே அறிவிப்புப்பலகையை நோக்கி நான் நடக்க, அவள் பயப்படுவது தெரிந்தது. பலகையை நெருங்கியபோது, அறிவிப்புப்பலகையிலே தை மாதம் முதல் சவரஞ்செய்தல் தவிர மிகுதி அனைத்துக் கட்டணங்களும் இரண்டு டொலர்களினாலே அதிகரிக்கப்பட்டதாக ஒரு புதிய அறிவிப்பு கிடந்தது. அவள் என்னைப் பார்த்துக் கொண்டு நெற்றியிலே கைவிரல்களாற் சொறிந்து கொண்டு, "பாவம் அந்தக் கிழவர்; எங்களைப் பற்றி என்ன நினைத்தாரோ தெரியாது " என்றாள். "வாயை மூடிக்கொண்டு கிட.... அவர் பாவமென்றால், எல்லாம் தெரிந்த திரிஞானி நீ, அப்போதே கூலி கூடினதைப் பற்றி வாயை மூடிக்கொண்டிராமல் எனக்குச் சொல்லியிருக்கலாம் தானே!" - இப்போதும் கையாலாகாத்தனத்திலே அவளிலே கத்தியபோதும் எனக்கும் எங்கோ வெகுவாக உறுத்தியது... பிறகு வீட்டு வாசலை அடையும் வரை நாமேதும் பேசவில்லை. வாசலிலே கதவைத் திறக்கத் திறப்பால் அவள் குடைந்து கொண்டிருந்தபோது, "ஆனாலும், கிழவன், பில்லுக்கு மட்டும் ஏன் பத்து டொலர் எடுத்தான்?" - என்னிடமே நானோ அல்லது அவளிடம்தானோ தெரியாது, ஆயினும்- கேட்டேன். அவள், என் ஆத்திரத்துக்குப் பயந்துபோய் கொஞ்சம் தயங்கிக் கொண்டிருந்துவிட்டோ, அல்லது திறப்பு சரியாகத் துவாரத்துள்ளே துழாவாததால் அதிலே வாசல் திறக்கும்வரை கவனத்தினைச் செலுத்திவிட்டோ, நாம் கட்டிடத்துள்ளே நுழையும்போது, "யாருக்குத் தெரியும்! பில் பன்னிரண்டு குடுத்ததை நாங்கள் இரண்டுபேரும்தான் கண்டோம்; அவரும்கூட சேவைத்திருப்திக்கான உபரித்தொகை கொடுக்காமலே போயிருக்கலாம்." அவள் சொல்கின்றது ஒரு வகையிலே நியாயமாகத்தான் பட்டாலும், பில் அப்படி திருப்தித்தொகை ஆறரைக்கு ஒரு தொழிலாளிக்குத் தான் கொடுக்காமல், எட்டரைக்கு ஒரு விருந்திலே தானே பரிசாகரனாக அதையும் எதிர்பார்த்து வேலை செய்யப்போகின்றவன் அல்ல...... அவள் இரவு முழுவதும் மட்டுமல்ல, மறுநாட்காலையிலும்கூட "இதையிட்டுப் பெரிதாகக் கவலைப்படவேண்டாம்" என்று சொல்லி பல விதங்களிலே என்னை உற்சாகப்படுத்தினாள்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்தநாள் பில்லைக் கண்டபோது, எதேச்சையாகக் கேட்பதுபோல, "பார்த்தாயா முடிவெட்ட விலையைக் கூட்டிவிட்டார்கள்?" என்று சொன்னேன்; "இப்போதா? அ·து எப்போதோ ஆண்டுத்தொடக்கத்திலே தையிலேயே கூட்டிவிட்டார்களே!" என்றான். கொஞ்சம் திக்கென்றது... முகத்தினை வேடிக்கை செய்கின்றவன் போல வைத்துக்கொண்டு, "அப்படியானால், ஏன் அந்தக்கிழவனுக்கு கணக்காக பன்னிரண்டு டொலரினை மட்டும் எண்ணி வைத்து வயிற்றிலே அடிக்கிறாய்? ஓர் இரண்டு மேலே வைத்துக் கொடுத்தால் என்ன, குறைந்தா போவாய்? நேற்றைக்கு இரவு நீ 'டிப்ஸி'லே எவ்வளவு உழைத்தாய் என்கிறதை நினைவிலே வைத்துக் கொண்டு பதிலைச் சொல்வாய் என்று நம்புகின்றேன்" என்றேன். "ஏய்! என்னை பற்றி என்ன நினைத்தாய்? போன மாசி மாதம் முடிவெட்டப்போனபோது, கூலிகூடியது முடி வெட்டியபிறகே எனக்குத் தெரியவந்தது; கையிலே இரண்டிரண்டாக மாற்றிய காசில்லை. அதே நேரம் கிழவருக்கு உபரித்தொகையாக இரண்டு டொலர் கொடுக்காமல் வரவும் மனம் ஒப்பவில்லை, அதனாலேதான் பதினாறாக வைத்துவிட்டு, அடுத்தமுறை வருகின்றபோது, பத்தை மட்டும் வெட்டக்கூலியாகத் தருகிறேன் என்று கொடுத்துவிட்டு வந்துவிட்டேன்; என்னைப் பற்றி என்ன நினைத்துக்கொண்டாய்?" கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டே சொன்னான் என்பதும் தெரிந்தது; அரசாங்கக் கடனிலே படிக்கும் வையோமிங் கிராமவிவசாயியின் மகன்.... மேலே ஏதும் நான் சமாளிக்கப் பேசுவதுகூடடாவனின் தன்மானம் என்று கருதுவதிலே தொட்டுக் கிள்ளிச் சினத்தினைக் கூட்டும் என்று பட்டது. பேசாமல் நகர்ந்தபோது, அவசியமற்றபோதும் எனக்காகப் பாடிவிட்டு, என் பன்னிரண்டு டொலர்க்காசை மேசை இழுப்பறையிலே போட்டுக்கொண்டிருந்த பாபா கிழவரின் முகத்தின் சலனவோட்டத்தையும்கூட, திரும்பிவருகையிலே நான் ஒரு கணத்திற்கேனும், முன்னாலிருந்த கண்ணாடியில் அவதானித்திருக்கலாமே என்று வருத்தப்பட்டுக்கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்தமுறை கோடைக்கு முடிவெட்டப்போகும்போது, 'நியூயோர்க் யாங்கி'களைப் பற்றிக் கேட்டாலும் பரவாயில்லை என்று என்னைச் சமாதானப்படுத்திக் கொண்டு, என்னிடம் "கூடவா, குறைவா, இரண்டுக்கும் இடையா?" என்று அபிப்பிராயம் மரியாதைக்குக்கூடக் கேட்காத இன்னொரு நாகரீக முடிவெட்டு நிலையத்துக்குப் போய், பேசாமலே இருந்து அவர்கள் வெட்டியதே முடிவெட்டு என்று திரும்பி வந்தேன். அவள் அந்த முடிவெட்டு, 'என் குருவித்தலைமேலே புல்லுக்கட்டு வைத்ததுபோல', பொருந்தவில்லை என்றாள். எனக்கென்றால், 'வெட்டும் கடையோடு முடி போய் விடவேண்டும்; இரவுணவின் சுவையைக் கெடுக்கக்கூடாது' என்பதற்கேற்ப, கத்தரிக்கோலோட்டும் எல்லா முடிவெட்டும் பொருந்தமானதே என்றுமட்டும்தான் பட்டது.&lt;br /&gt;&lt;em&gt;&lt;br /&gt;ஏப்ரில் 09, '00 ஞாயிறு 19:27 மநிநே.&lt;/em&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7096896-110937152573310221?l=punaivu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://punaivu.blogspot.com/feeds/110937152573310221/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7096896&amp;postID=110937152573310221' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7096896/posts/default/110937152573310221'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7096896/posts/default/110937152573310221'/><link rel='alternate' type='text/html' href='http://punaivu.blogspot.com/2005/02/blog-post_25.html' title='சிகை சிரைப்பு'/><author><name>-/பெயரிலி.</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='26' src='http://4.bp.blogspot.com/_OBFBfYawg8g/S8-wCagZnxI/AAAAAAAACCI/5ty9S8m_Ooc/S220/Abg_peyaB.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7096896.post-110929451805181011</id><published>2005-02-24T20:21:00.000-05:00</published><updated>2005-02-24T20:23:33.500-05:00</updated><title type='text'>அ-இ-இ-அ</title><content type='html'>&lt;strong&gt;அங்கேயும் இங்கேயும் இவன்களும் அவன்களும்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முதலாம் இவன் தான், அங்கு வடக்கில் போய் விழுந்திருந்தபோதும், தனது உரு மாறாதிருக்கக் கண்டான்; கூடவே இங்கே இவன் கொண்டிருந்த அகப்புறக்குறிகளும் நிலைத்தனவாய்.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாம் இவன் தான், அங்கு தெற்கிற் போய் விழுந்திருந்தபோதும், தனது உரு மாறாதிருக்கக் கண்டான்; கூடவே இங்கே இவன் கொண்டிருந்த அகப்புறக்குறிகளும் நிலைத்தனவாய்.&lt;br /&gt;&lt;br /&gt;இவன்களுக்கு எப்படி தாம் அங்கே வந்து வந்து விழுந்தோம் என்று தெரியாதுபோலவே, காலத்தினாலா, இடத்தினாலா, அல்லது இரண்டினாலுமேதானா தாம் நிலை பெயர்க்கப்பட்டிருக்கின்றோம் என்பதுவும் தெரியவில்லை. ஆனாலும், தாவரங்களின் காற்றும் பறவைகளின் எச்சமும் மண்ணின் சூடும் மகளிரின் குரலும் ஆடவரின் மூக்கின் கீழ்க் காணு/காணா மீசையும், இல்லா புலன்களுக்கு களிம்பு ஆங்காங்கே சுரண்டிய செம்பாய், கால இட நகர்வு கீற்றுக்கோடு காட்டின.&lt;br /&gt;&lt;br /&gt;முதலாம் அவன் காலையில் ஊர்க்கிழக்கிலே தன் வீட்டில் எழுந்து தின வரும்படித்தொழில் செய்ய, வடக்குத் திசையில் ஓடும்போது, முட்களின் மத்தியில் வலியுடன் கிடந்த புறக்குறி வகையில் தன்னையொத்தும் அகக்குறி வகையில் தன்னதை ஒத்திரா முதலாம் இவனைக் கண்டான். &lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாம் அவன் காலையில் ஊர்மேற்கிலே தன் வீட்டில் எழுந்து மாத வரும்படித்தொழில் செய்ய, தெற்குத் திசையில் ஓடும்போது, முட்களின் மத்தியில் வலியுடன் கிடந்த புறக்குறி வகையில் தன்னையொத்தும் அகக்குறி வகையில் தன்னதை ஒத்திரா இரண்டாம் இவனைக் கண்டான். &lt;br /&gt;&lt;br /&gt;இவன்களும் அவன்களும், ஊரில் இரு கோடிகளில், புறக்குறிகளை வைத்து ஒருவரை ஒருவர், காலம் இடம் சாராது, ஆளுமையிற் தம்மிடைச் சார்ந்தோராய்க் கண்டு கொண்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;முதலாம் இவனும் முதலாம் அவனும் அந்த ஊர் மத்தி நோக்கி, தம்மிடை அகக்குறிகளை அலசிக்கொண்டு தெற்கில் நடந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாம் இவனும் இரண்டாம் அவனும் அந்த ஊர் மத்தி நோக்கி, தம்மிடை அகக்குறிகளை அலசிக்கொண்டு வடக்கில் நடந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;மத்தியை அடைந்தபோது, புறக்குறிகளிடைத் தெரிந்த நட்புத் தெறித்து, அகக்குறிகளின் புரிதலின் அடிப்படையில் வாய்ப்போர் தொடங்கியிருந்தது, முதலாம் இவனுக்கும் முதலாம் அவனுக்குமிடையே, இரண்டாம் இவனுக்கும் இரண்டாம் அவனுக்குமிடையே - வெப்பமாக.&lt;br /&gt;&lt;br /&gt;போரின் இடையில், புறக்குறிகள் தாமே அறுத்துகொண்டு தூரே எறிபட, அகக்குறிகளின் அடையாளத்தை முன்வைத்து, முதலாம் இவனும் இரண்டாம் இவனும் ஒன்றிப்போனார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;போரின் இடையில், புறக்குறிகள் தாமே அறுத்துகொண்டு தூரே எறிபட, அகக்குறிகளின் அடையாளத்தை முன்வைத்து, முதலாம் அவனும் இரண்டாம் அவனும் ஒன்றிப்போனார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இவன்களுக்கும் அவன்களுக்கும் இடையில் இவன்- அவன் போர் உடலளவிலும் உக்கிரப்பட்டது.ஒவ்வொரு பகுதியாரும் தமது அகக்குறிகளைப் பற்றிப் பிடித்துக் கொண்டு எதிராளிகளின் குறிகளை இலக்காய் வைத்துத் தாக்கிப் பொருதினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இறுதியில் தோல்வி வெற்றி தெரியமுன்னர், முதலாம் இவன், மீள, தான் இங்கே வடக்கில் விழுந்திருக்கக் கண்டான்; இரண்டாம் இவன், மீள, தான் இங்கே தெற்கில் விழுந்திருக்கக் கண்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;காலத்திலும் இடத்திலும் திரும்பத் தாம் முன்னைய இருப்புகட்கு இறுக்கமாய்ப் பொருத்தப்பட்டிருக்க இரு இவன்களும் கண்டார்கள்; தாவரங்களின் காற்றும் பறவைகளின் எச்சமும் மண்ணின் சூடும் மகளிரின் குரலும்  ஆடவரின் மூக்கின் கீழ்க் காணு/காணா மீசையும்,புலன்களுக்குத் தெளிவாய்க் கால இட ஆளுமை அர்த்தங்கள் சொல்லின.&lt;br /&gt;&lt;br /&gt;பின்னர், இந்த ஊர் மத்தி நோக்கி தெற்காய் ஓடி வந்த முதலாம் இவன், இந்த ஊர் மத்தி நோக்கி வடக்காய் ஓடி வந்த இரண்டாம் இவனைக் கண்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;அங்கே தூர விழுந்ததாய்த் தெரிந்த முதலாம் இவனின் புறக்குறிகள் மீள ஒட்டிக் கொண்டிருந்ததாய் இரண்டாம் இவனுக்குத் தெரிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அங்கே தூர விழுந்ததாய்த் தெரிந்த  இரண்டாம் இவனின் புறக்குறிகள் மீள ஒட்டிக் கொண்டிருந்ததாய் முதலாம் இவனுக்குத் தெரிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இங்கே இவன்கள் இருவரும் ஒருவர் மற்றவரின் புறக்குறிகளை அறுத்தெறியப் பிடுங்குண்டு கொண்டிருந்தபோது, அங்கே அவன்கள் இருவரும் ஒருவர் மற்றவரின் புறக்குறிகளை அறுத்தெறியப் பிடுங்குண்டு கொண்டிருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அகக்குறிகள் "அடுத்த முறை காலத்தாலோ இடத்தாலோ நீங்கள் இடம்பெயர்க்கப்படும் காலம்வரை உங்கள் போருக்குள் நாம் காரணம் பேச வரமாட்டோம்" ஒளிந்து கொண்டிருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;காலத்திலும் இடத்திலும் அகமோ புறமோ, ஸ்தூலமோ சூக்குமமோ,  இடையில் ஒட்டிக்கொண்ட அடையாளங்களுக்காக மட்டும், அவன்களும் இவன்களும் அவர்களுக்குள் களமமைத்து, காரணம் செதுக்கிச் சமரிட்டுச் செத்துக் கொண்டிருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;-'99 ஜூன் 17, வியாழன் 13:34 மநிநே&lt;/em&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7096896-110929451805181011?l=punaivu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://punaivu.blogspot.com/feeds/110929451805181011/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7096896&amp;postID=110929451805181011' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7096896/posts/default/110929451805181011'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7096896/posts/default/110929451805181011'/><link rel='alternate' type='text/html' href='http://punaivu.blogspot.com/2005/02/blog-post_24.html' title='அ-இ-இ-அ'/><author><name>-/பெயரிலி.</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='26' src='http://4.bp.blogspot.com/_OBFBfYawg8g/S8-wCagZnxI/AAAAAAAACCI/5ty9S8m_Ooc/S220/Abg_peyaB.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7096896.post-110920038246442007</id><published>2005-02-23T18:12:00.000-05:00</published><updated>2005-02-23T18:18:09.956-05:00</updated><title type='text'>இருப்பும் இறப்பும்</title><content type='html'>அவர் செத்துப்போய்விட்டார் என்று யாரோ பேச்சு வாக்கில் எனக்குச் சொன்னார்கள். அன்று, அவர் செத்து இரண்டு கிழமைகள் என்றும் தெரியவந்தது. சிறுநீரகக்கோளாறா அல்லது இதயநோயா என்று நான் கேட்கவில்லை, இரண்டும் அவருக்கு இருந்தன என்பது நன்றாக எனக்குத் தெரிந்திருந்தும்கூட. ஒருவர் இறந்துபோனார் என்று தெரிந்தபின்னர், முன்னேபின்னே பேசியிருக்காத, எதேச்சையாக வீதியிற் சந்தித்த ஒருவரிடம், எதனால் இறந்தார் என்பதைக் கேட்டுத் தெரிந்து கொள்வதில் எதுவும் அர்த்தமிருப்பதாக எனக்குப்படவில்லை. ஆனாலும், பேச்சைத் தொடர வேறெந்தப் பேசுபொருளும் இல்லாத நிலையில், அவரிடம் கேட்டேன். "வீதி விபத்து" என்றார். இறப்புக்கான காரணத்தைக் கேட்டதில் அர்த்தம் இருக்கிறதாக எனக்கு இப்போது பட்டது; எனது சோர்வான எதிர்பார்ப்பின் முகத்திலே பச்சைத்தண்ணீ£ர் அடித்தெழுப்பியதுபோல... விறுவிறுப்பாக ஒரு மாற்றுப்பதில் கிடைத்திருக்கின்றது; ...... இதயநோயாலோ சிறுநீரகக்கோளாற்றாலோ இறக்கக்கூடும் என்று எண்ணியெண்ணி எத்தனை பாதுகாப்பாக இருக்கின்றோம்....கடைசியில் ஒரு வீதி விபத்து.....உடல்நோயிலிருந்து எவ்வாறு தன்னைப் பாதுகாத்துக்கொள்வது என்று எண்ணிக்கொண்டு புறநிகழ்வுகளை எண்ணாமல் நடந்தபோது, ஏற்பட்ட விளைவாகக் கூட இருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;சொன்னவரும் நானும் கொஞ்சம் நேரம் பேசாமல் இருந்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt; "அதைச் செய்யவேண்டும்" என்று அவர் செய்ய விரும்பியதாக ஒரு முறை கூறிய ஒரு விடயத்தை எனக்கு இவர் ஞாபகமூட்டிச் சொன்னபோது, எனக்கு நிம்மதியாக இருந்தது. சங்கடத்துக்குரிய மௌனக்கணங்களை உடைக்கும் தெருநாயின் குரைப்பும் கூட இனிமையானது. மிகுதிப்படி, அவர், தான் செய்யவேண்டும் என்று சொன்ன விடயத்தை அவர் வாழ்ந்தது போன்ற மேலும் இரு வாழ்க்கைக்காலத்தை அவருக்கு எவராவது வழங்கியிருந்தாலும் அவர் செய்திருப்பாரா என்பது பற்றி, சொன்னவருக்கும் எனக்கும் ஐயப்பாடு,  அதிமாகவே செறிந்திருந்தது. ஆனாலும், அவர் சொன்னதை ஆமோதித்து, "அவர் அதற்காவேனும் இன்னும் கொஞ்ச நாள் உயிருடன் இருந்திருக்கலாம்" என்று நான் விசனித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt; இறந்தவருக்கும் அவரின் இறப்பினைப் பற்றி எனக்குச் சொன்னவருக்கும் இடையில் பல பேதங்கள் இருந்திருந்தன, எனக்கும் அவருக்கும் எனக்கும் இவருக்கும் இடையில் இருந்ததை, இருப்பதைப் போலவே. கிட்டத்தட்ட அவர்களிடையே பேச்சுவார்த்தைகள் நின்றிருந்த காலங்களும் உண்டு என்பது எனக்கு தெரியும் என்றும் எனக்குச் சொன்னவருக்கும் தெரியும்; ஆனாலும், அடுத்த நிச்சலன நிமிடங்களின் பின்னால், தானும் செத்துப்போனவரும் சிறுவயதுமுதலே மிகவும் நெருங்கிய நண்பர்கள் என்பது எனக்கு எவ்வளவு தெளிவாகத் தெரியும் என்பதைச் சுட்டிக்காட்டிவிட்டு அதனால், தனக்கு அவர் இறந்தது எந்தவளவு பாதிப்பு ஏற்படுத்தி இருக்கும் என்பதை நான் உணரக்கூடுமோ என்று கேட்டபோது, என்னால் கேட்டவருக்கு மறுப்பு சொல்லக்கூடவில்லை. அவருக்கு,இறந்தவரின் இறப்பு வரைக்கு நீடித்த இருவரிடையான பகைமையினால், இறப்புக்குத் தானும் ஏதேனும் விதத்திலே பாத்திரவாளிதான் என்று வருந்துவதில், ஒரு பிராயச்சித்தம் தேடும் நோக்கோ, அல்லது தான் வருந்துவதினால், இத்தனை வருத்தம் உள்ள தன்மீது உள்ள பகைமையினால், மற்றவர் இறந்திருக்க சாத்தியமில்லை என்று நிறுவும் நோக்கோ வெகுவாகத் தொக்கி நின்றது என்று என்னுள்ளே யோசித்துக் கொண்டேன். &lt;br /&gt;&lt;br /&gt; இறந்தவனின் நிமித்தம் தான் வருந்தும் ஒரு மனிதனை அவனின் உள்நோக்குக் கருதிக்கூட, எந்தவிதத்திலும் வருத்தப்பட்டவைக்கும் நோக்கு இன்னொரு மனிதனுக்கு இருக்கக்கூடாது என்று எனக்குப் பட்டது. அவரினதும் இறந்தவரினதும் நட்பினது நெருக்கத்தினை வெகுவாக, கற்பனையிலே, ஆனால் பொதுப்படையாகச் சிலாகித்துச் சொன்னேன். அ·து அவருக்கு மேலும் உற்சாகத்தினைத் தந்திருக்கவேண்டும் என்பதும் அடுத்துப்புறப்பட்ட அவரின் சொற்களிலும் அங்கபாவங்களிலும் தெளிந்திருந்தன. குறிப்பாக நான் அந்த ஊருக்கு வரும் முன்னால், அவர்கள் இருவரும் எத்துணை நட்பாக இருந்தார்கள் என்பதை அவர் சுட்டிக்காட்ட முனைந்தார்; இ·து ஒருவகையில் எனது வருகைதான் அவர்களின் நட்புக்குப் பங்கமாகி, ஆண்டுக்காலங்களின் பின்னர், மற்றவர் இறந்துபோக வைத்தது என்று சொல்லும் தொனியோ என்றுகூட நினைத்தேன். இறந்தவருக்கும் எனக்கும் இடையிற்கூட அத்துணை நெருக்கம் இருந்ததில்லை என்று சொல்லி, ஆனாலும், செத்துப்போனவரிடம் எத்துணை மதிப்பு (நெருங்காமல் தூரத்தே நிற்றல்) எனக்கு இருந்தது என்றும் சொல்லி, அவர்களிடையே பிரிவுக்கோ அதேநேரத்தில் அவரின் இறப்புக்கோ நான் எந்தவகையிலும் பாத்திரவாளியில்லை என்பதை ஒரே வாக்கியத்திற் சொல்லமுயற்சித்தேன். &lt;br /&gt;&lt;br /&gt; இ·து இறந்தவருக்கு நட்பாக இருந்தது என்னுடனான நெருக்கத்தைத் தனக்குக் குறைக்கும் என்று அவருக்குப் பட்டிருக்கலாமோ என்னவோ, தான்கூட பிற்காலத்தில், இறந்தவருடன் சற்று நெருக்கத்தினை குறைத்துத்தான் இருந்ததாகச் சொன்னார். இப்போது, அவரிடமிருந்து இறந்தவர் பற்றிய எந்த இழப்பு ரீதியான அனுபவம் தொனிந்தும் எந்தச் சொல்லும் பிறக்கவில்லை என்று எண்ணிக்கொண்டேன். இறந்தவருக்காக, இருப்பவரோடு முரண்படுவதில் ஏதும் அர்த்தமிருப்பதாக எனக்குப் படவில்லை. பிறகு, அதற்காக நான் இறந்தால் அவரும் அவர் இறந்தால் நானும் கவலைப்படுவோம் என்று தெரிந்தது. "அதுவும் தெரியும்" என்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt; இறந்தவர்களைப் பற்றி அவதூறு சொல்லக்கூடாது என்றாலும், இறந்தவர் தனக்கு மிகவும் அநீதியும் துரோகமும் இழைத்திருப்பதாகவும் வருத்தத்துடன் கூறினார். இறந்த ஒரே மனிதரைப் பற்றி, இருப்பவர்களின் வருத்தங்கள் பலமாதிரிகளில் இருக்கலாம் என்று எனக்குத் தெரிந்தது. அநீதி என்று அவர் கருதிய ஒவ்வொன்றைப் பற்றிச் சொன்ன பிறகும் இறந்தவரைப் பற்றி அவதூறாகத் தான் பேச விரும்பவில்லை என்பதினை நான் நன்றாக உணர்ந்து கொண்டே அவர் சொல்கின்றதைக் கேட்க வேண்டும் என்பதையும் வற்புறுத்திச் சொன்னார். நான் செவிமடுத்துக் கேட்காமலே ஒவ்வொன்றையும் ஆமோதித்துக் கொண்டிருந்த நேரங்களில் இறந்தவர் எனக்கும் எந்தவளவிற் கெடுதலேற்படுத்த முனைந்திருக்கின்றார் என்பதை அதிகம் தெரியாத இவரிடம் சொல்லலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt; பிறகு, என் கையிலிருந்த பையுட்குளிருந்த காய்கறிகளைப் பார்த்துவிட்டு, தானும் அந்தக் காய்கறிகளினையே மிகவும் விரும்பி உண்பதாகச் சொன்னார். அவரின், மேற்சட்டையினைப் போலவே என்னிடமும் ஒரு மேற்சட்டையிருப்பதைச் சொல்லி, ஆனால், அதன் நிறம் வேறு என்பதையும் சொன்னபோது, அவர், காற்பந்தாட்டதில் எனக்கு ஈடுபாடு உண்டா என்பதை வினாவினார். அதற்கு எனது மச்சான், ஊரிலே ஒரு சிறிய காற்பந்தாட்டக்குழுவுக்குத் தலைவன் என்று அவன் பெயரைச் சொன்னபோது, அவன் தன்னுடைய நெருங்கிய நண்பனே என்று மிகவும் குதூகலித்து என் தோளிலே உரத்துத் தட்டினார். வலி எனக்குத் தெரியவில்லை. பின்னர் ஓர் அரை மணிநேரம் மழை வரும்வரைக்கும் வீதியோரத்திலே வெயிலில் நின்று இறந்தவரைத் தவிர்த்து வேறேதோ கதைகள் பேசிக் கொண்டிருந்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt; போகும்போது, சிறிது தூரம் நடந்தவர், திரும்பி, இறந்தவர் செய்ய விரும்பிய காரியத்தைச் செய்யாமல் இறந்தது தனக்கு இன்னமும் வருத்தத்தைத் தருகின்றது, இனியும் தந்து கொண்டிருக்கும் என்றும், அவர் இருந்திருந்தால் இன்னும் ஓரிரு வருடங்களுக்குள் நிச்சயமாக அதைச் செய்துமுடித்திருப்பார் என்றும் திரும்பத் திரும்ப இரண்டுமுறை சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt; இறந்தவர் எத்துணை கால அவகாசம் கிடைத்தாலும் அதனைச் செய்யக்கூடியவர் இல்லை என்று நிச்சயமாகத் தெரிந்த எனக்கும் அவர் அதற்காக உண்மையிலேயே வருந்துகின்றார் என்றே அன்றைக்கும் அதற்குப் பின்வந்த அவரைச் சந்திக்கும் காலங்களிலும் பட்டது.   &lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;'99 ஜூன் 18&lt;/em&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7096896-110920038246442007?l=punaivu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://punaivu.blogspot.com/feeds/110920038246442007/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7096896&amp;postID=110920038246442007' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7096896/posts/default/110920038246442007'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7096896/posts/default/110920038246442007'/><link rel='alternate' type='text/html' href='http://punaivu.blogspot.com/2005/02/blog-post_23.html' title='இருப்பும் இறப்பும்'/><author><name>-/பெயரிலி.</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='26' src='http://4.bp.blogspot.com/_OBFBfYawg8g/S8-wCagZnxI/AAAAAAAACCI/5ty9S8m_Ooc/S220/Abg_peyaB.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7096896.post-110911111968249731</id><published>2005-02-22T17:24:00.000-05:00</published><updated>2005-02-22T17:37:16.493-05:00</updated><title type='text'>தெளிவு</title><content type='html'>சோர்ந்துபோன உள்ளத்திற்கும் அது வேடிக்கையாக இருக்கிறதோ என்னவோ, அந்தக் காய்ந்துபோன அ·றிணைச்சருகு, இலையுதிர்(க்கும்) காலந்தப்பிக் காத்திருந்து, இந்தக்குளிர்காலம் உதிர்மாசியில், சைபீரியக் கூதற் காற்றில்லா வேளையிலே, சட்டென மாரடைப்பிற்போன உயிராய், மேட்டுநிலஞ் சாய்ந்த மொட்டைமரப்பந்தம்விட்டு, சுற்றிச்சுற்றி இந்த வெளித்தேசமாணவர்கட்டிடமதிலுக்கு இந்தப்புறமா, அந்தப்புறமா வந்து நிலந்தொடும் என்று, தனக்குத்தானே போட்டிவைப்பது, பந்தயத்தில் முதலிட்ட ஒருவன், குதிரைகள் எல்லைக்கோட்டைத் தாண்டும் போதுள்ள மனப்பதற்றத்திற்கு உள்ளான ஆர்வம்மீறி.....&lt;br /&gt;&lt;br /&gt;          ..........-"நாசமாய்ப்போச்சு, அனுலாவை நான் கட்டேலாமத் தடை வரத்தான் போகுதோ? சனியன், இழவெடுத்த இந்த இலை அந்தப்பக்கம் விழும்போல இருந்ததாலதானெ, அங்காலை விழுந்தற் கஷ்டமில்லாமக் கட்டுவன் எண்டு யோசிச்சன். ஆய்... தடைதானே வரப்போகுது; இப்பமட்டும் என்ன வாழுதாம்? கட்டேலது எண்டு யோசிக்கயில்லைத்தனெ? மற்றது, உப்பிடி இங்கை இலை விழுறதுக்கும் இலங்கையில கலியாணங் கட்டுறதுக்கும் என்னத்தைச் சம்பந்தமெண்டுறன்? விசர் மூடநம்பிக்கையெல்லே உது?"-(தடையில்லை எண்று வந்திருப்பின், மன சந்தோஷப்பட்டிருக்கும் என்பது வேறு விடயம்). ஆனாலும், புலம்பிய மனம், சின்னவயதிலே பழக்கப்படுத்திப்போன விளையாட்டு இது, இப்போது, அது சோர்வுற்று தன் உறுதிதலரும் காலங்களிற் தன்னைப் பிரச்சனைச் சிந்தனைகட்குட் தளையவைக்காது தப்பவைக்க எண்ணிக்கையைக் கூட்டிக்கொள்கிறதோ? இதேமனம், சரிவந்திருப்பின், அடுத்த இலை விழுதற்காய், பந்தய வாக்கியத்தை வேறொரு பிரச்சனையில், தம்பியின் படிப்பில், நாட்டுப்பிரச்சனையில், தயாரித்துக்கொண்டு வேறு காத்திருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;        இப்போது, கொஞ்சக்காலமாகவே சிந்தனை வேறு, மனம் வேறு என்பதுவாய்ப்படுகிறது. நானே மூன்றாம் ஆளாக நின்று, என் மனம்-சிந்தனைகளின் போட்டிச் செயற்பாடுகளைக் கவனித்து, பரிகசித்து, பாராட்டி, அதற்கான காரணம் தேடி...., வர வர இரண்டினதும் விருப்பு வெறுப்பு வித்தியாசங்கள் தெளிவாகத் தெரிகின்றதாகி.... (இங்கு, மனம், உணர்வும் சிந்தனை, அறிவும் ஆட்டிவைக்கும் போட்டிப்பொம்மைகள் என்பதாகவும் ஓர் அபிப்பிராயம்; ஆனால், சுகுணன் மனோதத்துவத்தில், ஒருவித அறிவும் இல்லாமல் இருப்பவன் என்பதால், இதுபற்றித் தெளிவாகக் கூறமுடியதுள்ளேன்).&lt;br /&gt;&lt;br /&gt;        "ஹேய், சுகூனான்", மூவரையும் (நான் + மனம் + சிந்தனை) ஒன்றாய்ச் சிலிர்த்துக் கொண்டுதிரும்ப வைத்த Ghanian டேவிட் ஒனலூலூவின் குரல் மேற் தொடர்ந்து, "Look at the blackboard, man"...&lt;br /&gt;&lt;br /&gt;                                           ...."...Hence, the algorithm of the Newton-Raphson iteration formula.."-'எண்களின்மீதான அலசல் &amp; முறைகள்' கற்பிக்கும் சீன ஆசிரியர் (4Q என்பதை 'ரம்போ சில்வெஸ்ரர் ஸ்ரலொன்' அடிக்கடி (அல்லது அதுமட்டுந்தானோ?) உச்சரிக்கும் 'புணர்க உன்னை' என்பது போல் உச்சரிக்கும் ஆங்கிலம்) இன்னொரு அத்தியாயம் தொடங்கி இருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;        'Iteration'- அண்ணளவான திருப்திவிடை வரும்வரை மீளமீளப் பிரயோகித்தல்; இந்தக் கணிதச்சமன்பாட்டில், எழுமான நம்பிக்கையிற் பிரதியிடுந்தானாமே, தெரியாத கணியத்திற்குச் சமன்பாட்டின் விடையாகவரும்வரை மீளமீளப் போட்டு, அப்படி வரவைக்கும் தானமே, சரியான தீர்வு, அந்தச் சமன்பாட்டிற்கு என்றுகொண்டு..., இந்த நியூட்டனுக்கும் இரப்சனுக்கும் ஏன் இந்தமுறை, கணிதத்திலும் தத்துவத்திற்கு மிகப்பொருத்தமென்று தெரியாமற் போய்விட்டது? வளையியா, நேர்கோடா, இழிவுப்புள்ளி உண்டெனில் எத்தனை, உயர்வுப் புள்ளி உண்டெனில் எத்தனை, எங்கே எனத்தெரியா வாழ்க்கைச்சமன்பாட்டிற்கு, அது விரிதொடரா, ஒருங்கு தொடரா என அறியாத நிலையிலே எழுந்தமானமாகத் தெர்ந்தெடுக்கும் வாழ்வுமுறை சரியா எனத் தீர்மானிப்பது, விடையாக அந்த வாழ்வுமுறையிலேயே திருப்தியடைவதிற்றானே கிடைக்கிறது? எந்த அளவிற்கு எம் எழுமான &lt;br /&gt;நம்பிக்கைப்பிரதியீடு சரியாக எடுப்போம்? கிட்டத்தட்டச் சரியாக எடுப்பினும், எந்தப்பெறுமதிக்கும் விடையும் அழுத்ததிருத்தமக அதுவாகவே வரப்போவதில்லை. வழுவுடன் கூடிய ஒரு விரிசல் இடைவெளி இருக்கத்தான் போகிறது; ஆனால், அதுவே, நாம் எமக்குப் போதும் எனக் கருதிக் கொள்ளும் சகிப்புமட்டிற்குள் அடங்கிவிட்டால்....&lt;br /&gt;&lt;br /&gt;        ...-"மடைத்தனமாக அறிவுஜீவித் தத்துவஞானித்தனம் காட்டுகிறீரோ? சும்மா உங்களைப்போல ஆக்கள் இப்படிக்கதைக்கிறதைக் கௌரவமெண்டும் 'intellectual exercise' எண்டும் நினைச்சுக்கொண்டு, தனக்கும் மற்றவைக்கும் பிரயோசனமில்லாமை,...", மனம் கோபம் காட்டுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;        என்ன செய்ய? எல்லா விடயங்களிலும் எனக்கு உள்ளிருந்தே இவையிரண்டும் உனக்கு முதலிடம் இல்லை எனக்கா என வாக்குவதப்பட்டு, அடிபட்டு, ஒன்றையொன்று பரஸ்பரம் இரணப்படுத்தி, இறைச்சிமுள்ளுக் குத்திக்காயப்பட்ட தன் கடைவாய்க்குருதியையும் சுவைக்கும் நாய்களென...ம்ம்ம்..வேதனை யாருக்கு? எனக்கு, சுகுணன் செல்லத்துரைக்கு, இந்த இரண்டையும் சமநிலைப்படுத்தவேண்டிய நடுவனுக்கு. மனம், மனிதன் உணர்வு நுகரவிடில் வாழ்வேது என்பதுவாக அடம் பிடிக்க, அறிவோ, உணர்வே வாழ்வாகாது, உணர்வுதன் நுகத்தடி என்னிடன்மிருக்கட்டும் என்ற நினைப்பில்....என்ன செய்ய?&lt;br /&gt;&lt;br /&gt;        நேரத்தைப்பார்க்கிறேன்; 10:30; கடிதம் வந்திருக்குமோ? இன்று யார் யாரிடமிருந்து வந்திருக்கும்? அம்மா, அனுலா, பெனடிக் அல்லது சுகுமார்? (தம்பி, பெட்டிகளைச் சும்மாய் ஒன்றின்மேலொன்றாய் அடுக்காதே); ஒன்றும் வராமலும் போகலாம்; சும்மா ஆசைப்பட்டுவிட்டு பிறகு எதுவுமே இல்லாவிட்டாற் சுருங்கிப்போய்...எதிர்பார்ப்பு குறைவாயிருந்தால் ஏமாற்றமும் குறைவாக இருக்கும். மீண்டும் அகத்தளப்போர் ஆயத்தசங்கநாதம்... மனம் பேனையை எடு என்பதாய்...&lt;br /&gt;&lt;br /&gt;அந்தக்காகிதத்தை நான் நேசிக்கிறேன்;&lt;br /&gt;நான் அறிந்தேயிருக்கிறேன்,&lt;br /&gt;  இந்தக்குளிரூறும் மாரியிலுமங்கு&lt;br /&gt;     என்வீட்டுத் தென்கிழக்குப்புளி&lt;br /&gt;      காய்த்துக்குலுங்குவதால் மட்டுமிங்கு&lt;br /&gt;       என் வாழ்க்கை ஒன்றும் மாறிவிடப்போவதில்லையென்று.&lt;br /&gt;   அக்காவின் குழந்தைக்கு ஆறாவது பல் &lt;br /&gt;             முளைத்தது  காரணங்காட்டி&lt;br /&gt;               ஒன்றும் என் அகதி அந்தஸ்து, &lt;br /&gt;                 இங்கு உயர்ந்துவிடப்போவதில்லை &lt;br /&gt;                    என்று தெரிந்தவனாகவும் தான். &lt;br /&gt;என்றாலும்,&lt;br /&gt; அகதிச் சோமாலிக் குழந்தைகளின் குச்சுக்கைகால்கள் சடைத்ததென,&lt;br /&gt;                  உண்மைமனிதர்களின் எண்ணிக்கைத் துளிர் தாங்கி, &lt;br /&gt;                   இலையாடை அவிழ்த்தெறிந்து நாணம் தொலைத்த மரச்சாலையூடே,&lt;br /&gt;                  சந்திக்கடை 'பணிஸ்'*ன் வட்டம்+நிறம்+பொங்குவளம்&lt;br /&gt;             நினைவுக்குக் கொணரும் இம்மங்கோலிய முகங்களிடையே,&lt;br /&gt;           என் தனிமை ஆசுவாசப்படுத்த,&lt;br /&gt;  நான் நேசிக்கும் என்னை நேசிப்பவற்றின்&lt;br /&gt; நினைவுகள்/நிழல்கள் தாங்கி வரும் &lt;br /&gt;    நீல, சிவப்பு ஓரவரையிட்ட வெள்ளுறைவசிக்கும்&lt;br /&gt;      அந்தக் கடல்கடந்த ஆஞ்சநேயப் பழுப்புக்காகிதத்தை&lt;br /&gt;                                      நான் நேசிக்கிறேன்,&lt;br /&gt;                                      நேசித்தே ஆகவேண்டும்,&lt;br /&gt;                                  என் காதலி,&lt;br /&gt;                          அ·து ஒட்டிய உன் சிவப்பு உதடுகளை&lt;br /&gt;                                நான் உள்ளன்பாய்&lt;br /&gt;                                நேசிப்பது போலவே.&lt;br /&gt;&lt;br /&gt;        "சுகொணொன்", சூடானியர் அல் பஷீர் அரபு உச்சரிப்புடன் மணிக்கூடு தூக்கிச் சுட்டுவிரல் நீட்டிச் சிரிக்கிறார் (எல்லோருக்கும் இவன் எங்கே 10:45 வருமென்று உயிர்வாழ்பவனென்று தெரியும்; ஆனால், நண்பர்களே, யார் உங்கள் நக்கலை இங்கே பொருட்படுத்தப்போகின்றார்கள்?).&lt;br /&gt;&lt;br /&gt;        சரசரவெனப் படிக்கட்டில் இறங்கி, வளைவிற் சறுக்கியோட, முட்டுப்படாக்குறையாக, கடிதங்கள் நீட்டி ஸியாட் `வ்ப்ரா (இந்தச் சோமாலியர்கள் நைஜீரியாவுக்குத் தப்பியோடினாலென்ன, `வ்ப்ராங்`வ்போட் (Frankfort) இலிருந்து 'Lufthansa' நியூயோர்க் கடத்தினாலென்ன, அமெரிக்க இராணுவம் சுட்டாலென்ன, சீனா படிக்கவந்தாலென்ன, நடுக்கடலிற் போக்கிடமின்றித் தவித்தாலென்ன, பெயரென்னவோ Syed Farahதான்), "ஹென் லீஹாய் நீ (மிக்க அபாயம் வாய்ந்த/மோசம் நிறைந்த (மனிதனப்பா) நீ), ஒவ்வொருநாளும் கடிதங்கள்" (அந்த வார்த்தைகளூடே சில ஏக்கங்களும் ஊடோடியது அறியாமலில்லை நான்; ஆனாலும் பையனே, நீ நினைப்பது போல பாசம் ஒன்றும் இங்கெனக்குச் சந்தோஷத்தைமட்டும் எடுத்தளித்துக்கொண்டிருக்கவில்லை. உனக்குத் தெளியவைப்பது கடினமென்று நினைக்கிறேன்; நீ இந்தச் சின்ன நகரின் 'திறந்த' பொருளாதாரவிளைவு இரவு நடனவிடுதிகளில் இரண்டு மூன்று மணிவரை பிறந்து இறந்து, மீண்டு(ம்) இறப்பதுக்கென்றே பிற(ழ்)ந்து கொட்டும் ஒளிவண்ணங்கள், பொப்மாலியின் 'No woman no cry', 'றேக்கே' 'டெசி`பல்' இடி ஒலி சகிதம் 'Marlbaro'புகைவளையம் சுற்றி, 'Stainbrau' மதுக்கிண்ணம், உடல்வெப்பநிலை உயர்த்தும் சீனப்பெண் "நலமுடன் வாழ்"வதற்காய் உரசும்போது, நான் என் அறைமூலையில் ("Cremation chamber"-நேபாளி, சிரோன்மணி பஞ்சியாரின் கருத்து(ம்)) கட்டிலிற் தலைபுதைத்து, கடிதங்களிற் கண்ணீர்க்கறை வரைதலும் புகைப்படங்களின் பார்வைகளில் முக்கோணக்குன்று கடற்கரையில், வீதிகளில், மலைநாட்டுத்தலைநகர் ஏரிக்கரையில் நடப்பதும். சிலவேளை, நான் நினைப்பதற்கு எதிர்மாறாய், நீயும் அந்தச் சல்லாப விடுதிகளினுள்ளேயும் கூச்சலிடு கூட்டத்துள்ளேயும் தனிமையில் சோமாலிய வாழைத்தோட்டங்கள் உள்ளே வாழலாம்; யார் கண்டது? ஆக, சிந்தனைகள் அவரவர் சார்பானவை, தம்பி (குறிப்பாக, மற்றவர்களைக் கணிப்பிடுகையில்)).&lt;br /&gt;&lt;br /&gt;      தகனவுலை அறைக் கட்டிலிற் சப்பாத்துக்களுடன் விழுகிறேன். எதை முதலில் உடைக்க? மீளச் சமர்க்களம் என்னுள் அமையவிழை...எல்லாத் தெற்காசியர்போல எனக்கும் மண்டையைப் போடும்போது கேட்டாலும் தாயா, தங்கையா, மனைவியா, மகளா உயர்த்தியென்று கூறமுடியாது. என் காதலுணர்வு குற்றமாக இல்லாதபோதும், வீட்டார் அங்கீகரிக்காதவரை, குற்றவுணர்வு தவிர்க்கவியலாததே; தானே பார்த்துக் கல்யாணம் செய்துவைத்த மருமகள்மீதே, தன் மகனின் அன்பு பங்கிடப்படுகிறதே என்று தாய் பொறாமைப்படும் வேளையில், என் அம்மாவின் நிலை சற்று இன்னமும் கடினமானதுதான், என் காதல், அதன்மேலாய் அதுள்ளிட்ட மதம், மொழி, நாட்டுநிலைமை காரணமாக. (அந்த குற்றமனப்பாங்கை என்னிடமிருந்து அறிவு போலித்தனமாயேனும் மூடிமறைக்கும்படி, அம்மாவிற்கே முதலிடம் கொடுக்கிறேன் என்பதுபோல்) வீட்டுக்கடிதத்தை எடுக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;        இரண்டு கிழமைகளுக்கு முன்போட்ட கடிதம். முதற்பந்தி எப்போதும் போல வாசிக்கத் தேவையில்லை; அறிவேன்; அதே, 'அன்பின்..,நாம் நல...அதுபோல்...; உடல் நல...நன்றாகச் சாப்பி....; குளிருக்குள் வெளி......'  எல்லாத்தாய்மாருக்கும் இப்படி தாம் எழுதிவிட்டால், பிள்ளைகளுக்குக் கஷ்டம் ஏதும் வராது; பிள்ளைகளும் வரிக்குவரி அந்தவரியிலேயே நடக்கும் என்ற நம்பிக்கை. ஆனால், அம்மாக்களே, உங்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை, இந்தத் தக்காளிப்பாகுக்குள் நெளியும் புழுப்போன்ற பன்றியிறைச்சியுடன் பசையாய் ஒட்டும் சோற்றுடனும் அவதியுற்றபடி, புட்டுக்கும் முட்டைப்பொரியலுக்கும் மாசிச்சம்பலுக்கும் நாங்கள் நாக்கைச் சப்புக்கொட்டுவது; நீங்கள் அறிந்திருக்கப்போவதில்லை, இந்த சைபீரிய வான்+நிலம் தொட்டுவரும் கொடுங்காற்று நான்கைந்து உடுப்புகளூடே உடல் நுழைந்து மூட்டுமூட்டாய்க் குறிவைத்துக் குத்தி 'wintergeno' தடவக் கேட்கையிலே, நாம் ஊரின் கோடைவெயிலின் கடற்குளியல்களில் மீண்டு நீந்துவதை; உங்களுக்கு யோசிக்க அவசியமில்லை, இங்கு, நாசி மேட்டுச் சந்துகளில் உற்பத்தியாகி ஒருங்கற்கண்கீழ்ச்சுருக்கவளைவுகளின் தொடலிவளையிவடிவு கொண்டு, புவியியலின் சமவுயரக்கோடுகள் என்பதாய்க் கீழோடும் முகச்சுருக்கங்காட்டி, எந்திரம் உயிர்ப்பூட்டிப் புறப்படத் தயார்நிலையிருக்கும் 'bus' என மென்நடுக்கம் உடலோடச் சாய்ந்தமர்ந்திருந்து மதிய வேளைகளிற் கலாவரையைத் துரும்பு வைக்கும் கிழவிகளின் முகங்களில் நாங்கள் காணும் அம்மம்மாக்களினால், அந்நிய நண்பர்களுக்கு எம்  துளி(ர்)க்கண்ணீருக்கு அபாண்டமாய்ச் சுழல்காற்றுதூற்று மணலைச் சுட்டுவிரல் காட்டுவது. ஆக, உங்கள் எண்ணங்களில் (நீங்கள் கவலைப்படக்கூடாதேயென்றெண்ணி) நாம் எழுதும் கடிதங்களின்படி, "பிள்ளை உலகப்பிரசித்திபெற்ற சீனவுணவுகளில் உடம்பை உருளையாக்குகிறான்; உடலுக்குகந்த குளிர் சீதோஷணத்தில், உருவத்தே மெருகும் பளபளப்பும் ஊட்டுகிறான்; பல தேசத்தோருடன் சேர்ந்து உலகைக் கண்டு களிக்கிறான்." ஆனால், அம்மாக்களே, நாங்கள் சைபீரியன் வாத்துக்களோ, இலங்கை அமைச்சர்களோ அல்ல,கோடையில் சைபீரியாவிற்கும் மாரியில் திசமகராமவிற்கும் புலம்பெயர்ந்தோடிக்கொண்டிருக்க... (உங்களுக்கு வ.ஐ.ச. ஜெயபாலனின், 'மக்வூ' பறவைகவிதை விளங்கப்படுத்தவும் சேரனின், 'பனங்கொட்டைகனவுகள்' பற்றிச் சொல்லவும் இம்மனநிலையில் என்னால் முடியாது); நாங்கள் சட்டையுரிக்கப் பாம்புகள் இல்லை; இடநிறம் மாறப் பச்சோந்தி வகையறாக்கள் இல்லை; மனிதர்கள்; வெறும் உணர்வுகளுடனும் அறிவுடனும் போராடும் தீப்பிழம்பு அகப் போராளிகள்; எங்களுக்கும் மனம், உணர்வு.....--&lt;br /&gt;&lt;br /&gt;               --"நிறுத்து! மனமே, இதுவல்ல உன் உணர்ச்சிப்பேச்சுக்கான தருணம்; மேலே கடிதத்தை வாசி", பெரியமனிதத்தோரணையிற் காத்திருந்த சிந்தனை அதட்டியது.&lt;br /&gt;&lt;br /&gt;        "...வேறென்ன?"; இந்த 'வேறென்ன'விற்குப்பிறகுதான் புதிதான ஏதாவது விபரங்கள் கடிதத்தே தொடரும். "..தம்பி படிக்கிறானில்லை; நெடுக ஊர்சுற்றல். ஊரிலையென்றாற் கண்டபடி ஆமிச்செக்கிங்; சொல்வழியும் கேட்கிறானில்லை; என்ன செய்யவென்றே தெரியவில்லை." -அம்மா, எந்த இடத்திலாவது மேல்நிலைப்பள்ளிக்கூடம் படிக்கும் பையன் படிப்பிலே மட்டும் கவனம் வைத்துச் சுற்றாமல் இருந்ததைக் கேள்விப்பட்டிருக்கிறாயா? நான் என்னவென்றால், இழந்ததற்காக ஏங்கிக் கொண்டு, அந்தக்காலம் மீண்டும் வராதா என்று.... 'Cuba' படம் பார்க்கப்போய், இறுதியில் என் இளமை ஆதர்ஸ நாயகன், 'Fidel Castro' அமெரிக்க அடக்குமுறையிருந்து விடுபட்ட 'Havana' மக்கள் 'Cuba, Cuba' எனக் ஆர்ப்பரிக்கப் பேசுகையில், அரங்கில் நண்பர்களுடன் கதிரைகளின் மேலேறிக்கொண்டு நின்று 'ஈழம், ஈழம்' என்று கத்தி, அரங்கு உரிமையாளர் வந்து கெஞ்சி இருத்திய காலத்திற்காக ஏங்குகிறேன் அம்மா; இரவு ஏழு ஐம்பத்தைந்துக்குக் கொழும்பு புறப்படும் புகையிரதத்தின் காவலாளியின் பச்சைகொடியை, காட்டிக் கொண்டிருக்கையிற் பறித்துக் கொண்டு சைக்கிளிற் பாய்ந்தோடிய காலமெண்ணிப் புழுங்குகிறேன் அம்மா. அந்த நண்பர்களில் எவருமே இன்றிங்கில்லையே! சிவம் மட்டும் உவ்விடம் விட்டு நகரேன் என்பவனாய்; மிகுதி, எத்தனை பேரை நாட்டுப்பிரச்சனைக்கு, எந்தெந்த விதங்களிற் பலிகொடுத்தேன்: பொது எதிரிக்கெதிராகப் போரிட்டு மடிந்தவராய், அப்பாவித்தனமாகக் காணாமற் போனவராய், தமக்குள் ஆயுதங்களைக் குறி பார்த்தவர்களாக, போதாக்குறைக்கு உலகெங்கும் அகதிகளாய்ப் பரந்து என்னைப் போலவே இந்தக் கணங்களிற் தத்தம் அம்மாக்கள், காதலிகள், நண்பர்கள் கடிதங்களை எதிர்பார்த்துக் கொண்டிருப்பவராக... அதனால், அவனை, தம்பியை விட்டுவிடு. படிக்கச்சொல்; பாதுகாப்பாக இருக்கச்சொல்; அவை அவசியம்; ஆனால், அந்த இளமையின் உலகறியா இனிமையைக் கெடுத்து விடாதே. இக்கணத்தே, அவன் அதிகம் மீறிய கவனம், கவலை, 'குக்குர்பிட்டா' என்பதைத் தாவரவியற் சோதனைக்கு, எப்படி எழுத்துப்பிழையின்றி, ஆங்கிலத்தில் எழுத்துக்கூட்டி எழுதுவது என்பதாக மட்டுமே இருக்கவிடு. இந்தப்பூசணிக்காய் உலகச்சுமைகள் இப்போதைக்கு அவனுக்கு வேண்டவே வேண்டாம். 'தா&lt;br /&gt;                                                          வு&lt;br /&gt;                                                           அ&lt;br /&gt;                                                            டு&lt;br /&gt;                                                             த்தவரிக்கு.' &lt;br /&gt;"அம்மம்மா ஒரு மாதிரித் தனக்குத்தானே ஆள்மாறாட்டமாய்க் கதைத்துக்கொண்டிருக்கிறா; யாழ்ப்பாணத்திற் கொண்டுபோய் விடுவிடு என்று போகிறவருகிற எல்லோரிடமும் கேட்டபடி; சில நேரங்களில், இதையே யாழ்ப்பாணம் என்று நினைத்தபடி தனக்கே கதைவேறு..."- கண்களின் விளைவு எழுத்தை அழிப்பதாய்.... அம்மம்மா; என்னை அம்மாயும் அப்பாவும், நான் வாசல்வரை ஓடிஓடிக் கதறக்கதறவும் விட்டுவிட்டு 'வாத்திமார்' வேலை பார்க்கப்போக, வளர்த்துவிட்ட அம்மம்மா; என் அம்மாவை விட எனக்குக் கூடப் பரிச்சயமான அம்மம்மா; தைப்பொங்கல், எனக்கு என்றோ நம்பிக்கை செத்துப்போன வருடப்பிறப்பு, தீபாவளிகளில் இன்றும் ஒரு ரூபாய்க்காசு (ஐனாதிபதி தலையில்லாதது) மிக அதிகம் என்றெண்ணிக் கொண்டு, 'கைவியளமாய்' தன் அடுக்குப்பெட்டி திறந்து தான் செத்து, போகும் பாடையின்பின் விசிறி வரச் சேமித்துவைத்திருக்கும் ஒரு இரு சதச் 'சல்லிக்காசு'களுளிருந்து தேடியெடுத்து, "எள்ளுருண்டை வாங்கித் தின்னடா, மேனை' என்று ("இப்பவும் ஆச்சிக்கு இவன் பிடிச்சு மூத்திரம் பெய்யத்தெரியாத பெடியனெண்டு எண்ணம்"-சிவம் நக்கலடிப்பான்) தரும் அம்மம்மா; வடமராச்சித் தாக்குதலோடு அம்மா, "உனக்கு அங்கை தனியயிருந்து சரிவராதயணை, வா" என்று மனிசியின் மனம்நோகநோகக் கொண்டுவந்து ஆனையிறவுக்கு இப்பால் வைத்ததிலிருந்து, போகும் எல்லோரிடமும் "அங்கை என்னைக் கொண்டு போய்விடடா, ராசா" என்றபடி. இடையில், படகால் முல்லைத்தீவால் ஒருமுறை, ஒப்பந்தத்தில் ஒருமுறை கொண்டு போய் அவ பிறந்தமண் காட்டியபோதெல்லாம் கண், முகம் கண்ட தெளிவு...."நீ வரும்வரை (எப்போது திரும்பிப் போவேன்?) இருப்பனோ தெரியாதடா; எனக்குக் கொள்ளிவைச்சப்பிறகு எங்கையாச்சும் போறதெண்டாற் போ, குஞ்சு." -ஆனால், அம்மம்மா என்ன செய்ய, Bigbang தத்துவத்தின்படி, அகிலம் விரிந்து கொண்டல்லவா போய்க்கொண்டிருக்கிறது? வந்த நான் இங்கிருந்து கொண்டு அங்கு வாழ்பவனாக....&lt;br /&gt;&lt;br /&gt;               சிலிர்த்தபோது, "அப்பாதான் திருமுறைக்கழக நூலகத்திற் பொறுப்பாக இருக்கிறார், தனக்கும் பொழுது போகவேண்டாமோ என்று சொல்லியபடி. சமையலுக்குக் கூடமாட உதவிசெய்து தந்துவிட்டு அவர் பின்னேரம் போனால், இரவு வாசிகசாலை பூட்டி வரும்வரை நான்தான் தனியே அம்மம்மாவுடன் கொட்டுகொட்டு என்று முழித்தபடி.." - அடுத்தவரிகள் இப்படி மூளையிற் பதிந்து கொள்கிறன. அம்மா, குருவிகள் நெடுகக் குஞ்சுகளாகவே இருக்கமுடியாது. இதுதான் நியதி; பழைய உவமைதான் என்றாலும், அதைவிடத் தெளிவாக ஏதும் உன், எங்கள் இந்த நிலைமையைத் திருத்தமாகச் சொல்லமுடியாது. வாழக்கற்றுக்கொள். நீயும் அப்பாவும் இனி வாழப்போவது ஓர் இனிமையான பகுதி- சொல்லப்போனால், உன் வாழ்விலேயே இதுதான் மிக இனிமையான பகுதி. உடல் தெம்பாக இருக்கும் காலங்களில், காதல் என்பதிலும் காமம் என்பதன் உணர்வே மேலோங்கி நின்றிருக்கும்; பின், பிள்ளைகள்-நாங்கள், தொல்லைகள், உங்கள் இடைப்புகுந்து, இருவரையும் தள்ளித்                   தள்ளி ...., இனித்தான் ஒருவருக்கொருவர் ஆதரவாக வாழப்போகும் உண்மையான காதல்வாழ்க்கை. என் வாழ்த்துகள். அப்பாகூட எவ்வளவு மாறிப்போ...("ஓஹோ! குடும்ப ஆலோசகர், 'போதனை' பண்ணுகிறீரோ?"-குத்திய மனத்தை, சிந்தனை துரும்பென்றும் கவனித்ததாகத் தெரியவில்லை.)....எனக்கு, அந்த ஏரிக்கரை நடை நேரத்தே வயோதிபத்தம்பதியினரைக் காணுகையிலெல்லாம் என் கையைக் கண்கள் பனிக்க இறுக்கும் அனுலா ஏனோ ஞாபகத்துக்கு வர, மிகுதி அம்மாவின் கடிதத்தை அவசரவசரமாக(ப்) மு(ப)டித்தேன் - அதிகம் ஒன்றுமில்லை ('AIDS' ஊர்வரை வந்துவிட்டது; படித்து முடித்து மேலேயெங்காவது படிக்கும் வழியைப்பார்; சுந்தரத்தாற்றை குமாரை 'ஏஜென்சி'க்காரன் ஏமாற்றித் தென்கொரியாவி...), அனுலாவின் எண்ணம் இவற்றுள் மனம் ஊடுருவாமற் கவனம் திசைதிருப்பி...&lt;br /&gt;&lt;br /&gt;                ...அனுலா; கடிதத்தை எடுக்கின்றபோதே ('அந்தப்பழுப்புநிறக் காகித..') அம்மாவின் கடிதத்தில், மனம் நெகிழ்ந்ததுபோலவேதான் (இரண்டும் ஆழ்நெகிழ்ச்சிதான்; ஆனால், வித்தியாசமான உணர்வினதாய்...). சில கணங்கள், இறந்தகாலத்தில், கண்டி 'British Council', 'சாகரஜலய' படவிவாதம், ஏரிக்கரை மாலை மென் நடைகள்; இன(வி)வாதம் எழாது எழுந்த அன்பு, இன்று கார்ந்தவமணம் பண்ணாக்குறையாய்ப்போய், நான் இங்கு வர, அவள் அங்கே பல்கலைக்கழகம் போனபடி...எம்மைப் பற்றியே சதாயோசித்தபடி எல்லாக்காதலரும் தாம்மட்டுமே உணர்வதாக அறியும் அதே கிளர்ச்சிகள்; உருக்கிரும்புபோல், மென்னுணர்வுகளில், என்னுள் நெகிழ்பவளாய், கடினநேரங்களில், என்னை இறுகித் தாங்குபவளாய்,...அனுலா!&lt;br /&gt;&lt;br /&gt;                ஆனால், பெனடிக் சொல்வது இந்நேரங்களில் ஞாபகம் வந்து குழப்பும்; "சுகுணன், இந்த ஆரம்பகாலங்களில் எல்லாமே இனிமையாக, ஒருவருக்கொருவர் புதிராய் உள்ளவரை, ஒருவருக்குள் ஒருவர் நெகிழ்வதாகவேயிருக்கும்; ஆனால், காலம் எல்லா உணர்வுகளிலும் உறவுகளிலும் அவை உறைந்து மாறாமலிருக்கையிற் சலிப்பையே தரும். உனக்குப் பிடித்த உணவு என்றாற்கூட உனக்கு அதையே நெடுகச் சாப்பிடமுடியாது, பார். அதனால், எந்த உறவிலுமே, அதிகம் எதிர்பாராமல்...எதையும் இப்போதே முடிவு -இவள், இந்தவிதத்தில், இப்படித்தான்- என்று கட்டாமல், அதையும் ஒரு அனுமதி இடைவெளிக்குள் எதிர்பார்க்கப்பழக்கப்படுத்திக்கொள். கல்யாணம் மீதான எதிபார்ப்பு இப்படி இருப்பது நல்லது; மிகத் திருத்தமாகத் திட்டமிட்டுச் செய்தும் எதிர்பார்க்கும் அளவு, காலம், வகையில் அது பயன்படாமற் போவதில் வரும் நட்டத்திலும், எழுமாற்றாகத் (அவன் இச்சொல்லைப் பயன்படுத்துவது, ' பெரிதாக எதிர்பார்க்காமல், ஓரளவு திட்டமிட்டு' என்ற தொனியிலென எனக்குப்படும்) தேர்வதில், அதிகம் சிறப்பு இல்லவிடினும், அதற்காக முதலீட்டிற்குப் &lt;br /&gt;பங்கமில்லை." இடது உள்ளங்கை, உயர்த்திய தலை -நெற்றி, நாடி, கழுத்து- வரை கீழிழுத்து நிறுத்தி, பின்,  எடுத்துப் பெருமூச்செறிகிறேன். ம்ம்.ம்..ம்., இப்போது, இந்தச்சிந்தனை என்னை இன்னும் குழப்பும். வலையுட் துடிக்கும் (மேலும் சிக்குதற்கென்றே) மீனாய்க் கரை கிடந்து வெய்யிலில்.... இப்போது என் பிரச்சனை அதுவல்ல; இருவரும் பிற்காலத்தில்லென் ஊரில் வாழ எந்தவளவிற்கு இச்சமூகம் இடம் கொடுக்கப் போகின்றது? ஒவ்வொரு சமூகப்பிரச்சனையையும் எந்தவளவிற்கு இருவரும் ஒருவர்மீது ஒருவர் பரஸ்பர நம்பிக்கையோடு உள்வாங்கப் இவர்கள் விடப்போகிறார்கள்? மற்ற நண்பர்கள் சொல்வதுபோல் இருவரும் வேற்றுநாடொன்றில் வாழ்ந்துவிட்டாற் பிரச்சனையில்லையா? ஆனால், வேர்களை அங்கே வைத்துவிட்டு, விழுதுகளை மட்டும் எப்படி வேற்றுமண்ணில் நாமூன்ற....-சிந்தனை தடித்து உணர்வுடன் யுத்தவியூகம் வகுத்தலிலிருந்து, தப்புதற்காய்,&lt;br /&gt;                                &lt;br /&gt;                        அநேக நண்பர்கள் வந்த புதிதிற் கடிதங்கள் எழுதிக் குறைந்து, இப்போது அற்றுப்போன நிலையிலும் வரும் பெனடிக்கின் கடிதம் உடைக்கிறேன். வழமையான தத்துவப்போக்கு. இடையே, "'முழியன்' நந்தன் போனகிழமை கதைக்கையிலே, 'என்ன சமதர்மவாதி சீனாவிற் போராட்டம் நடத்தப்போயிற்றாரோ?' என்று உன்னைப் பற்றிக் கேட்டான்" - (நந்தா, சீனா ஒரு சமதர்மநாடா? நீகூட நகைச்சுவையாகப் பேசக்கற்றுக்கொண்டாய் பார்.) நந்தன் மட்டுமல்ல, அநேகர் என்னை இப்படித்தான் பார்க்கக் கற்றுக்கொண்டிருக்கிறார்கள்; அது தவிர்க்க இயலாதுதான். அவர்களில் என் பிம்ப வடிவுப்படி நானும் என்னைத் தக்க பாதுகாப்புவலயத்துள்ளிருத்திப் பல்கலைக்கழக வளையத்துள், மொத்தச் சிவப்புப்புத்தகங்களுள் மேற்கோள் மேய்ந்தெடுத்தெறிந்து, முற்போக்காளியெனக்காட்ட வெறும்தேனீரும் அழுக்கேறிய 'denim'உம் சமதர்மமும் ஈழமும் பேசும் ஒரு 'bourgeois' புத்திஜீ(சீ)விதான் (அப்படியுந்தானோ? தான் ஓங்கச் சந்தர்ப்பம்வரும்வரை, சமதர்மம் பேசி....). என்னைப் பொறுத்தவரை, '83ல், என்னோடொத்தவர் எல்லோரும் நாடென்று போக, கோழைத்தனத்தாற் பின்தங்கியதால், இப்போதாவது அந்த நாடென்றதற்கு ஏதாவது வகையில், ஏதாவது நல்லது செய்வோமென்று எழுந்த எண்ண அரிப்பினா...இன்று 'international call' ஒன்று எடுத்து அனுலாவோடு கதைத்தால், கொஞ்சம் மனம் ஆறுதலாக--&gt;தெளிவடையும்; ஆனாலும், அ·து ஆற்றுநீர் பிரித்து அடி தேடுவது போலத்தான்; மீண்டும், நீர்மூடும். ஆனாலும்...11:00 மணி 'சூழலியல் ஒழுங்கமைய ஆய்தல்' வகுப்புக்கும் போகாம.. என்..ன...வாழ்..படி.....இப்ப....அம்மா...நாடு...அனு....நாளை..குழ..ப்.ப...ம்.....&lt;br /&gt;&lt;br /&gt;        .....கண்விழிக்கும்போது, முன்னே, என்னையறியாமலே குணம்+கொள்கை காலத்துடன் கற்பிழக்கக்கூடாதென்று என் படுக்கையின் நேரெதிரே சுவர்மேலே ஒட்டியிருந்த செஞ்சிலுவைச்சங்கச் சுவரொட்டி, 'He got in the way of somebody's war'- தன் பாரத்தின் மேலாக மூட்டை தூக்கிக்கொண்டு, ஓடும் மக்களிடையே, முகம் தெரியாது முதுகு காட்டிச் செருப்பின்றி ஓடமுடியாது நகரும் உடைகிழிந்த முகவரியற்ற பையனின் சிறு உருவம். சிந்தனையும் மனமும் மாறி மாறிக் குழப்புகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;சிந்தனை :- தம்பி, நீ யார்? நான் உனக்கு என்ன செய்யமுடியும்? ஒரு குருடன் இன்னொரு குருடனுக்கு எப்படியப்பா வழிகாட்டமுடியும்?&lt;br /&gt;&lt;br /&gt;மனம் :- ஐ.நா. சபைச் சமாதானப்படையிற் சேர்ந்தாலும் ஒன்றும் அவனுக்கு நீ பண்ணிவிடமுடியாது. போரில் ஈடுபடுபவர்கள் சுட அவனோடு சேர்ந்து நீயும் ஆயுதத்தைத் தூக்கிக் கொண்டு ஓடமட்டுமே உனக்கும் அனுமதியுண்டு; அவ்வளவே; அதைவிட்டுவிட்டு, அமெரிக்க இராணுவத்திற் சேர்ந்தாலாவது, அவனுக்கு விடிவு கிடைக்கிறதோ இல்லையோ, அவன் பேரைச் சொல்லி, ஆயுதம் தூக்கி அகிம்சைக்கும் அமைதிக்கும் உழைப்பதாக வருங்காலம் உனக்குச் சமாதன நோபல் பரிசுக்குச் சிபார்சு செய்யும்; வேறென்னத்தை உனக்குச் சொல்ல? பிறகேன், இந்தப் படத்தை ஒட்டிவைத்திருக்கின்றாய்?&lt;br /&gt;&lt;br /&gt;சிந்தனை :- பிற்காலத்திலாவது ஏதாவது செய்யவேண்டும் என உணர்வோடு இருக்க. தனிப்பட்டமனிதனாகவாவது, நல்லதைச் செய்..&lt;br /&gt;&lt;br /&gt;மனம் :- ஓஹோ! முழுச் சமூகக்கொள்கை மாற்ற, மக்கள் இயக்கம் அமைக்கப்பேசியவர், இப்போது கொள்கை மாற்றுவதே கொள்கையாகி, இனித் தனி நபராகிச் சேவை செய்யப்போகிறீரோ? பிறகு, என் எழுத்து ஏதாவது சாதிக்கும் என்று மட்டும் இரு கதை, ஒரு நாடகம், மூன்று கவிதை எழுதி, புலம்பெயர் சஞ்சிகையில், தேசியமுதலாளித்துவம், தரகுமுதலாளித்துவம் விவாதத்தில் உம் நாசியையும் நுழைத்து, பின், அதுவும் தேய்ந்து, BBC ஊடாக மூன்றாம்தர அரசியல்வாதிகளிடம் தொலைபேசியில் முட்டாள்த்தனமாகக் கேள்விகள் கேட்டு....&lt;br /&gt;&lt;br /&gt;        ......."நிறுத்து!", கத்திய சிந்தனையின் குரலில், மனம் தரிப்பிட, "நான் வேறு என்னதான் செய்யமுடியும் என்கிறாய்? உங்கள் உந்தலில் எல்லோரும் பொது எதிரிக்கு எதிராக ஆயுதம் தூக்கினார்கள். காலப்போக்கில், என்ன பண்ணவைத்தீர்கள்? அவரவர் தத்தம் சொந்த எதிபார்ப்பை மட்டும் யோசிக்கப்புறப்படவும் தக்க வைத்த சிந்தனைகளைத் தடம் புரட்டவும் யார் காரணம்? நீங்கள், மனங்கள்தானே? நீங்கள் உங்களுக்காக, தனிமனிதர்களுக்காக மாறலாம். நாங்கள், சிந்தனைகள்; விருந்தில்லாவிடினும் மருந்தாவது கொடுப்போம் என இன்றும் பொது நலன்களுக்காகப் போராடுவது, உங்களுக்கு நகைப்பதற்குரிய விடயமாக உள்ளதோ? இதுவும் கொள்கைமாற்றம் ஒன்றுமில்லை; பொதுநலக்கொள்கை நிலைத்திருக்க எடுத்திருக்கும் ஒரு யுத்த தந்திரமே. எழுதுதல் கூட என்ன பத்திரிகைகளுக்கு, சஞ்சிகைகளுக்கு அனுப்பவென்றா நினைத்துக் கொண்டிருக்கிறாய்? எனக்கு அ·தொன்றுதானே வடிகாலாகவுள்ளது. இப்போது, உள்ளிருக்கும் போராட்ட உணர்வை அந்த வடிகால் வற்றிப்போட்டுவிடுமென்று, அதையும் தள்ளிப் போட்டு....இருந்துவிட்டு எப்போதாவது இவன் உணர்வு மிகப்பொங்கையில், சமநிலை தடுமாறக்கூடாது என்றல்லவா எழுதுகிறேன்? சோர்ந்திருக்கும் மக்களிடம் செயற்கையாக போராட்டவுணர்வைத் திணித்துக்கொண்டிருக்கமுடியாது. முதலில், சோர்ந்திருப்பவரைத் தடவிக்..."&lt;br /&gt;&lt;br /&gt;        மெல்லியசிரிப்பு; மனந்தான்; "மன்னித்துக்கொள்; உன், தனிநபர்-சமூகம் உறவுப்பிணைப்பிலான கருத்தமைப்பில் எங்கோ ஏதோ தவறு உள்ளதாகப்படுகின்றது, எனக்கு. மீண்டும் நீ அதை ஆய்ந்து அலசல் நல்லது. தனிநபர் சுற்றியே சமூக..."&lt;br /&gt;&lt;br /&gt;                நல்லதோ கெட்டதோ, இந்த நாட்டுப்பிரச்சனை எங்களின் பாரம்பரியக் கருத்துச்சிறை தகர்த்து வெவ்வேறு தளங்களிற் சிந்தனை தட்டவைகிறது. ஆனாலும், இக்கணத்தே இவையிரண்டினதும் போராட்டத்தை என்னாற் தாங்கவியலாது. இல்லை, இல்லை, இல்லை. தற்போதைக்கு இவையிடமிருந்து தப்பிக்கவேண்டும்; மேசைமீதிருந்த புத்தகங்களில் ஏதோ ஒன்றைத் தூக்குகிறேன். ஜே. கிருஷ்ணமூர்த்தியின், 'Commentaries on living' - எழுந்தமானமாய்ப் பக்கம் திருப்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;        Love: Is it love when there is complete identification with another? And is not th....-&lt;br /&gt;&lt;br /&gt;                        -தூக்கி எறிகிறேன்; இந்த மனிதனைச் சரியாகப் புரிந்துகொள்ளாவிடில், அனுலா மீதான என் தஞ்சமனப்பாங்கும் கெட்டுவிடும்; பிரமராஜன் கவிதைபோல எவருக்குமே புலப்படாடாது, புரியாது...; எனக்குள் என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. (கதிர்காமக்கந்தன்கோவிற் கப்புராளையின் வாய்க்கட்டுள் அந்த ஆள் என்ன சொல்லுமோ தெரியாது என்பதேன் இப்போது ஞாபகம் வருகிறது?)&lt;br /&gt;&lt;br /&gt;        ஆனால், மூன்று விடயங்கள் மட்டும் புரிகின்றன. ஒன்று, நான் இப்போதே இதற்கொரு குறுகியகாலத்திற்கான தீர்வாவது காணவேண்டும், குறைந்தபட்சம், இந்த இறுகிய சூழ்நிலை ஓரளவு இளகும்வரையாவது. இரண்டாவது, இந்த என்னுள்ளேயுள்ள எதிரிகளை ஒறே சீராய் வண்டியிழுக்கும் மாடுகளென ஒன்றுக்கொன்று இயைந்து போகுமாறு நண்பர்களாக்கி என்னைச் சமநிலைப்படுத்த ஒருகால அவகாசம். இறுதியானதும் முக்கியமானதும், எனக்கொரு, காற்சட்டை இரு ஓரப்பைகட்குள்ளும் கைவைத்தபடி சமநிலைச்சிந்தனை/உணர்வு தவழவிட்டு, கல்லொன்றைக் கால்தட்டதட்ட ஒரு தனி நீள் நடை.&lt;br /&gt;&lt;br /&gt;        மெதுவாக நடக்கிறேன், இந்த மிருகக்காட்சிச்சாலைவிலங்கென எனைப் பார்க்கும் இம்மனிதரிடையே.&lt;br /&gt;&lt;br /&gt;        எனக்கு(ள்) என்ன நடக்கின்றது? மீளவும் மூன்றாம் மனிதனாக எனக்கு நானே ஆகி உள்ளெட்டிப்பார்க்கிறேன். என் வயது என்னை என் எதிர்காலம் பற்றிச் சிந்திக்க வைக்கின்றது; என்னை நம்பியுள்ள பிணைப்புகள் என் கொள்கையின், உறுதியின் வடிவத்தைத் தமக்கேற்ற வடிவத்தே தாமறியாமலே உருக்கி வனைக்கவிளைகின்றன. என் கொள்கை, சிந்தனை என்பனவோ தம் உணர்வை, மனதை எப்போதும் புரியாத ஏதோ ஒன்று நெருடிக் கொண்டு இருக்காத வரையில், வகையில், சூழற் கஷ்டமிருப்பினும் மனக்கஷ்டத்தைக் குறைக்கவிரும்புகின்றன. பார் மனதே, சிந்தனை கூட உனக்காகத்தான் இவ்வளவு கஷ்டப்படுகின்றது. ஒத்துப்போகக்கூடாதா அதனுடன்? படிப்பு முடிய மேலே படிக்கமுடியுமானாற் படிப்போம். பிறகு, இயலுமானவரை ஊருக்குத் திரும்பி விடுவதுதான் என்னைப் பொறுத்தமட்டிற் சரி. இல்லாவிட்டால், அம்மம்மா இப்போது கவலைப்பட்டுக்கொண்டு உள்ளத்தால் அழுந்தியிருப்பதுபோல என்னாலும் அழுந்திக் கொண்டு இருக்கமுடியாது. ஆனால், என் முன் தலைமுறை (அப்பாபோல, அறுபதுகளில், சாதியமைப்புகளுக்கு எதிராய்ப் போராடி, தன் உற்றாராலேயே கிட்டத்தட்ட ஒதுக்கப்பட்டும் தான் தனக்குச் சரியெனப் பட்டதைச் செய்தது சரியென்ற மனோதிடத்துடனிருந்துவிட்டு, இன்று எந்த வெளியுலக நடவடிக்கைகளுக்கும் முகம் கொடுக்க விரும்பாது, தன்னுள்ளேமட்டும் சமூக அநீதிகளுக்குச் சாபமிட்டபடி, புதினப்பத்திரிகைகளும் புத்தகங்களும் பூந்தோட்டமும் பூனைக்குட்டிகளுமே கதியாய்) இருப்பதுபோல், போராட்டத்தளர்வு என்னில் ஏற்பட்டுவிட விட்டுவிடக்கூடாது. இன்று, காலத்தின் குழப்பத்தால் என்னிற் தளர்வு உண்மைதான். அத்துடன், என் அடுத்தசந்ததிக்கு இந்தவயதில் இருக்கப்போகும் தாக்கத்தையும் காட்டப்போகும் போராட்டகுணத்தையும் விட நான் குறைந்தளவினையே என் வெளிக்கொணர்வாக்கமுடியும். ஆனால், ஒன்று இங்கு நன்கு விளங்குகிறது. அப்பா என்னைவிடத் தளர்ந்திருக்கலாம்; ஆனால், அவர்தான் என்னை இந்த உலகப்போக்கில் இந்தப்படியிற் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறார். என் அடுத்த தலைமுறை என்னைவிட உயர்ச்சிப்படியில் நிற்கப்போகிறதென்றால், அ·து என்னாற்றான். நாங்கள் எல்லாவற்றையுமே ஒரு பத்து பதினைந்து வருட காலத்தில், பலூன் ஊதுவதாய்ப் பண்ணப்போய்த்தான் இப்படி வெடிப்பதாய், என்சமூகம். கூர்ப்புத்தத்துவம் படிமுறைப் பரிணாமவளர்ச்சிதான் சொல்கிறது. சில வேளை பிற்காலத்துக்குத் தேவையான எம் சில குணம்சயங்களை இன்றைய நிலை கருத்திற் கொண்டு எம்மிடமிருந்து நாமே, இன்று அதீதமெனில் அழிக்கவேண்டும்; அல்லது, ஆழ்மனத்துள் மறைவெப்பமாய்க் குளிர்காலத் தூக்கம் போடவைக்கவேண்டும். ஆனால், அதற்கு, அது நம்மைத் தொடங்கியபாதைகே இட்டுச்செல்கிறோம் என்று அர்த்தமில்லை. இந்தக்காலத்தில், அ·து தேவைக்கதிகமாக இருப்பதால் ஏற்படும் உடனடிப்பாதிப்பில், அது விலத்தி நிற்கவேண்டியதுதானெனில், வரும் தலைமுறைக்கு அதைக் கருத்தாய்ச் சொல்லிவைப்போம், ஊறப்போட்டு முளைக்கவிடும் நெல் நாற்றென. கம்பளி குளிர்காலத்துக்குத் தேவையெனில், கோடை காலத்தில் அது மலிவாய், தொகையாய்க் கிடைப்பின், அதைப் பண்டகசாலையிற் பத்திரமாய்ப் போட்டு வைத்துவிட்டு, உயிர் கொளுத்து வெயில் பாதுகாக்க, துண்டுப் பருத்திக்காவது வழியை தேடுங்கள் (பறப்பதற்காய் உறங்கிக் கிடக்கும் கூட்டுப்புழுவாய், உங்களுட் கருத்து; என் அப்பா, முட்டை; நான், கூட்டுப்புழு; என் மகன்... யார் கண்டது? சுதந்திரமாய்த் தன் மலர்வனமெங்கும் சிறகடிக்கும் சின்ன வண்ணாத்துப்பூச்சியாகலாம்; ஆவான் நிச்சயமாக). இவற்றைமட்டும் விளங்கிவைத்திருக்கிறேன். எங்கு சுத்தமான சுதந்திரக்காற்று உள்ளதோ அதுவே என் (இரவற்) தாய்நாடு என்று என்னால் வாழமுடியாது; காற்றை எங்கு சுதந்திரமாக, சுவாசிக்கச் சுத்தமுடன் வீசவைக்கவேண்டுமோ அதுவே என்தாய்நாடு. நாட்டிற்கு நான் தேவையா என்பதல்ல, இங்கென் பிரச்சனை; எனக்கு என் தேசம் தேவை என்பதுதான் என் அத்தியாவசியம்; என் காலத்தில், இறக்கை தட்டும் என் கனவுப்பறவைகள் தரையிறங்காமற்போவது பற்றி எனக்குக் கவலைப்படுவதி அர்த்தமெதுவுமில்லை; அ·து, இங்கு இன்று இறங்கமுடியவில்லையே என்று கவலைப்பட்டுக் கொண்டிருப்பதிலும் விட, என்றாவது இறங்கவைப்பதற்கு நான் என்னலான வழியைச் சொந்தமாகத் தேடுவதுதான் நல்லது.&lt;br /&gt;&lt;br /&gt;        மனம், அறிவு இரண்டுமே தம்முள் -நௌங்காலத்தின்பின்- மெல்லிய காதற்பார்வை, முரண்பட்ட குற்றம் அழுத்து நாணத்துடன் பார்ப்பதாகத் தெரிகின்றது. அனுலா, கவலைப்படாதே; முக்கோணக்குன்று, நீ என்னைப் புரிந்துள்ளதுபோல், நான் உன்னை அறிந்துள்ளதுபோல், எம்முறவையும் சந்தேகமகன்று தெளிந்து ஏற்றுக்கொள்ளும் என நம்புவோம். அடுத்ததாக, நான்/நாம் யோசிக்கவேண்டியது, நாமே உயர எமக்கெனக் கட்டப்போய், இடித்துத் தள்ளிய ஈழக்கட்டிடங்களிலிருந்து என் பார்வையில் எந்தெந்தக் கற்கள் மீண்டும் பயன்படுநிலையில் உள்ளனவெனத் தேடிக்கண்டு, பொறுக்கிச் சேர்த்தெடுத்து, எந்தெந்த வழிமுறைகளில் முக்கோணக்குன்றில், குன்றாடு தென்றல் தழுவு நீலக்கடல் பார்த்த என்வீட்டின் நெடும் குளிர்கால இரவுகளில், இன்னும் ஏழோ எட்டு வருடங்களில், என் எதிர்கால வண்ணாத்துப்பூச்சிகளுக்கு, பறந்தமுறைகள், திசைகள், பறக்கும் முறைகள், திசைகள்,மீண்டு,மீண்டும் வசிப்பிடம் கட்டும் முறைகள் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கப்போகிறோம் என்பதுந்தான். அம்மாவிற்கு, நான் மேற்படிப்பு முடிய உவ்விடமே திரும்பிவந்திருக்கப்போகிறேன் ("அம்மம்மா, உனக்கு நான்தான் கொள்ளி வைப்பேன்; அப்பா, திருமுறைக்கழகப்பொறுப்பாளர் கதிரை, உங்கள்பின், திட்டமான எண்ணங்களுடன் வந்தமரப்போகும் ஒருவனைச் சுமக்கப்போகின்றது") என்பதையும் அனுலாவிற்கு, இதுவரை என் எண்ணம் பட்ட எல்லாவற்றையும், சிவத்திற்கு, அங்கு, எங்கள் நண்பர்கள் சோர்ந்திருந்தாலும், அவர்கள் குழந்தைகளும் மற்றைய தேசக் குழந்தைகள் போலவே, பசித்தாற் சாப்பிட்டு, கிள்ளினால், அழுது, பள்ளிக்கூடம் விடவந்து (விளையாட்டு வேறாயினும்) விளையாடுகிறார்கள் என்று கேள்விப்படுவதையும், பழையமாணவர் சங்கத்தைச் சைவவித்தியாலயத்திற் புணருருத்தாரணம் பண்ணவேண்டிய அவசியத்தையும் எழுதவேண்டும். எனக்கே இ·து ஓர் அதீத கற்பனைவாதம்போல் இப்போதைக்குப்படினும், உண்மையில் அப்படியில்லை; ஆனால், கொஞ்சம் நம்பிக்கையோடு கஷ்டப்படவேண்டும் அபிப்பிராயங்களையும் (அவை வேண்டுமென்றேயெழு அநாவசியங்கள் எனப்படுகையில்) -சிலவேளை, உயிரையும்- பொருட்படுத்தாது; அவ்வளவே. என் உணர்வுகள், ஓர் ஒருங்கு தொடராகவே இனி அறிவுடன் பிணைந்து செல்லும். அத்தோடு, நியூட்டன்-இரப்ஸனின் மீள்செய்கை வீட்டுவேலையையும் செய்து முடிக்கவேண்டும். அதற்கு முன், மாலைச்சாப்பாட்டிற்கு, உடனடி நூடில்ஸ் தயாரிக்க, முதன்முதலாய், இன்று நானே முயற்சி செய்யவேண்டும். முதன்முறை கருகினாலும் கரைந்தாலும் அடுத்தடுத்த முறைகளிற் தானே சரிவரும் (காலப்போக்கில், நானே ஒரு கைதேர் சமையற்காரனாகலாம்; யாருக்குத் தெரியும்?). எனக்குப் பிடித்த சீனப்பழமொழி -பல தூர உலகச் சுற்று யாத்திரையும் முதற்காலடியிலேயே ஆரம்பிக்கின்றது; சரியாக வைத்த அவ்வடி, பாதி விடயம் சரியாக ஏற்கனவே நிறைவுற்றதைத் தெளிவாகத் தெரியப்படுத்துகின்றது- என்று சொல்லும்.&lt;br /&gt; &lt;br /&gt;-/'93 Mar 14, Sun 10:50&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7096896-110911111968249731?l=punaivu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://punaivu.blogspot.com/feeds/110911111968249731/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7096896&amp;postID=110911111968249731' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7096896/posts/default/110911111968249731'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7096896/posts/default/110911111968249731'/><link rel='alternate' type='text/html' href='http://punaivu.blogspot.com/2005/02/blog-post_22.html' title='தெளிவு'/><author><name>-/பெயரிலி.</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='26' src='http://4.bp.blogspot.com/_OBFBfYawg8g/S8-wCagZnxI/AAAAAAAACCI/5ty9S8m_Ooc/S220/Abg_peyaB.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7096896.post-110898146440958563</id><published>2005-02-21T05:22:00.000-05:00</published><updated>2005-02-21T05:24:24.416-05:00</updated><title type='text'>பண்பாடு</title><content type='html'>இந்த மாநகருக்கு என் வாழ்க்கையின் முதல் வேலையை எடுத்துக்கொண்டு வந்தபோது, நான் மாணவப்பருவத்தின் பழக்கத்திலிருந்தும் கிறக்கத்திலிருந்தும் இன்னும் வெளிவராதவனாகவேதான் இருந்தேன். இது கிட்டத்தட்ட ஐந்து வருடங்களுக்கு முன்பு, நான் கல்யாணம் செய்துகொள்ள மூன்று வருடங்கள் இருந்தபோது. மாநகரத்தின் மத்தியிலே வேலையென்றாலும், புறநகரிலே வாழ்ந்துகொள்வதுமட்டும்தான் அமெரிக்காவிலே பாதுகாப்புக்குரியதும் கட்டுப்படியானதுமாகும் என்று ஏற்கனவே இங்கே வாழக்கற்றுக்கொண்ட சில நண்பர்கள் சொல்லியிருந்தார்கள். நானும் சூரியகுமாரும் இரண்டறை-ஒரு குடிலிலே, மாதச்சம்பளத்தின் காலிலும் சமையல்மணம் சட்டையிலும் என்று வாசம் செய்ய முடிந்தது. வாரநாட்கள் போதாமலும், மீதிநாட்கள் போகாமலும் இருக்கின்ற மிகுதுயர் வேறு அமெரிக்கப்பிரமச்சாரியத்துக்கு உண்டு. அதனால், வார இறுதிகளிலே, மாநகரத்துத் தமிழ்ச்சங்கத்தின் ஆதரவிலே திரையிடப்படும் தமிழ்ப்படங்களைப் பார்க்கவும், சூரியகுமாருடன் கூடி மொட்டைத்தலைக்குஜராத்தி ஆலயத்துக்கும், -அதன்பின்னர்- இரவிலே மாறுவேடத்திலே இயற்கைநடனங்கள் காண நகர்வலமும் போவதுண்டு. Dr. Jekyll and Mr Hyde என்பது போன்ற இரட்டைத்தினச்சீவியம் எமதான வாரஇறுதி. &lt;br /&gt;&lt;br /&gt;ஆரம்ப காலத்தில் மொழிப்பற்று என்பதற்கான எனது வரைவிலக்கணத்தை அத்திவாரம் போட்டு, சுவரெழுப்பி நிறுத்திவைத்திருந்ததெல்லாம், எனது ஆறாம் வகுப்புத்தமிழறிவும் அந்தக்கால்த்து அரசியற்கூட்ட ஆவேச உரைகளுமே. அதனால், ஒரு சமயத்திலே, தமிழ்ப்படம் திரையிடுவதிலும்விட இன்னும் கொஞ்சம் முன்நோக்கிக் கால் வைத்து, அமெரிக்காவுக்கு -மகனிடமோ, மருமகனிடமோ- வந்துபோகும் தமிழிலக்கியத்தின் ஏகபோகப்பிரதிநிதிகளை, பசுபிக் கடலுக்கும் அத்திலாந்திக் கடலுக்கும் இடையிலே கடக்கையிலே வலைபோட்டுப் பிடித்து, இங்கே பேரேரிப்பக்கமும் கூட்டிக்காட்டி அனுப்பினால் என்ன என்று  கொஞ்சம் ஆசை எனக்குள்ளே பிடித்திருந்தது. நாங்கள் இருந்த புறநகரிலேயே, தமிழ்ப்பாட்டுகளைத் தமது காரின் உள்ளே நிதமும் கணமும்பிரியாத, ஒரு நூறு -இருபத்தைந்து வயதுதாண்டிய- மாதக்கூலிச்சீவியர்கள் இருந்ததால், இது மிகவும் இலகுவாக நிகழ்த்திக்காட்டக்கூடிய செயலென்று எண்ணிக்கொண்டேன். சிறுதுளி செவ்வக்கினிக்குஞ்சை, செலுலோசும் செத்த இற்றமரத்துப்பொந்துக்குள்ளே புசுபுசுவென்று பற்றியென்று சொல்லிச் சத்தமின்றிப் பொத்திவைக்கிற மாதிரி ஒரு சுகவேலை, இல்லையா? &lt;br /&gt;&lt;br /&gt;தன் பதிலபிப்பிராயமாக, சூரியகுமார் வதக்/ங்கிக்கொண்டிருந்த சமையலையும் நோக்காது, "உனக்கு வேறு தொழில் இல்லையா?" என்றான். மிகுதிப்பேரிலே பலர், இத்தனைநாட்கள் கழித்து, அண்மைக்காலங்களிலே, தைப்பொங்கல் ஒன்றுகூடல்களின்போது, "அப்போது, என்னிடம் ஒரு வார்த்தை சொல்லியிருக்க்லாமே" என்று கவலை தெரிவிக்கின்றபோதும்கூட, “அதற்கான இப்போதையச் சாத்தியம் எப்படி?” என்று கேட்கின்ற ஆளில்லை நான். ஒன்றென்ன, ஓராயிரம் வார்த்தைகளே தெரிவித்திருக்கலாம்தான். என்ன செய்வது? அப்போது எனக்குத் தெரியாமற் போய்விட்டது; பதிலிறுப்பியின் பதிப்பியிலே விட்ட வரித்தொலைபேசிச் செய்திகளுக்கு என்னவென்று கேட்க நேரமில்லாமல் நாளாந்த வேலை என்று சொல்லிக்கொள்கின்றவர்களுக்கு இதற்கும் நேரம் இருந்திருக்காது என்று தவறாக எண்ணிக்கொண்டேன். &lt;br /&gt;&lt;br /&gt;காலம் செல்லச்செல்ல, இந்த மொழிப்பற்றிலே மண்புற்று வளர்ந்தது மட்டுமில்லை, உள்ளங்கைச்சுண்டலுக்கும் கெண்டைக்கால் மினுங்கும் பெண்டிர் முகத்துக்குமாய், குஜராத்தி பஜனுக்கு, தாளம் தட்டுவது எல்லாம் குறைந்துகொண்டுபோய், barbecue, golf என்கிற மாதிரி ஒரு பிறதேசப்பண்பாட்டுவலயம் எனக்குட் படையெடுத்து விளைந்ததோடு நிற்கவில்லை; American Football, Basketball என்பவற்றினை, பெண்-பந்து-பூனை விளம்பரங்களுக்கிடையேயும் திகட்டத் திகட்டப் பார்த்தபடி, இருக்கையின் நுனியிலே குந்தியிருந்ததுக்கும் குற்றம் சொல்லி, இறுதிப்புள்ளிக்காக எழும்பி குதிக்கும் தன்மைகூட எனக்குட் பரந்து சடைக்கத்தொடங்கிவிட்டது. இதனால், சூரியகுமாரும் நானும் பொருளாதாரக்காரணங்களை முன்னிட்டுமட்டும் ஒரு தீவு-இரு நாடு போல ஆளையாள் காலைப்பொழுதும் மாலைக்கழிவிலும் சந்திக்கவேண்டி, ஒற்றைக்கதவுக்குப்பின்னால், ஒற்றுமையாக வாழ்ந்துகொண்டிருந்தோம். &lt;br /&gt;&lt;br /&gt;ஆனாலும், வார இறுதித்தமிழ்ப்படங்கள் அனைவரும் அறிந்ததுபோலவே பன்முக நோக்கத்தவை; தவிர்க்கமுடியவில்லை. அழுது நடிப்போர், பாடல் படிப்போர் - இவர்களைத் தவிர மீதியெல்லாவற்றையும் எல்லாம் தசவதானியாக உள்வாங்கமுடிந்தது. ‘இந்தக்கிழமை என் வாகனத்திலே போனால், வரும் வாரம் உன் வாகனம்’ என்ற விதத்திலே இருவரும் போனதிலே மாதத்துக்கு எவ்வளவு செலவைக்குறைக்க முடிந்தது (முடிந்ததா?) என்பது இன்றைக்கு ஞாபகத்திலே இல்லை. ஆனால், ஆளுக்காள் பேசாமலே அருகருகே அமர்ந்து அன்றைய இரவு காணப்போகும் நடனங்களை எண்ணிக்கொண்டு போனது மட்டும் இன்னமும் எனக்கு நினைவிலே இருக்கின்றது [கூடவே, எங்கள் காரைக் கண்டவுடன் சிவப்புவிளக்குகளைச் சுடரவைக்கும் போக்குவரத்து சமிக்ஞைக்கம்பங்களின் அம்மாக்களின் நடத்தைகளினைப் பற்றி அபிப்பிராயம் காரின் அமர்முடுக்கிக்குக் காலாற் சொன்னதும்].&lt;br /&gt;&lt;br /&gt; சூரியகுமார், கதாநாயகி அழும்போது கலங்கி, படம் தொடங்க முதலும் பிறகும் வரும் இளங்குமரிகளைக் கண்டபோது சிரிக்கவும் கூடியவன். நான் முழுக்க அப்படியான ஆளில்லை. கதாநாயகி அழுகின்றபோது, உலகை ஓர் அரை வட்டம் ஆறேழு ஆண்டுகளுக்கு முன்னால் அடித்து வந்து, F1 இலேயிருந்து H-1B க்கும், H-1B இலே இருந்து பச்சைக்கும், பச்சையிலே இருந்து முழுப்பாதுக்காப்புக்கும் கவனம் வைக்கிற என்னைப்போன்ற ஏனைய இலட்சியவாதிகள் கலங்குகிறதைப் பார்த்துச் சிரிப்பது, ஒரு திருப்தியை எனக்குட் தருவதுண்டு. படம் முடிந்தபின்னர், வந்த வதனங்களினைத் தரிசிக்கும் கணங்களைப் பொறுக்கிக்கொண்டிருக்கிறது  மட்டும் மற்றோரோடு எனக்கும் பொது. திரும்பவரும்போது, சூரியகுமாருக்கும் எனக்கும் பேச எத்தனையோ விடயங்கள் பொதுவாக இருக்கின்றது தெரியவரும்; எவ்வளவு புரிந்துணர்வு உள்ள நண்பர்கள் என்பதுவும்தான்; பிறகு, அன்றைக்குச் சமையல் யார் என்பதிலே அ·து அப்படியே அழுங்கி முழுதாய் இனி முளைவிடாது என்பதுபோல் மறைந்தும்போகும்.&lt;br /&gt;&lt;br /&gt; இப்படியாய் இயல்பாகிப்போன வாழ்க்கைச்சூழலிலே, ஏதோவொரு சேவல்-கோழி கேவற்படம் முடிந்தபின்னர், காரிலேறுமுன்னர் உந்தலிலே சிகரெட் புகைத்துக்கொண்டிருந்த என்னிடம், சூரியகுமார் சாந்தகலாவைக் கூட்டிக்கொண்டு வந்து அறிமுகம் செய்தபோது, அவசரவசரமாக புகையை இடக்காற்சப்பாதின் கீழே புதைத்தேன். “வணக்கம்” சொன்னேன். கையைக் கூப்பி பெண்களுக்கு வணக்கம் சொல்ல சொந்தநாட்டைவிட்டு நகர்ந்தபின்னரே கற்றுக்கொண்டேன்.  இதைப்போலவேதான், எனது பண்பாட்டின் பக்கவிளைவுகள் பலதினையும் நாட்டுக்கு வெளியேதான் நான் மிதந்துதிரியக் கண்டு, கௌவிப்பிடித்து கைக்கொண்டேன் என்பதையும் வெட்கத்தினை விட்டு ஒத்துக்கொள்ளவேண்டும். அமெரிக்கநண்பர்கள் எனது பண்பாட்டின் தொன்மையினைப் பற்றிக் கேட்டகேள்விகளுக்கு, ஒரு வரிக்கேள்விக்கு ஒன்பது நிமிடங்கள் என்ற ரீதியிலே விபரமாகப் பதில் சொல்லிவிட்டு “விபரம் தெரிந்தவனாக” வெளியே வந்து, வேறு யாரிடமிருந்தாவது அவற்றிற்கான விடையினைக் கற்றுக்கொண்ட காலமும் அநேகம்.&lt;br /&gt;&lt;br /&gt;“கலாவுக்குத் தமிழ்பேசவராது” –சூரியகுமார்.&lt;br /&gt;&lt;br /&gt;எனது ஒரு தென்னாசியனின் பெண்ணின் மீதான மதிப்பினை, பண்பாட்டின் ஒற்றைக்குறியீட்டூடாக, கையைப் பொத்திக்குவித்துக் காட்டமுடியாது போனது கவலைதான்.  &lt;br /&gt;&lt;br /&gt; “ஹலோ.” &lt;br /&gt;&lt;br /&gt;கையைக் கொடுத்தேன். இறுகப் பற்றி உறுதியாக, அதே நேரத்த்திலே தன் மென்மைகீழ் வழுவாது குலுக்கினாள். நான்தான் எனது ஆளுமையைச் சரியாக வெளிப்படுத்தாது, தொய்வுடன் உள்ளங்கையிலே இரத்தோட்டத்தைக் குறைத்துவிட்டேன் என்று தோன்றியது. &lt;br /&gt;&lt;br /&gt;ஆங்கிலத்திலே “பேச வராது; ஆனால், பிறர் பேசுவது புரியும்” என்றாள்; பிறர் பேசுவது சரி; நான்? மொத்தமாக, எனக்கே நான், என்ன சொல்கின்றேன் என்று புரிய இரண்டு நாளெடுக்கும்; ஏன் சொன்னேன் என்று புரிய இன்னும் இரண்டு நாளெடுக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;“அதிசயம்; பேசுவதா பெரியவிடயம்! அமெரிக்காவிலே பிறந்து வளர்ந்தும், சொந்தமொழியைப் புரிந்து கொள்கின்றீர்கள் என்பதே மிகவும் ஆச்சரியத்தினையும் ஆனந்தத்தையும் தருகின்றது. இத்தனைவருட இந்நாட்டு வாழ்க்கையிலே இப்படியான ஒரு பெண்ணைக்காண்பது இதுதான் முதற்றடவை.”  அழகான பெண்ணைக்கண்டதால், உள்ளபடி உண்மை வந்ததா, இல்லை உளறிக் கொட்டினேனா என்று எனக்குப் பிடிபடவில்லை. நான் முன்னமே சொல்லவில்லையா, நான் என்ன பேசுகின்றேன் என்று எனக்கே புரியவில்லை என்று?&lt;br /&gt;&lt;br /&gt;“நன்றி; என் அப்பா பேசுவது போலவே பேசுகின்றீர்கள்.” (வெட்கித்தும் பெருமித்தும்) சிரித்தாள். அவள் அப்பாவின் ஆங்கிலம் இத்தனை அகோரமாக இருக்கிறதை எண்ணிக் கவலைப்படமட்டுமே முடிந்தது. என்ன மனிதர் இவர்! இத்தனை நாள் இருந்தவர் கொஞ்சம் திருத்தம் முயற்சித்திருக்கலாம். &lt;br /&gt;&lt;br /&gt;வீட்டிலே ஒரு பண்பாடும் வெளியிலே ஒரு பண்பாடும் என்று கலந்து பொரு(ந்)த, மிதமாய் காவியங்களிற் கதைபுனையப்பட்ட அன்னப்பட்சி தண்ணீரைத் தவிர்த்து தனக்கு வேண்டியதைமட்டும் தனித்தெடுத்து உண்டதுபோல வளர்ந்துகொண்ட பெண்களின் நடை உடைபாவனைகள் எனக்குப் பிடித்த பிரமச்சாரிய காலம்  அது.&lt;br /&gt;&lt;br /&gt;அண்மையிலே உள்ள பல்கலைக்கழகத்துக்குப் படிக்க வந்திருப்பதாகத் தெரிந்தது. பெற்றோர் வசிப்பது கிழக்கமெரிக்காவின் கீழ்க்கரை. பனியைப் பற்றிக் குறை சொன்னாளா, உயர்த்திச்சொன்னாளா என்பது எனக்குப் புரியவில்லை; எனக்குப் பணியைப் போலவே, அவளுக்குப் பனி புதிதானதால் பிடித்தும் இருக்கிறது, பழகாததால் பிடியாமலும் இருக்கிறது என்று தோன்றியது. என்ன செய்வது? என்னை வைத்தே எவரையும் எடைபோட்டுப் பழகிவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;சூரியகுமார் ஆங்கிலத்திலே, “கலா நல்ல கர்நாடக சங்கீதக்காரி; பிரபல்ய சங்கீதவிற்பனர்கள் அமெரிக்கா வரும்போது, சிலவேளை பின்னால் இருந்து தம்பூரா மீட்டும் சந்தர்ப்பங்களைக்கூடப் பெற்றவளாக்கும். பாடினால், பறக்கின்ற குயில் தோற்கும்” என்றான். எருமைத்தலையன்! பிறபறவைகளின் கூடுகளுக்குள்ளே திருட்டுத்தனமாக முட்டைபோட்டும் சோம்பேறிக் குயிலோடு இப்படிப்பட்ட இளம்பெண்ணையா எவரும் ஒப்பிடுவார்கள்? கல்யாணாமாகாமல், பருவக்கோளாற்றிலே பிள்ளையைப் பெற்றுவிட்டு, அனாதை ஆச்சிரமங்களுக்கு முன்னால், ஏணை தொட்டிலே விட்டுச்செல்லும் எவளையாவது அல்லவா ஒப்புவமை சொல்லவேண்டும்! இந்த மடையனின் மூளை!&lt;br /&gt;&lt;br /&gt;நான் பாடக்கேட்டுவிடுவேனோ என்று பயந்தோ என்னவோ, “அப்படியெல்லாமில்லை; ஆனால், முழுமையாகச் சங்கீதம் கற்றிருக்கின்றேன் என்பது மட்டுமுண்மை; அப்பா, எங்களூர்த்தமிழ்ச்சங்க்த்தலைவர். அதனால், சிலவேளை சங்கீதவிற்பனர்களின் தம்பூராக்காரர்களுக்கு இயலாதவிடத்து, நான் தம்பூரா மீட்டுவதுண்டு.” உண்மையான பெண்; சுத்தி வளைத்து சுத்தப்பொய்யை சேற்றுச்சுவற்றுக்கு வெள்ளை வர்ணம் தீட்டுவதுபோல சிதப்பாமல், “இவ்வளவுதான் நான்; இதுக்குமேலுமில்லை ஏதும்; கீழுமில்லை ஏதும்” என்று சொல்கின்றது இன்னொருவரைக் –குறிப்பாக, சங்கீதம் முறைப்படி கற்றுக்கொள்ளாத, குரல்வளம், கலைநயம் கட்டித்தோயக் கற்றுக்கொண்டோரெல்லாம் பாக்யவான்கள் என்றெண்ணிக்கொள்ளும் பிரமச்சாரிய இளைஞர்களை- கவரக்கூடிய பண்பு.&lt;br /&gt;&lt;br /&gt;அவளது பெற்றோரின்மீதான என் மதிப்பு அதிகரித்தது. ஒருவருடவேலைக்குள்ளே கிடைக்கும் ஓய்வுநேரத்திலேயே, ஒவ்வொரு விளையாட்டு நிகழ்வுக்கும் ‘Home run’ பற்றி புள்ளிவிபரம் சேர்க்கும் மனிதனாக மாறிப்போன நானெங்கே, முப்பதுவருடங்களாக, அதற்குமுன்னே இருபத்தைந்து வருடங்கள் பழகியிருந்த உலகத்தைப் பேணிவைத்திருக்கும் இந்த மனிதர்களெங்கே? தன் மொழியே பேசவராதபோதும், தம்மிசையைப் பொத்திப் போற்றிக் கற்றுக்கொடுத்த அவர்களை, அறியாதபோதும் உள்ளாரப்பாராட்டாமல் இருக்கமுடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;சூரியகுமார் அவளை விடுவதாயில்லை; “நீங்கள் நல்ல கர்நாடக சங்கீதத் “துண்டுகள்” இரண்டு பாடித்தான் ஆகவேண்டும், கலா; இல்லாவிட்டால், நாங்கள் உங்களை இங்கிருந்து போகவிடமாட்டோம்” - அங்கிருந்து அவள் கொஞ்சம் தரித்துப் போவதிலே எனக்கு சம்மதந்தான்; ஆனால், என்ன இருந்தாலும், நான் ஐந்து நிமிடங்களுக்கு முன்னர்தான் அறியவந்த ஒரு பெண்ணைப் போகவிடமாட்டேன் என்று சொல்லக்கூடிய துணிவும் தொந்தரவுத்தன்மையும் உள்ள ஆளில்லை; என் சொந்த வாக்குக்கும் சேர்த்து அவன் தனது புள்ளடியை அவள் காதிலே போட்டு முகத்திலே வழிந்த மையைத் துடைத்துக் கொண்டான்.  &lt;br /&gt;&lt;br /&gt;கடவுளே இதுவென்ன கஷ்டம் என்றோ, அல்லது இதற்குத்தான் காத்திருந்தேன் என்றோ, ஒரு சிறு செருமலுடன் (இந்தக்குறித்த கணத்திலே, இவளின் இயற்கையத்த ஓரிணை ஏகாரச்செருமலுக்கு முன்னால், என்ன இன்பத்தைச் சங்கீதம் விளைவிக்கும் என்று நான் எண்ணியதேதோ உண்மைதான்), பாடத்தொடங்கினாள். &lt;br /&gt;&lt;br /&gt;அவளின் எத்துணை குரலினிமையானது என்பது அதற்குப்பின்னும் இன்னும் எத்தனையோ மேலதிகாரிகளிடம் வாங்கிக்கட்டிக்கொண்ட ஏச்சுகளுக்கும் கீழே இன்னமும்  என செவிப்பறையிலே ஒட்டியிருந்து, அவ்வப்போது கீச்சுக்கீச்சுமூட்டுவதுண்டாதலால், சொல்லிலே உணர்த்தமுடியாதது. ஆனால், அவளின் பாடலின் அர்த்தம் பாடல் மொழி காரணமாகப் புரியவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பாடிமுடிந்தபின்னர், “மிகவும் அற்புதமான குரல்வளம்” என்றேன். பிறகு ஒர் ஐந்து நிமிடங்கள் சூரியகுமாரின் புகழாரத்துக்கு ஒதுக்கியபின்னர், “இப்போது பாடியது, சூரியகுமாருக்காக; இனி, எனக்காக இன்னொரு பாடல் பாடமுடியுமா” என்று குரலிலே வேண்டுதலும் விழைவும் தொனிக்கக் கேட்டேன். எனக்கு சிலர் மறுக்கமுடியாமல், கனிவாகக் கேள்வியைப் போடும் சித்துவித்தைக்ள் சில சமயம் கைவருவதுண்டு,&lt;br /&gt;&lt;br /&gt;இந்தத்தடவை; அறிந்தமொழியினூடேயும் அவளின் குரல்முடிச்சு அதிர்வுகளின் மீட்டலைக் கேட்க, செவிச்சுவை திகட்டும் உச்சத்தை முட்டித்தட்டித்த்ள்ளும் என்றெண்ணிக்கொண்டது எனது அடிப்படை அளவுகோல். திரும்பவும் எனக்குக் கருத்துப்புரியாமே பாடவேண்டும் என்பதுபோல அவளின் குரல்நடவடிக்கை. கொஞ்சம் உள்ளம் சுருங்கிப்போனேன்; ஆனால், காட்டிக்கொள்ளூம் உரிமை எனக்கு இல்லை; தானம் கொடுக்கும் மாட்டிலே பல்லைப் பிடித்து, அவதானம் இல்லாத மூடன்தான் எண்ணிப்பார்ப்பான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், பாடல் முடிந்ததும், பாராட்டுக்குப் பின்னால், கேட்காமல் இருக்கமுடியவில்லை.  ஆனால், அவளின் உள்ளம் சிறிதும் சுரண்டுப்பட்டுக்கொள்ளாமற் கேட்கவேண்டும். “மகாகவி பாரதி அழகுவாய்ந்தது என்று பாராட்டியது இந்த மொழி,” எனது சுளுவான பேச்சுக்கு என்னையே நான் பாராட்டிக்கொண்டேன். “பாரதி?? அது ஒரு பெண்ணின் பெயரல்லவா?” இல்லை; எனது குழியைத்தான் நான் வெட்டியிருக்கிறேன்; நேரடியாகவே கேள்வியைக் கேட்டிருக்கலாம். இதற்குள் சூரியகுமார், பாரதியைப் பற்றி விபரமாக, எட்டையபுரம் தொடக்கம், யானை மிதித்தது வரை ஒரு சின்ன உரை நிகழ்த்தினான். ஆர்வமாகக் கேட்டாள்; அவனின் உற்சாகவேற்றலுடன், நான் எனது கேள்வியை நேரடியாகவே போட்டே;. “இந்தப்பாடலின் கருத்து உங்களுக்குப் புரிகின்றதா?” &lt;br /&gt;&lt;br /&gt;அவளின் நாவுக்குப் பதிலாக முகமும் முழுத்தலையுமே பதிலைச் சொன்னது. பிறகு சொன்னாள், “இந்த இருபாடல்களும் சங்க விழாக்களிலே,  பாடகர்களிடம் மிகவும் வேண்டிக் கேட்கப்படுகின்றவை.” அதனால், அவற்றினைக் கருத்தறியாதபோதும் பாடிய பெருமிதம் அவளிடம் தெரிந்தது. “தமிழ்ப்பாடல் ஒன்று பாடிக்காட்டவேண்டும்; உங்கள் தமிஉச்சரிப்பு எப்படி இருக்கின்றதென்று பார்ப்பதற்கு” என்று நகைச்சுவையாகப் பேசுகின்றேனாம் என்ற தோரணையிலே எனது அடுத்த வேண்டுகோள். &lt;br /&gt;&lt;br /&gt;“பாட எனக்கும் விருப்பம்தான்; ஆனால், அதற்கான முறையான பயிற்சியில்லையே? கல்கியும் அண்ணாமலைச் செட்டியாரும் செத்தே எத்தனை வருடங்கள் ஆகின்றன? என்ன பெற்றோர்... இந்தளவு அறியாதமொழியிலே பாடச்சொல்லிக்கொடுக்கும் ஆர்வத்தோடு இருக்கின்றவர்கள், இப்படியா, ஒரு தமிழ்ப்பாட்டு, குறைந்தபட்சம் ஒரு கும்மியோ கீதமோ சொல்லிக்கொடுக்கக் குருவிடம் கேட்காமல் இருப்பார்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;அவளோடு வந்த சக மாணவர்கள் திரும்பிப்போவதற்காகத் தேடிக்கொண்டுவர, அவள் அதற்கிரு வாரங்கள் பின்னால் வரும் திரைப்படத்தின்போது சந்திப்பதாகச் சொல்லிப் போனாள்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் காரோட்ட, சூரியகுமார் பக்கத்திலே இருந்து சள சள வென்று அவளைப்பற்றி ஆதிதொட்டு அருகிலே இருந்தன்போல, அந்நியோனியமாகப் பேசிக்கொண்டு வந்தான். எனது எரிச்சலினைக் காட்டிக்கொள்ளவில்லை; காரோட்டிகள் உளநிலையளவிலே நிதானமாக இருத்தல் அவசியம் என்று திரும்பத் திரும்ப எனக்கு அடிக்கடி சொல்லிக்கொண்டேன். &lt;br /&gt;&lt;br /&gt;“அவளது பெற்றோர்கள் எவ்வளவு அக்கறையாக எங்களது பண்பாட்டினை மறக்காமல் அவளுக்குச் சங்கீதம் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள்; பார்த்தாயா? “  - என்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;அடக்கமுடியாமல், “மொழிக்கும் பண்பாட்டுக்கும் முழங்காலுக்கும் மொட்டந்தலைக்கும் உள்ள நெருக்கம்போலும்; பண்பாட்டை மட்டும் எவரும் எங்கே போனாலும் தம் பிள்ளைகளுக்குப் படிப்பித்துப் பட்டம் விடவைக்க மறக்கிறதில்லை” - எரிந்துவிழுந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னமும் அவளின் குரலிலே மிதந்துகொண்டிருந்தான் போலும். நான் சொன்னது, காதிலே ஏறாமல், “என்ன?” என்று அசிரத்தையாகக் கேட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;அவனுக்குப் பதில் சொல்லாமல், எனக்கு நானே. “பார்த்துக்கொள்; இதுதான் பொன்னகரம்!” என்று பற்றிக்கொண்டு வரச் சொல்லிவிட்டு, சிவப்பு விளக்குக்கும் நிறுத்தாமல், ஆள்நடமாட்டமில்லாத வீதியைக் கடந்ததையும்கூட அவன் கண்டுகொள்ளவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;’00 ஒக்டோபர், 06&lt;/em&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7096896-110898146440958563?l=punaivu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://punaivu.blogspot.com/feeds/110898146440958563/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7096896&amp;postID=110898146440958563' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7096896/posts/default/110898146440958563'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7096896/posts/default/110898146440958563'/><link rel='alternate' type='text/html' href='http://punaivu.blogspot.com/2005/02/blog-post_21.html' title='பண்பாடு'/><author><name>-/பெயரிலி.</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='26' src='http://4.bp.blogspot.com/_OBFBfYawg8g/S8-wCagZnxI/AAAAAAAACCI/5ty9S8m_Ooc/S220/Abg_peyaB.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7096896.post-110892771673651639</id><published>2005-02-20T14:28:00.000-05:00</published><updated>2005-02-20T14:28:36.746-05:00</updated><title type='text'>இன்று</title><content type='html'>இருட்டுக்குள்ளை விறுச்சுவிறுச்செண்டு  'கிளாக்கர்' ராசமணியரும் மயில்வாகனம் மாஸ்ரரும் எங்கடை வீட்டுக்கதவடிக்கு வந்து தட்டப்போகைக்கையில, நானும் அப்பாவும் அடிவளவுக்குள்ளை தென்னங்குத்தி ஒண்டில காத்துப்படட்டுமெண்டு குந்திக்கொண்டிருந்தம். கிளாக்கருக்கு விறிச்சுநடையர் எண்டுந்தான் அயலிலை கூப்பிடுகிறவை. சாரைப்பாம்பு ஊருற மாதிரி, கொஞ்சம் நெளிப்போட வலுவேகமா நடக்கிற ஆள் கிளாக்கர். இருட்டில இருந்ததால, அவை ரெண்டு பேரும் எங்களைக் காணேல்லைப் போலப் பட்டுது. ஓடிப்போய் அவையளைக் கூப்பிடவோ எண்டு அப்பாவிட்டைக் கேட்டன். "எங்கடை வீட்டுக்குத்தானே போகினம்? அங்கை போய்க் கதைக்கட்டுமன்; பிறகென்னத்துக்கு இந்த இருட்டுக்குள்ளை கள்ளன் ஒளியிறமாதிரி அவையின்ரை காதுக்குள்ளை ரகசியம் பேசிக் குழப்ப?" எண்டு அடிச்சுச் சொல்லிப்போட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;இவையள் வரக்குமுதல், எவ்வளவு நேரம் பேசாம இருட்டில கண்ணைக் குத்திக்கொண்டு இருந்திருப்பம் எண்டு தெரியேல்ல; திடீரெண்டு பின்னங்காலிலை எலி நன்னினதுபோல இருந்துது. துள்ளிக்கொண்டு கூவெண்டு கத்திக்கொண்டு இருட்டையும் பாராம ஒழுங்கைப்புளியடி மரத்தடிக்கு ஓடினன். அப்பா ஓடேல்ல. தென்னங்குத்தியில இருந்துகொண்டே, "எலிக்குப் பயந்ததொண்டைப் பெத்து வச்சிருக்கிறன்" எண்டு பிலமாச் சிரிச்சார். அப்பா வலுத்த துணிச்சக்காரன்தான். அதாலைதான் அம்மாவுக்குப் பயம். "இந்தாள் எல்லாத்துக்கும் முன்னுக்கு நிண்டு எப்ப ஆராரிட்டை எப்பிடியெல்லாம் வாங்கிக்கட்டிக்கொள்ளப்போகுதோ?" எண்டு பயந்து பயந்து என்னையும் தங்கைச்சியையும் பொத்திப்பொத்தி வளர்க்கிறவ. "உவள் பொம்பிளை வளப்பையெல்லே என்ரை பொடியிலையும் சோத்தோட சேத்துத்தீத்திப்போட்டாள்" எண்டு அப்பா கொஞ்சம் மப்பேறின நேரத்திலை கவலைப்படுறவர்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்பவும் வீட்டுக்குள்ளை புட்டவிக்கிற அம்மாவுக்குப் பக்கத்திலை சும்மா சுத்திக்கொண்டிருந்த என்னை, "வேலைப்பிராக்காயிருக்கிற அவவுக்குக் வீணாக் கரைச்சல் குடுக்காதை" எண்டு உறுக்கிச் சொல்லிப் போட்டுத்தான் வெளியிலை கூட்டிக்கொண்டு வந்தவர்.  அம்மாவின்ரை முகத்தில ஆத்திரமும் ஏலாமையும் அப்பிடியே கொப்பிளிச்சுக்கொண்டிருந்தது. "உன்ரை அப்பராலதான் இப்பிடிக்கரைச்சல் எண்டால், பிறகு உன்ரை அண்ணன்காரன், இப்ப நீயருத்தன் வேறை புதுசாய் அந்தாளை உரிச்சுவச்சபடி நிண்டாடிக்கொண்டிருக்கிறாய்" எண்டு இண்டைக்குப் பின்னேரமும் எனக்கு நல்ல ஏச்சு.  அண்ணை, தொண்ணூத்தியாறில, ஏஎல் எடுத்தப்பிறகு இங்கை இருக்கமாட்டான் எண்டு தலைகுத்தி நிண்டதால, அப்பா, அம்மாவின்ரை சீதனக்காணியில கொஞ்சத்தை வித்து, ஏஜன்ஸிக்குக் காசுகட்டி, முதலிலை கொஞ்சம் அவையள் ஏமாத்தி, இழுபட்டு பிறகு, ஒரு மாதிரி கனடா போயிட்டான். இப்ப, எப்பாச்சும் கோல் வரும்; பிறகு கொஞ்சம் காசும் அனுப்புறவன். இப்ப அப்பாவின்ரை வருமானம் நிண்டுபோன நேரத்தில, மூத்தபிள்ளைதான் குடும்பத்தைக் காப்பாத்துது எண்டு அம்மாவுக்கு உள்ளுக்குக் கொஞ்சம் பெருமையும் இல்லாமலில்லை எண்டு நினைக்கிறன். &lt;br /&gt;&lt;br /&gt;அம்மா இண்டைக்கு என்னிலையும் அப்பாவிலையும் நல்ல ஆத்திரமாய்த்தான் இருக்கிறா எண்டு நல்லாத் தெரிஞ்சுது. நான் கேட்ட கேள்வியள் ஒண்டுக்கும் பதிலில்லை. நான் அங்கை இருக்கிறன் எண்டமாதிரியே காட்டிக்கொள்ளேல்லை. நான் கடைக்குப் போன நேரத்திலை நான் திரும்பி வந்தால் அபிராமியை வேற என்னோட கதைக்கவேண்டாம் எண்டு சொல்லிப்போட்டா போல இருக்கு. அவள் வேற நான் கூப்பிடக்கூப்பிட குசினிக்கதவுக்கு முன்னாலை ஒரு எத்து எத்தி என்னைத் தள்ளிப்போட்டு, சாப்பாட்டுமேசையிலை போயிருந்துகொண்டு, ஏதோ கொப்பியிலை  எழுதிக்கொண்டிருந்தாள். இவளுக்கு வர வரத் திமிர் கூடிப்போச்சு எண்டு எனக்கு நல்லா விளங்கிப்போச்சு. முந்தியெண்டால், "அண்ணை, அண்ணை" எண்டு பின்னால திரியிறதால, சிநேகிதப்பெடியங்கள், "பட்டமும் வாலும் வருகுது" எண்டு நக்கல் அடிக்கிறவன்கள். "பின்னாலை வராதயடி" எண்டாலும் கேக்கமாட்டாள்; அம்மா வேறை, "தங்கச்சியில அன்பில்லாத சென்மம்" எண்டு ஏசிப்போட்டு, அவளையும் சேத்து நான் எங்கை போனாலும் அனுப்பிப்போடுவா. இப்ப என்னெண்டால், அவளுக்கு தானெண்ட எண்ணம். உவளுக்குப் பத்து வயசில இப்பிடி எண்ணமெண்டால், பதின்மூண்டுவயசுக்காரான் எனக்கு எப்படியிருக்கும்? &lt;br /&gt;&lt;br /&gt;இத்தனைக்கும் இண்டைக்கு அம்மா எனக்கு ஏசவேண்டி வந்ததெல்லாம் இவளாலதான். இவளுக்கு நாளைக்குப் பிறந்தநாளெண்டது எனக்கு பின்னேரம்தான் ஞாபகத்துக்கு வந்துது. அவளுக்கு, முதுகிலை தொங்கப்போடுற 'பாக்'குகளிலை நல்ல விருப்பம். முன்னமே அம்மா, அப்பா வாங்கிக்குடுத்ததோட, அண்ணை வேறை ஊருக்கு வந்து போற ஆக்களிட்டைக் கனடாவிலையிருந்து " வேற ஆற்றை கையிலையும் குடுக்கவேண்டாம்; அவள் அபிராமியின்ரை கையில மட்டும்தான் குடுத்துவிடுங்கோ" எண்டு சொல்லிக் குடுத்துவிட்டதெல்லாம் சேத்து, ஒரு ஏழு பாக் வைச்சிருக்கிறாள். நான் வேறவேறநாட்டுக்காசு சேக்கிற மாதிரி, அவளுக்குப் பாக் சேக்கிற வேலை. சிலதுகளை ஒரு முறைக்கு மேலை பள்ளிக்கூடத்துக்குப் போட்டுக்கொண்டு போயிருப்பாளோ எண்டுறதே கேள்விதான். அதால, இந்தமுறை அவளிட்டை இல்லாத டிசையினில நானொரு பை வாங்கிக்குடுத்தால் சந்தோசப்படுவாள் எண்டு நினைச்சன். அண்ணை எனக்குச் சைக்கிள் வாங்க அனுப்பின காசிலை கொஞ்சம் மிஞ்சியிருந்தததால, இப்பவே வாங்கினாத்தான் காலமை விடியக்கு முதலிலை அவளின்ரை தலைமாட்டிலை வைச்சால், ஆள் நித்திரையால எழும்பிப்பாக்கேக்கில வலுத்தபுழுகம் கொண்டாடுவா எண்டு நினைச்சுக்கொண்டு  பான்ஸி ஸ்ரோருக்கு சைக்கிளைத் தூக்கிக்கொண்டு வெளிக்கிட்டன்.&lt;br /&gt;&lt;br /&gt;அம்மா, "இருட்டின நேரத்தில எங்கையடா போறாய்?" எண்டு கேட்டா. அவ சில விசயத்தில ஒரு புழுகு கொண்டோடி; தங்கச்சிக்காரிக்கு பாக் வாங்க மகன் போறான் எண்ட சந்தோஷத்தில, அவளிட்டைப் போய் இப்பவே சொல்லிப்போடுவா எண்டு எனக்குத் தெரியும். அதோட, "அவன் வந்தால், நான் சொல்லிப்போட்டன் எண்டும் சொல்லிப்போடாதை" எண்டும் சொல்லக்கூடிய ஆள். அதால, அவவிட்ட போற இடத்தைச் சொல்லுற பிளான் எனக்கு இல்லை. ஆனால், பதில் சொல்லாட்டி விடக்கூடிய ஆளில்லை அம்மா." ஒரு சினேகிதப்பொடியனிட்டை ரியூசன் கொப்பி வாங்கோணும்" எண்டு சொன்னன். எங்கட அயலுக்குள்ளை, பின்னேரங்களில, சினேகிதப்பொடியங்களிட்ட ரியூசன் கொப்பி வாங்கவெண்டு போன பொடியள் எல்லாம் இயக்கத்துக்கு ஓடிப்போறது அம்மாவுக்கு நல்லாத் தெரியிறதால, அவவின்ரை முகத்திலை, நல்ல பயமும் ஆத்திரமும். "உன்ரை அப்பா மட்டும் இந்த நேரம் வீட்டில இருக்கோணும்; காலுக்குக்கீழ நல்ல பூவசரம்தடியால விளாறியிருப்பார்" எண்டு பொருமினா. நல்லகாலம், அப்பாவும் வீட்டில இல்லை.  அவவைப் பாக்கப் பாவமாத்தான் இருக்கு. ஆனாலும், அவவுக்குச் சொல்லாமல், போனாத்தான் நான் நினைக்கிறமாதிரி விசயம் நடக்கும் எண்டு எனக்கு நல்லாத்தெரியும். "சும்மா இருங்கோ; நான் இயக்கத்துக்கு ஓடுற ஆளெண்டால், எப்பவோ ஓடியிருப்பனே; பெட்டை மாதிரி வளந்திருக்கிறாய் எண்டு எல்லாரும் பகிடி பண்ணப்பண்ண நான் ஊருக்குள்ளை உலாவிக்கொண்டிருக்கிறன்; எல்லாம் உங்களாலைதான்; நீங்களோ என்னவெண்டால், இயக்கத்துக்குப் போறன் எண்டு பயப்படுறியள்" எண்டு ஆத்திரமாக் கத்திப்போட்டுச் சைக்கிளை எடுத்துக்கொண்டு வெளியிலே கடைக்கு ஓடிப்போய்ச் சேரேக்கில, கிட்டத்தட்ட பன்ஸி ஸ்ரோர்ஸ்காரர் கடையை மூடிக்கொண்டிருந்தார். அம்மா, அந்த ஆத்திரத்திலதான் தொடர்ந்தும் நான் இரவு கதைக்கக் கதைக்க என்னை ஒரு பொருட்டாயே கருதாம, தன்ரை பாட்டுக்கு நான் தன்ரை சொல் கேட்கேல எண்ட ஆற்றாமையில அழுதுகொண்டு இருக்கிறா எண்டு எனக்குத் தெரிஞ்சுது. &lt;br /&gt;&lt;br /&gt;"தம்பி, அங்காலைப்பக்கம், பொடியள் ரெண்டு டிரக்கைக் கிளப்பிப்போட்டாங்களாம். இங்கை மார்க்கட்டுப்பக்கம் கொஞ்சம் பதட்டமாய்க் கிடக்கு. அதால, இண்டைக்குக் கொஞ்சம் வெள்ளனக் கடையைப் பூட்டப்போறன்; காலமை வந்து தேவைப்பட்டதை வாங்கிக்கொண்டு போமன்" எண்டார் முதலாளி. நாளைக்கு வாங்கலாமெண்டால், ஏன் இண்டைக்கு அம்மாவோட இவ்வளவு சண்டையைப் போட்டுக்கொண்டு ஓடிவரவேண்டும்? "நான் வாங்கப்போற பையைப் பள்ளிக்கூடத்துக்குப் போகேக்கையும் வரேக்கையும் கடைக்கண்ணாடிக்குள்ளால பாத்திருக்கிறதால, உடனையே வாங்கியிட்டுப் போயிடுவன்" எண்டு முதலாளியிற்றைச் சொல்லேக்கிள்ளை என்ரை குரலில்லை ஒரு பிடிவாதம் நிண்டிருக்கவேண்டும். அவர், அரை மனசாய் "ஒரு ஐஞ்சு நிமிசத்துக்குள்ளை வேலையை முடி" என்று சொன்னார். எனக்கு ஐஞ்சு நிமிசமும் தேவைப்படயில்லை. அவர் சொன்ன விலையைக் குடுத்து வாங்கி கொண்டு நான் கடைக்கு வெளியிலை வந்து லைற்போஸ்டிலை கட்டியிருந்த சைக்கிள் பூட்டைத் திறந்து கொண்டிருந்தபோது,   மூண்டு பச்சை ஜீப்புகள் சந்தியில வந்து சடின் பிரேக் போட்டு நிற்க, ஆமியுடுப்பில்லை குதிச்சவை, படபடவெண்டு சுத்திநிண்டு  சுடத்துடங்கினம். சனமெல்லாம் அங்கையும் இங்கையுமெண்டு கத்திக்கொண்டு ஓடுகினம். குண்டெல்லாம் என்னைத் துரத்துதேயெண்டு சைக்கிளை அப்பிடியே விட்டுவிட்டு பையை இறுக்கிப் பிடிச்சுக்கொண்டு ஓடத் தொடங்கேக்கை, ஆரோ என்ரை பெயரைச் சொல்லிக் கூப்பிட்டுக் கேட்டுது. &lt;br /&gt;&lt;br /&gt;பழகின குரலெண்ட ஈர்ப்பில, கொஞ்சம் நிண்டு திரும்பிப்பார்த்தால்,  மூண்டு வருசத்துக்கு முன்னால, ஆமியோ பொடியளோ ஆரெண்டு ஆள் தெரியாமல் சுட்டுச் செத்த எங்கட பகுதி விதானை- என்ரை அப்பா.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;'00, ஒக்ரோபர், 18.&lt;/em&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7096896-110892771673651639?l=punaivu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://punaivu.blogspot.com/feeds/110892771673651639/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7096896&amp;postID=110892771673651639' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7096896/posts/default/110892771673651639'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7096896/posts/default/110892771673651639'/><link rel='alternate' type='text/html' href='http://punaivu.blogspot.com/2005/02/blog-post_20.html' title='இன்று'/><author><name>-/பெயரிலி.</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='26' src='http://4.bp.blogspot.com/_OBFBfYawg8g/S8-wCagZnxI/AAAAAAAACCI/5ty9S8m_Ooc/S220/Abg_peyaB.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7096896.post-110871873778199731</id><published>2005-02-18T04:23:00.000-05:00</published><updated>2005-02-18T06:31:15.533-05:00</updated><title type='text'>செத்தவீடு*</title><content type='html'>"சும்மா அடைஞ்சுகொண்டுதானே இருக்கிறாய்; போயிற்று வாவனடா; உனக்கும் சனத்தைச் சந்திச்சதுமாதிரி இருக்கும்" என்று அம்மா சொன்னா. வதனிக்கு அவித்துத் தோலுரித்த உருளைக்கிழங்கு கொஞ்சம் உப்பும் மிளகும் தூவிப்போட்டு நசுக்கிச் சோறு பிசைஞ்சு கொண்டு 'குசினி'க்குள்ளிருந்து 'விறாந்தை'க்குக் கடந்த அக்கா போகிறபோக்கிலே "ஓமடா" என்றாள். கூரைக்குப் போட்டிருந்த 'அஸ்பெஸ்டஸ் சீற்'றுக்களின் அலைவளைவுக்குள் வலைகட்டிய சிலந்திகளைச் 'செற்றி'யிலே படுத்திருந்தபடி பார்த்துக்கொண்டிருந்தவன், "பாப்பம்." ~சித்திரைக்காண்டாவனத்து வெய்யிலுக்குள்ளேயும் சிலந்திகள் எப்படிச் சூட்டு அஸ்பெஸ்டசிலே வாழ்விடம் வைத்துக்கொண்டிருக்கின்றன?~ "என்னடா பாப்பம் பாப்பம் எண்டபடி? ஊரிலை இருக்கிறகாலத்திலை முந்தியெண்டால், வீட்டிலையே இருக்கமாட்டாய். காலிலை சக்கரம் பூட்டினவன்மாதிரி சைக்கி'ளிலை ஊரளந்துகொண்டு, சாப்பிட மட்டும் வீட்டுக்கு வாறது; வந்து சாப்பிட்ட கையோட வாசிக்க ஒரு புத்தகத்தை எடுத்துக்கொண்டு பாயிலை விழுந்தால், மூச்சுப்பேச்சில்லை. இருந்து அம்மா, அக்கா, தங்கைச்சி எண்டு எங்களோட கதைக்க நேரமில்லை. இப்ப என்னடாவெண்டால், வந்ததிலையிருந்து அடைக்கோழிமாதிரி வீட்டுக்குள்ளையே பதுங்கிக்கொண்டு.. அதுவும் ஆமிக்காரன் அட்டகாசம் கொஞ்சம் அடங்கிச் சனம் ஊருலகம் பாப்பமெண்டு வெளியாலை இழுத்த மூச்சை லேசாய் இறக்கி விடுற நேரம். செத்தவீடெண்டால் நாலைஞ்சு உன்ரை பழைய சிநேகிதன்மார் அறிஞ்சவங்கள் வருவாங்கள் எல்லே. போயிற்றுவாவன்ரா." "ம்ம்ம்ம்; பாப்பம்" ~சிலந்திக்குத்தான் அடிமண்டி வயித்திலை, தொடுற காலிலை சூடு தெரியாமற் கிடக்கட்டும்; இந்த எறும்புக்கென்ன 'விசர்'? சூட்டிலே கஷ்டப்பட்டு ஏறிப்போய், சிலந்தியிற்றை இந்தா 'பிடியெண்டு உயிரைக் குடுக்க?~&lt;br /&gt;&lt;br /&gt;"செற்றியுக்குள்ளை கிடந்து என்னத்தைப் பாக்கப்போறாய்? மோட்டிலை சிலந்தியும் நுள்ளானும் எப்பிடிப் பிடிபடப்போகுதெண்டோ?"&lt;br /&gt;&lt;br /&gt;"அதில்லை; அவங்கள் செத்தவீட்டுக்கு வந்து சொல்லயில்லை; கூப்பிடாத இடத்துக்குப் போய் முகத்தைக் காட்டினால், இவனாரடா எண்டெல்லே பாப்பாங்கள்?"&lt;br /&gt;- அமெரிக்காவிலே கூட நண்பர்களின் அறிந்த அறியாத நண்பர்கள் வீட்டிலே நடக்கும் நடனவிருந்துகளுக்குக்கூட போகும் நண்பர்கள் அழைத்தால் போவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;"எந்தக்காலத்திலை நீயிருக்கிறாய்? செத்தவீட்டுக்கு நோட்டிஸ் அடிச்சு, சனம் கூட்டிச
